ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2018

நமக்கு எது மரியாதை…?


“பிறர் நம்மைத் திட்டுகிறார்கள்…! கேவலமாகப் பேசுகிறார்கள்..! என்றெல்லாம் நாம் எண்ணுகிறோம். அதனால் ஆத்திரப்படுகின்றோம்… வேதனையும் படுகின்றோம்.

ஆனால் “இந்த உடலைத்தான் திட்டுகிறார்கள்… கேவலப்படுத்துகிறார்கள்… நம்மை அல்ல…! என்று குரு சொல்கிறார்.

எப்படி…?

அதாவது மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொருவருமே மற்றவரிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பது என்ன..?

என்னிடம் “மரியாதையாகப் பேச வேண்டும்… மரியாதைக் குறைவாக நடக்கக் கூடாது…!. மரியாதை இல்லாமல் பேசினால்… ஏதாவது செய்தால் எனக்குக் கோபம் கடுமையாக வரும்…! என்று எல்லோருமே தாராளமாக இப்படித்தான் நினைப்போம்.

இருந்தாலும்… உடலை விட்டு உயிர் போய்விட்டால் இந்த உடலுக்கு நாம் எந்த மரியாதை கொடுக்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.உடனே அந்த உடலை அழிக்க வேண்டும் என்பதிலே தான் குறியாக இருக்கின்றோம்.
2.ரொம்ப நேரம் இறந்த உடலை வீட்டிலே வைத்திருக்கக் கூடாது என்பதை “மிகவும்…….! வலியுறுத்திச் சொல்கிறோம்.

யாராவது இல்லை என்று மறுக்க முடியுமா…? அப்பொழுது எங்கே செல்கிறது… “நாம் எதிர்பார்க்கும் நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை?!”

அதனால் தான் ஞானகுரு சொல்கிறார்…! ஒருவர் நம்மைப் பழித்துப் பேசவோ திட்டவோ தவறாகவோச் சொல்கிறார் என்றால்
1.அது என்னை அல்ல…!
2.அழியக் கூடிய இந்த உடலைத்தான் சொல்கிறார்கள்…! என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார்.
3.அழியப் போகும் உடலுக்கு எந்த மரியாதையும் தேவையில்லை. இது உண்மை.

ஆனால் கிடைக்காத அந்த மாரியாதைக்காக நாம் எவ்வளவு கௌரவம் பார்க்கிறோம்….? எப்படி எல்லாம் உடலை அழகு பார்க்கிறோம்…? உடலுக்காக இன்னும் என்னென்னவோ பல சிரமங்களை ஒவ்வொரு நிமிடத்திலும் படுகின்றோம்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் அதை உயிருடன் ஒன்றிய நிலையாக விளைய வைத்துக் கொண்டே வந்தால்
1.அதற்குரிய மரியாதை இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.அழியாத நிலையாக என்றுமே உயிருடன் ஒன்றி வாழ முடியும் என்று உணர்த்துகிறார் குரு.

உடலுக்குக் கொடுக்கும் அல்லது எதிர்பார்க்கும் மரியாதையை விட மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்ப்பதில் நமக்குக் கிடைக்கும் மரியாதையே என்றும் நிலைத்ததாகும்.

ஆகவே பிறரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது மரியாதை கிடையாது. மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்தால் தான் நமக்கு (உயிராத்மாவிற்கு) மரியாதை.