ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2021

நம்மைச் சுற்றி ஆன்மாவில் இருக்கும் வட்டங்கள்

 

உதாரணமாக ஒரு வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் அதிகரித்து விட்டால் அதனருகே ரோஜாச் செடியின் மணங்கள் சிறிதாக இருப்பினும் அதை விரட்டிக் கொண்டே போகும்.

அதே போல் ரோஜாச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அதனருகே வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் சிறிதாக இருந்தால் அதை இது துரத்திக் கொண்டே போகும். ஏனென்றால் ரோஜாவின் மணம் வலு கூடிவிடுகிறது.

இதே மாதிரித் தான் ஒரு விஷச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அருகே ரோஜாச் செடியின் மணம் இருந்தால் அதை விரட்டிக்கொண்டு போகும்.

ரோஜாச் செடியின் என்று சத்து அதிகரித்து விட்டால் விஷச் செடியின் மணங்கள் தன்னாலே ஓடிவிடும்.

1.தாவர இனத்தின் மணங்கள் வலு கூடிக் குறையும் போது ஏற்படும் இத்தகைய இயக்கம் போல் தான்
2.மனிதருக்குள் எடுத்துக் கொண்ட அந்தந்த குணங்கள் கொண்ட உணர்வுகளின் இயக்கமும் இருக்கும்.

உதாரணமாக பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. அது நமக்குள் பதிவாகி விட்டால் அந்த உணர்வை இழுத்து இழுத்து நம் ஆன்மாவாகப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அதாவது நம் ஆன்மாவில்...
1.முதல் வட்டம்
2.இரண்டாவது வட்டம்
3.மூன்றாவது வட்டம் என்று
4.அந்தந்தக் குணத்தின் உணர்வலைகளாக வரும்.

முதல் வட்டம் நல்லதாக இருக்கின்றது. இரண்டாவது வட்டம் ஒரு வேதனை என்ற கசப்பான உணர்வாக இருக்கின்றது. மூன்றாவது வட்டம் வெறுப்பான உணர்வுகளாக இருக்கிறது.

1.அப்போது வேதனை கோபம் என்று அது தான் முன்னாடி வருகின்றது.
2.அதைக் கடந்துதான் அந்த நல்ல உணர்வு நமக்குள் வரவேண்டும்.
3.இரண்டாவது வட்டம்... மூன்றாவது வட்டத்திற்குள் இருக்கும் வேதனை வெறுப்பு அவைகளுடன் கலந்து நாம் சுவாசித்தோம் என்றால்
4.நல்லதை நம்மால் சீராக இயக்க முடிவதில்லை.

அந்த வெறுப்பும் வேதனையும் கலந்தே பேசத் தொடங்குவோம். யாரிடம் பேசினாலும் என்னத்தைச் சொல்லி... யாருக்கு நல்லதைச் செய்து... என்ன பலன்...? என்ற இந்த உணர்வு முன்னாடி வரும்.

காரணம் நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும்... உள்ளே பதிந்திருந்தாலும்... நம் ஆன்மாவிலிருந்து இழுத்துச் சுவாசிக்கும் போது இடையில் இருக்கும் உணர்வுகளுடன் கலந்து வந்துவிடுகிறது.

1.நம் ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளில் ஒரு அடி வித்தியாசத்தில் இபபடி வந்து கொண்டே இருக்கும்.
2.இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது வேதனையும் கோபம் தான் அதிகமாக வரும்.
3.எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவைகளைக் கடந்துதான் வர முடியும்.
4.அதைக் கடந்து வரும் பொழுது அதுதான் இயக்குகின்றது.

சூரியன் பல விஷத்தன்மையுள்ள உணர்வுகளை எடுக்கின்றது. அதையெல்லாம் தன் முகப்பிலே மோதி ஒளியாக மாறுகின்றது... காந்தப் புலனாக மாற்றுகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைப் பிரித்து விடுகின்றது. ஆனாலும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அந்த அல்ட்ரா வயலட் என்ற நஞ்சுக்குள் புகுந்து தான் வெளியிலே வருகின்றது.

அந்த உணர்வின் சத்து எதுவோ எந்த மணத்தை இது தாங்கியதோ எதனுடன் தாங்குகிரதோ அந்த உணர்வின் குணம் கொண்டு தான் அதை இயக்கும்.

இதைப் போல தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு உள்ளுக்குள் இருந்தாலும் வேதனை வெறுப்பு கோபம் என்ற இந்த குணங்களை எடுத்தால் இது முன்னாடி வந்து விடுகின்றது.

அடுத்து நாம் நல்லதை எண்ணி வந்தாலும் ஆன்மாவில் பட்டு அதனுடன் சேர்த்து அந்த தான் வரும். இது உள்ளே நுழைந்து நமக்குள் எண்ணங்களாக வருவதற்கு முன்னாடி நல்ல குணங்கள் கார குணமாகவே வரும்.

அந்த மாதிரி நேரத்தில் யாராவது நல்லவர்கள் வரட்டும். கொஞ்சம் இனிமையாக அவர் சொன்னால் போதும்.
1.இன்றைக்கு இவர் நல்லது செய்ய வந்து விட்டாராக்கும்...!
2.எந்த எண்ணத்துடன் வந்திருப்பாரோ... யாருக்குத் தெரியும்...? என்ற அந்தக் குறையான எண்ணமே வரும்.

அதே போல் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம். கொஞ்சம் வெறுப்பாக இருந்தால்... டக்கென்று கையிலே இடித்துத் தான் கொடுக்க வைக்கும். இந்த உணர்வுகளைப் பார்க்கலாம்.

ஒரு பொருளைக் கொடுக்கும் பொழுதே
1.இந்தா...! என்று அழுத்தமாகச் சொல்ல வரும். கொடுக்கும் பொழுதே பார்க்கலாம்.
2.அந்த உணர்வுகள் எப்படி... அது என்ன எல்லாம் செய்கிறது...? என்று...!
3.நல்ல குணம் நமக்குள் இருந்தாலும் மற்ற உணர்வுடன் சேர்ந்து நம் உடலையே இப்படி இயக்கிக் காட்டும்.

அனுபவத்தில் பார்க்கலாம்.

இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் “சதுர்த்தி…” என்று வைத்தார்கள். தீமைகளை நாம் நிறுத்த வேண்டும்.

யார் மீதெல்லாம் நாம் வெறுப்பைப் பதிவு செய்து வைத்திருந்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்... நாங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வலுவாகத் தியானிக்க வேண்டும்.

1.அப்போது அந்த வெறுப்பான அணுக்களுக்கு நாம் சாப்பாடு கொடுப்பதில்லை.
2.வெறுப்பான எண்ணங்களை நீக்கி விடுகிறோம்.
3.எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றோம்.

நாம் எண்ணிய இந்த உயர்ந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில்
1.நமக்கு முன்பு இருக்கும் தீமைகளை விரட்டிச் செல்கிறது.
2.நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது... பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.