ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2021

உயிர் என்ற தாயால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் நாம்

 

நாம் எந்தெந்த எண்ணங்களை எடுக்கிறோமோ அந்த எண்ணமே நமக்குள் தாயாக இருக்கின்றது.

தாயாக இருக்கும் உயிர் தனக்குள் (உடலுக்குள்) வளர்த்திட்ட உணர்வின் அணுக்கள் அனைத்தையும் “காத்திட வேண்டும்…” என்ற உணர்வை தூண்டித் தூண்டி அதனின் நிலைகள் கொண்டு தான் ஒவ்வொரு உடலையும் காத்து… அதாவது தன் குழந்தையை காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தது உயிர் தான். உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை தான் நாம்.

தீமையில் இருந்து தன் குழந்தையைக் காத்துக் கொள்ள தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கின்றோம்.
1.நம்மைக் காத்திட தாய் தந்தையர்கள் கடந்த காலத்தில் ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
2.இப்போதுள்ள நமது தாய்மார்கள் தெய்வத்தை எண்ணித் தான் ஏங்குகின்றார்கள்.

இன்றைய மனித வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளைக் கூட்டுகின்றோமோ… தெய்வங்களை எண்ணி இந்தத் தெய்வம் என்னைக் காக்கும்…! என்ற நிலையும் மனித உடலில் உருவான இந்த ஆசையின் நிலைகள் கொண்டே எண்ணும் பொழுது மனித உடலின் செயலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

ஆகவே நமக்குள் தாயாக ஆக்க வேண்டிய முறை எது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானியிகள் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அடைந்தார்கள்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வின் தன்மையை அதை நாம் தாயாக எண்ணி
2.அந்த தாயின் அணைப்பிலேயே நம் உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்று
3.அதை தாயாகக் கருதி அந்தத் தாயின் அணைப்பிலேயே ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் குழந்தைகளை எப்படிக் காக்கின்றோமோ… நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு நாம் பரிவுடன் எப்படிச் செயல்படுத்துகின்றோமோ… பரிவற்ற குழந்தைகளை நாம் எப்படி ஒதுக்குகின்றோமோ அதைப் போலத் தான்
1.உயிருடன் ஒன்றி பரிவு காட்டும் அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அனைத்தையும் ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெற்று
3.தாயின் (உயிர்) அணைப்பின் உணர்வுகள் கொண்டு நமக்குள் தெளிந்து பின் தெளிவான உணர்வுளாக அது விளையும்.

நம் உயிரைத் தாயைப் போலவும்… கடவுளாகவும்… நம்மை ஆளும் ஆண்டவனாகவும் எண்ணி… எந்தக் குறைபாடுகள் வந்தாலும் அது நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும்.

எதை வைத்து…?

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இருக்கும் நம் ஆறாவது அறிவின் தன்மையைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறைபிடித்தான் என்ற நிலைகள் நமக்குள் உருவாக்கிக் கொடுத்த
1.தாயான நம் உயிரின் துணை கொண்டு
2.மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மெய் ஞானிகள்
4. ஒளியின் சரீரமாகி அவர்கள் வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை
5.அதை நாம் கவர்ந்து நமக்குள் வலுவாக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படுகிறோம்… சலிப்புப்படுகிறோம்.. வேதனைப்படுவோரையும் பார்க்கின்றோம்.

வேதனைப்பட்டவரைப் பார்த்தாலும்… அதை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு உயிரிலே பட்டு ஈசனுக்கு அந்தத் துன்பங்கள் வரும்போது தான் துன்ப்ப்படுகிறான் என்று அறிந்து கொள்கின்றோம்.

அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நம் உயிரான நிலைகள் கொண்டு அந்தத் தாயை அந்த ஞானிகள் தன் உணர்வின் தன்மை கொண்டு
2.தன் உயிரைத் தாயாக மதித்து… அதையே குருவாக மதித்து… அதையே ஆண்டவனாக மதித்து
3.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கப் பழகுவோம்.

உயிருடன் ஒன்றி அவனின் அணைப்பிலேயே என்றும் நிலையாக இருக்கும் அந்த அருள் ஞானிகள் வெளியிட்ட தீங்கினை நீக்கும் உணர்வினை நாம் பருகுவோம்… அதைத் தனக்குள் வளர்ப்போம்,

ஆகவே
1.ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயிரைத் தாயாக மதித்து…
2.மெய் ஒளியைப் பெறுவேன்… மெய் வழியைப் பெறுவேன்…
3.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன் என்று
4.ஆறாவது அறிவின் துணை கொண்டு உறுதியுடன் நாம் செயல்படுத்துவோம்.