ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2021

தெய்வங்களுக்குப் பல பல வாகனங்களை ஏன் போட்டுள்ளார்கள் ஞானிகள்…?

 

கருப்பணசாமிக்கு முன் மோப்ப நாயை வைத்திருப்பார்கள். ஞானிகள் காட்டிய வழியில் அதனின் உட்பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்,

உதாரணமாக ஒரு நாயை யார் வளர்க்கின்றாரோ அவருக்குச் சாதகமாகத்தான் அந்த நாயும் இருக்கும்.
1.அவர் நல்லவராக இருந்தால் அவர் சொன்னபடி எல்லாம் அது செய்யும்.
2.அவர் போக்கிரித்தனம் செய்தால் மற்றவர்கள் தாக்க வந்தால் அவர் மீது உள்ள விசுவாசத்தின் நிலை கொண்டு
3.அவரைக் காக்க அந்தப் போக்கிரித்தனமான நிலைகளில் நல்லவரைத் தாக்க அந்த நாய் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் எடுக்கும் மோப்பங்கள் (சுவாசம்) சந்தர்ப்பத்திலே தீமையான உணர்வுகளைச் சுவாசித்து விட்டால் அந்த உணர்வுகள் அனைத்தும் நம்மை இருள் சூழச் செய்து...
1.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்
2.கொடூர நிலைகளுக்குப் பழி தீர்க்கும் உணர்வினை உருவாக்கும்.

ஆகவே... இருண்ட நிலைகள் வரும்போது மனிதனுக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது... நல்ல உணர்வுகளைக் கொன்று விடுகிறது... என்ற இந்த உணர்வினைக் காட்டுவதற்குத்தான் கருப்பணச்சாமிக்கு முன் வாகனமாக நாயை வைத்துக் காட்டியுள்ளனர் ஞானிகள்... கையிலே அரிவாளையும் வைத்துக் காட்டி இருப்பார்கள்.

நமக்குள் இயங்கும் ஒவ்வொரு குணத்தின் இயக்கத்தையும் உணர்த்துவதற்காக ஒவ்வொரு நிலைகளிலும் தெய்வத்திற்கு உருவங்கள் அமைத்து அதற்கு முன் வாகனங்களையும் ஞானிகள் அமைத்துள்ளனர்.

1.கடவுளின் அவதாரம் பத்து என்றாலும்
2.ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்குப் பத்து நாள் திருவிழா என்றாலும்
3.ஒவ்வொரு கோயில்களிலும் புலி வாகனம் அன்ன வாகனம் மயில் வாகனம் பரி வாகனம் சிம்ம வாகனம் என்று வாகனங்களை வைத்திருப்பார்கள்.

மாரியம்மனோ அல்லது காமாட்சியோ மற்ற தெய்வங்களோ அந்தந்த உணர்வின் குணங்களுக்கு
1.ஒவ்வொன்றும் தன் உணர்வின் தன்மை கொண்டு எடுத்து
2.அந்த உணர்வின் சக்தியை இணைத்து… அது ஒரு எண்ணமாக உருவாகி… அந்த எண்ணமே காக்கும் நிலையாகி
3.அது இப்படி ஒவ்வொன்றும் இணை சேர்த்து 1008 குணங்களாக மாறி
4/மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தது.

நாய் நரி பூனை இதைப் போன்று பல உயிரினங்கள் அது ஒன்றை ஒன்று விழுங்கினாலும் வலுவானவற்றிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு ஒரு அணுவின் தன்மையாக விளைந்து அடுத்த உடல் பெறுகின்றது.

1.அதன் வழிகளில் ஒவ்வொரு குணங்களையும் சிருஷ்டித்து
2.இப்படி மனித உடலுக்குள் 1008 குணங்களாக உருவானது என்று
3.1008 தெய்வங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இத்தகைய இயற்கையின் நிலைகளை உணர்ந்து நமக்குத் தெளிவாக வகுத்துக் கொடுத்தவன் அன்றைய மகா ஞானியான அகஸ்தியன் தான்