ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2020

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!


கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.

அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.

எப்படி...?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.

தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.

இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.

இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.

1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.

நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!

நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.

மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.

தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.

வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.

பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.

நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிடவேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.

 ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.

அருள் ஞானியான அந்த நபிகளோ…
1.“தீமைகள் தனக்குள் வராதபடி…”
2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு
3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.

ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.