ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2022

அகஸ்தியரையும் காணலாம்... ஈஸ்வரபட்டரையும் காணலாம்... துருவ நட்சத்திரத்தையும் காணலாம்... உங்களால் முடியும்...!

ஈஸ்வரா... என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

இப்பொழுது...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.

சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்

அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை... ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.

ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்... அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ... கேட்கின்றோமோ... அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை... ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்...
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்... பேரருளையும் பேரருளையும் பெற முடியும்...!

நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்... எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.

இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று... காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.

இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை... குறைகளைக் காண வேண்டியதில்லை.

சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்... துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்... அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்... அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.

இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.