ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2018

ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்


சாமிகள் உபதேசம் (audio) கேட்பதைப் பெரும்பாலும் மற்றவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்றால்
1.கேட்க நேரம் இல்லை…! என்பார்கள்
2.எத்தனை தடவை கேட்டாலும் புரியவில்லை…! என்பார்கள்
3.நமக்குச் சம்பந்தமில்லாததை எல்லாம் சொல்கிறார்…! என்பார்கள்
4.அப்படியே கேட்டாலும் தூக்கம் வருகிறது… என்பார்கள்
5.கடைசியில் சொன்னதயே திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்பார்கள்.

ஆனால் என்னுடைய அனுபவத்தில் சாமிகளின் உபதேசத்தை (audio) உற்றுக் கேட்பதன் மூலம் தான்
1.எனக்குள் வரும் எல்லாக் கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும்
2.உடனுக்குடன் விடை கிடைக்கிறது.
3.கிடைத்துக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி காட்சியாகவும் உணர்வலைகளாகவும் வந்து கொண்டேயுள்ளது. மகா ஞானிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும் முடிகிறது.

உபதேச உணர்வின் இயக்கத்தால் மற்றவர்களின் உணர்வுகளோ அல்லது எற்கனவே நடந்த தீமைகளைப பற்றிய எண்ணங்களோ என்னை இயக்குவதில்லை.

ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக ஒரு புதிய மெய் உணர்வுடன் உத்வேகத்துடன் அருள் வழியில் முன்னேறிச் செல்லும் உணர்வுகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது.

சாமிகளின் உபதேச ஒலிகளுக்குள் அவ்வளவு பெரிய சூட்சம சக்திகள் மறைந்துள்ளது. சரியாகச் சொன்னால் ஞானிகளின் (அசைவுகள்) BODY LANGUAGE அதில் தான் உள்ளது.

ஞானியாக ஆக வேண்டும் என்றால் ஒலி உபதேசத்தை அவசியம் கேட்க வேண்டும். அதைக் கேட்க தனியாக என்று நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.
மற்ற வேலைகள் செய்து கொண்டிருக்கும் பொழுதே அதைக் கேட்டு எளிதில் நமகுள் வளர்க்க முடியும்.

சாமிகள் உபதேசத்தை நான் அதிகமாகப் பதிவாக்கும் நேரம்
1.காலை எழுந்ததிலிருந்து வேலைக்குச் செல்லும் அந்த ஒரு மணி நேரம் கேட்பேன்
2.அதன் பின் வேலைக்குச் செல்லும் வழியிலும் வீட்டுக்கு வரும் வழியிலும் ஒரு மணி நேரம் கேட்பேன். (HEAD SET மூலம் காதில் மாட்டிக் கேட்பேன்)

இந்தக் காதில் மாட்டிக் கேட்கும் பொழுது தான் மகரிஷிகளுடன் அதிகமான நெருக்கம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இது இன்று வரையிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

சாமிகள் “AUDIO WEB LINK” கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.