ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2021

கனவுகள் எப்படி வருகிறது…? - ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன.

காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு… அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாதபடி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.