ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2020

பிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”

 

ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தன் தாய் தந்தையரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்தாலும் அவன் இளம் குழந்தையாக ஐந்து  வயது இருக்கப்படும் பொழுதே தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.

அவர்கள் ஆன்மாக்கள் பிரியும் பொழுது தன் குழந்தையின் பால் நினைவைச் செலுத்தி அதே ஏக்கத்திலேயே பிரிந்ததால் அகஸ்தியன் உடலில் புகுந்து விட்டனர்.

அகஸ்தியன் உடலுக்குள் வந்த நிலையில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் எந்தெந்த வழியில் அவர்கள் தங்கள் செயல்களைச் செயல்படுத்தினார்களோ
2.அதை எல்லாம் அகஸ்தியன் உடலிலிருந்து அந்த உணர்வைப் பெறும்படி செய்து அந்த உடலை இயக்கினார்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ந்த நிலையில் பதினாறாவது வயதில்  திருமணமான பின் இருவரும் கணவனும் மனைவியுமாக நம் பூமியின் துருவத்தின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டார்கள்.

துருவத்தின் ஆற்றலைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு வளர்ச்சி அடைந்த பின்
1.அவர்கள் இருவரது ஆன்மாக்களும் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
2.அவருடைய தாய் தந்தை ஆன்மாக்களும் கலந்தே விண் செல்கிறது.
3.இப்படி நான்கு பேருடைய உணர்வுகள் கலந்து உருவானது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி நுகர்ந்தறிந்த ஆன்மாக்கள் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது ஒளியாகப் பெற்றவர்கள் துருவ நட்சத்திரதின் ஈர்ப்பு வட்டதிற்குச் சென்று என்றுமே ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலங்களாக” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இப்படி அந்த அகஸ்தியன் காலத்தில் அவனுடன் இணைந்த நிலையில் விண் சென்றவர்கள் ஏராளம்…!
2.அது தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் - சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பற்றுடன் வாழும் நிலையில் மனைவி மேல் பற்று கொண்ட நிலையில் கணவன் உடலை விட்டுப் பிரிந்தால்  மனைவியின் உடலில் சேர்ந்து இந்த உணர்வுகள் ஒன்றி வாழும்.

அதே போல் கணவன் மீது பற்று கொண்ட நிலையில் மனைவி உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா கணவன் உடலுக்குள் சேர்ந்து ஒன்றி வாழும்.

இப்படிப் பற்று கொண்டு வாழும் நிலையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானம் செய்து ஒன்று சேர்ந்தால் அடுத்து…
1.கணவன்/மனவியின் ஆன்மா பிரியப்படும் பொழுது
2.கணவனுடன்/மனைவியுடன் இணைந்தே சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
3.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்பட்டு
4.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
5.விண்வெளியிலிருந்து வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
6.என்றும் பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய முடிகின்றது.

கணவன் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மா மனைவியின் உடலுக்குள் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனின் உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரங்களைப் பெற்றுவிடுகின்றது.

ஆனால் இன்றைய வழக்கப்படி செய்யும் சாங்கிய சாஸ்திரங்களால் இந்த நிலையை அடைய முடிவதில்லை. பற்று கொண்ட நிலையில் மீண்டும் பிறவிக்கே வருகின்றது.  

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தோர் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானத்தில் இருக்கும் பொழுதும் சரி… அதிகாலை துருவ தியானத்திலும் சரி…
1.கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும்
2.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வது மிகவும் நலம்…!