ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2021

சகுணம் பார்க்க வேண்டுமா…? எப்படிப் பார்க்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும்…? என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை “அன்றே” நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு… அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
1.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
2.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

இன்று நாம் எல்லாவற்றையுமே பார்த்தாலும் நல்லதை நுகர்கின்றோமா...!