ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2021

நல்ல வரன்… நல்ல பெண்… கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் தியானிக்க வேண்டிய சரியான நெறி முறை

 

ஒரு சில குடும்பங்களில் தன் பெண்ணிற்கு அந்தந்தக் காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
1.அடிக்கடி வீட்டிற்கு வந்து பெண்ணை விசாரித்துக் கேட்டு விட்டு அல்லது
2.பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்கின்றார்கள் என்று வேதனைப்படுவோர் உண்டு.

அத்தகைய வேதனையான உணர்வுகள் ஆன்மாவில் சேரும் பொழுது அதை மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்திக் கொண்டால் இது “பிராணாயாமம்…”

பிராணாயாமம் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளரச் செய்து நம் உடலிலிருந்து வெளி வரும் அந்த அருள் சக்திகளை வைத்துக் குழந்தைக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வேதனைப்பட்ட இந்த உணர்வைப் பிளக்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருளால் சீக்கிரம் என் குழந்தைக்குத் திருமணமாக வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்கு என் பெண் திருமணமாகிச் சென்றாலும் அந்தக் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
3.அருள் வழியில் ஆனந்தமான வாழ்க்கை அங்கே வாழ வேண்டும்
3.அத்தகைய அருள் சக்தி என் பெண்ணிற்குக் கிடைக்க வேண்டுமென்று தாய் தந்தையர்கள் எண்ண வேண்டும்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலுக்குள் பெற வேண்டுமென்று எண்ணும்போது அப்போது நமது உயிர் நரநாராயணன் ஆகிறது.

அதாவது நம் உயிரான நிலைகள் கொண்டு நரசிம்ம ரூபம் எடுத்து அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டுத் தன் குழந்தையின் எதிர்காலம் செழிப்புடன் இருக்க வேண்டுமென்று இந்த நினைவினைக் குழந்தை மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

இப்படிச் சிறிது நாளைக்குப் பாய்ச்சிப் பழகி விட்டால் அந்த குழந்தைக்கு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடப்பதைப் பார்க்கலாம்

அப்பொழுது நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் ஜீவன் பெறச் செய்து உங்கள் உடலுக்குள் அது ம்… என்று அணுவாக உருவாக்கத் தொடங்குகிறது.

இப்படி யாம் (ஞானகுரு) கொடுக்கும் அந்த அருள் வாக்கின் பிரகாரம் அந்த நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளும் போது அந்த மணம் உங்கள் ஆன்மாவாக மாறுகிறது.

அடுத்தவர்கள் உங்களைப் பார்த்தவுடனே உங்கள் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அந்த அருள் சக்திகளை இந்த அருள் உணர்வுகள் அவர்களுக்குப் பாயும்.

1.உங்கள் பெண் அது எவ்வளவு உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்… வாழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.இந்த உணர்வின் தன்மை பெண்ணைக் கேட்போரின் நிலைகள் அது புகுந்து
3.உங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பி
4.அவர்கள் ஏங்கித் திருமணம் செய்து கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்தில் நிச்சயம் பார்க்கலாம்.