ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2021

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் போது நீங்கள் சுவாசிக்க வேண்டிய அருள் உணர்வுகளும் அதனின் வழி முறைகளும்

 

இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது தீமைகளைச் சந்திக்கும் நேரங்கள் எல்லாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று எண்ணி
4.ஒவ்வொரு நொடியிலும் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆத்ம சுத்தி என்ற நிலை ஆகின்றது. அருள் ஞானியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆகவே இந்த மனிதப் பிறவியில் நல்லதை வளர்க்கும் நிலைகள் பெற்ற நாம் அடுத்து இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே சென்றால் கல்கி அவதாரம் என்ற நிலையை அடைய வேண்டும். கல்கி என்பது ஒளிச் சரீரம்.

1.எந்த மனிதனின் ஈர்ப்புக்கும் எந்த மிருகத்தின் ஈர்ப்புக்கும் செல்லாது
2.மெய் ஒளி செல்லும் பாதைகளில் நீங்கள் ஒவ்வொருவரும் சென்று
3.என்றும் பதினாறு என்ற ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

உடலை விட்டுச் சென்றால் எவரின் உடலும் நம்மை ஈர்த்திடாது எவரின் உடலுக்குள்ளும் நாம் சிக்க மாட்டோம். எதிலுமே நாம் சிக்காது அந்த அருள் ஞானியின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவா நிலை என்னும் அழியா ஒளி சரீரமாக பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

அதை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் பிரார்த்திக்கிறேன்... உங்களை ஆசீர்வதிக்கின்றேன் (ஞானகுரு).

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும்... நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்... அவர்கள் தொழில்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்...! என்ற எண்ணத்துடன் எம்மை அணுகினால் யாம் கொடுக்கும் ஆசீர்வாதம் நல்ல பலனைத் தரும்.

தீய உணர்வுகள் உங்களுக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்ற நிலையிலே தான் அருள் வாக்குகளை உங்களைப் பார்த்து ஆசியாகக் கொடுக்கின்றோம்.

1.ஆகவே ஆசி கொடுக்கும்போது சீராக நேராகப் பார்க்க வேண்டும்.
2.என் (ஞானகுரு) கையில் ஆசீர்வதிக்கும் போது இந்தக் கையிலிருந்து வெளிப்படும் உணர்வை நீங்கள் சுவாசிக்க நேர்கிறது.
3.அப்போது தீயது விளையாது தடுத்து நிறுத்த உதவும்

அந்த அருள் ஞானியின் சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எடுத்தால் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் அடிபணிகின்றது.

அதே சமயத்தில்
1.ஞானிகள் உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் வளர்ந்து
2.உங்கள் சொல்லும் உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணமும்
3.பிறிதொருவர் உங்களைப் பார்க்கும் போது இந்த உணர்வுகள் அவர் உடலிலே ஊடுருவி
4.உங்களுக்கு நண்பனாகவும் உதவி செய்வதாகவும் அமைந்து
5.பகைமையை நீக்கிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
6.பகைமையற்ற நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் வாழ முடியும்.

ஆகவே...
1.இந்த மனித வாழ்க்கையில் வரும் தீயவினைகள் எதுவானாலும் அது சந்தர்ப்பத்தால் ஏற்படுவது தான்.
2.மனிதனான நாம் அருள் ஞானியின் நிலையை இப்போது நமக்குள் சேர்ப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான்.

நாம் வாழ்க்கையில் பிறர் சண்டையிடும் போது நாம் அதைக் கூர்ந்து கவனிப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் சண்டையை ஊட்டும் உணர்வாக விளைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு அதைக் கடந்து சென்ற அந்த ஞானிகள் உணர்வுகள் தீமையற்ற உணர்வாக நமக்குள் விளைய வைத்து அகப்பொருளையும் புறப்பொருளையும் நாம் தெரிந்துணர்தல் வேண்டும்.

அப்படி உணரும் உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பெரு வீடு பெரு நிலைகள் அடைந்து என்றும் அழியா ஒளி சரீரத்தைப் பெறும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.