ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2022

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது

ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.

இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.

உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.

ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.

இதற்கு பயிற்சி அவசியம் தேவை.

ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?

எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.

வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.

“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை...”

யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.

தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது

எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.

தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.

உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.

இது தான் மனிதனின் கடைசி நிலை.

அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.