ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2022

தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

அகத்தினை அன்பு கொண்டால்…
“ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

தங்க வந்த கூட்டினில்…
தரணி ஆண்ட வாழ்க்கையில்…
தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல்
“ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்…
பகவான் எங்கே உள்ளான்…? என்று
பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்…
உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

ஈசன் அருளில் உதித்த நாம்…
ஈன்றெடுத்த தெய்வமாக..
“ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…
ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே…
பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!”
நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.