ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2021

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பூமிக்குள் பட்டுப் பாறைகளாக ஆகும் போது எதிர்நிலையான மறைகள் ஆகி இதற்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அதிகமாக இணையுமேயானால் அது மற்றதை அடக்குகிறது.

மற்ற நட்சத்திரத்தின் கலர்கள் எதுவானாலும்…
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதனுடன் இணைக்கப்படும்போது
2.பூமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று மண்ணுக்குள் உருவாகிறது.

இதைப்போல மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலை வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை மூன்றும் மோதி தாவர இனச் சத்தாகக் கருவாகிப் பூமிக்குள் வருகிறது.

அதாவது பூமிக்குள் வரும்போது எதிர்நிலையான நிலைகளானால் கார்த்திகை நட்சத்திரத்தையும் ரேவதி நட்சத்திரத்தையும் மற்ற எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்தினுடைய நிலைகள் ஆகும்போது மூன்றும் மும்முனையாக இயக்குகிறது.

காரணம்… எதுவுமே மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம் காந்தம் விஷம் இது மூன்றும்
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலாகவும்
3.விஷம் மற்ற உணர்வின் தன்மையைத் துடிக்கச் செய்யும் விசையாகவும் இயக்குவது போல
4.நட்சத்திரத்தின் இயக்கம் தன் உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று மண்டலங்களாக இப்படி இயக்குகின்றது.

முதலிலே இது வெறும் கல் பாறைகளாக ஆனாலும் பாறைக்குள் இது மோதும் நிலைகள் கொண்டு உணர்வின் ஈர்ப்பு கிளரும் பொழுது தனக்குள் ஈர்க்கும் இந்தக் கருவின் மோதலுக்குள் மண்ணிலே மறைந்து அது கருவாக உருவாகிறது.

1.பின் இதற்குள் வடித்துக் கொண்டு வைரத்தின் நிலைகள் ஆகி
2.இதனுடைய வீரியத்தன்மை ஆனபின் வெடித்துவிட்டு முழுமை அடைந்தபின் இறக்கும் தன்மையாக வெளி வருகின்றது.
3.அதைத் தான் வைரங்களாக நாம் பார்க்கின்றோம்.

ஆக நட்சத்திரங்களின் விஷத்தன்மையான உணர்வுகள் இரண்டறக் கலந்து அது எவ்வாறு வைரங்களாக ஆனது…? என்ற நிலையைக் காட்டினார் குருநாதர்.

நட்சத்திரங்களின் மோதலையும் வான மண்டலத்தின் இயக்கங்களையும் அது எடுத்துக் கொண்ட நிலைகள் விண்ணுலகிலிருந்து பூமிக்குள் வரப்படும்போது
1.மற்ற பாறைகளின் தன்மைகளுக்குள் இது நுகர்ந்து கொண்ட நிலைகளும்
2.மண்ணுக்குள் மறைந்தாலும் இந்த உணர்வின் ஈர்ப்பால் அந்த மண்களிள் மாற்றம் ஆவதும்
3.அதற்கடுத்த நிலைகளில் இந்த மண்ணின் தன்மைகள் மாறுவதும்
4.அதற்குண்டான நிலைகளை ஈர்ப்பதும்… ஈர்த்த நிலைகள் கல்லாவதும்
5.அதற்குள் எதிர்ப்பு உணர்வுகள் கொண்டு தன் இனத்தை வளர்த்து அது வைரமாகி எப்படி வெடிக்கின்றது…? என்ற நிலையும்
6.அந்த உணர்வின் வளர்ச்சியின் ஈர்ப்பும் காந்தப் புலனறிவின் ஆற்றல் எவ்வாறு…? என்ற நிலைகளையும் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

ஏனென்றால்
1.வித்திலிருந்து செடியா… செடியிலிருந்து வித்தா…?
2.வைரம் எதிலிருந்து வருகின்றது…? வைரத்தின் ஆற்றல் எது...? என்ற நிலைகளைக் கண்டுணர்வதற்குத்தான்
3.ஒவ்வொரு பகுதிகளிலும் சென்று பார்க்கும்படி செய்தார்.

அந்தந்தப் பகுதியில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
1.தாவர இனச்சத்துக்குள் வரும்போது பாறைக்குள்ளும் அந்த நார் இந்த நார் என்று
2.பல பல சத்தின் தன்மையை அது எடுத்து தனக்குள் இந்த சத்து அதிகமாகி வெப்பத்தின் தன்மை வரும்போது
3.”கல் நார்…” என்ற நிலைகள் அது குமிழ்ந்து வெளி வருவதையும்
4.அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவோரும் வைத்தியத்தில் உண்டு.

இயற்கையின் செயலாக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).