ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2017

“நாம் சுவாசிக்கும் உணர்வுகளால்” நரம்புகளுக்குள்ளும் எலும்புகளுக்குள்ளும் ஏற்படும் “இராசாயண மாற்றங்களும்” – டி.பி. நோயும்

சாதாரணமாக ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு இருக்கிறான் என்றால் அவன் எத்தகைய குணத்தை கொண்டிருந்தானோ உதாரணமாக வாழ்க்கையில் அடிக்கடி வெறுப்பும் வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் இப்படிக் கலவை கொண்டு எடுக்கப்படும் போது அதற்குத்தக்க நோய் வருகிறது.

1.அடிக்கடி “வேதனை என்ற உணர்வு எடுத்தால் டி..பி. வருகிறது.
2.அடிக்கடி “எல்லாக் குணங்களிலும் வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கி விட்டால் அது கேன்சராக மாறுகின்றது.

இந்த டி.பி. என்ற அணுக்கள் தனித்து எந்த உறுப்பில் நாம் பதிவாக்குகின்றோமோ நாம் ஊழ்வினை என்ற பதிவினை நாம் எலும்புக்குள் உள்ள ஊன்களில் இது பதிவாகி விடுகின்றது.

அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் நாம் எடுக்கும் உணர்வுகள் இரத்த நாளங்களில் அணுக்களாக மாறி அதன் உணர்வின் தன்மை “இரசாயணமாக மாறுகின்றது.

அது எலும்புகளில் வரப்படும் போது அதில் உறையச் செய்து அதில் வடித்து இந்த உணர்வுக்கொப்ப ஊழ்வினை என்ற ஒரு அமிலத்தை (எலும்புக்குள்) உருவாக்குகின்றது. கண் கொண்டு உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் அந்த ஊனுக்குள் பதிவாகின்றது.

எதை உற்றுப் பார்த்தோமோ எண்ணம் அந்த உணர்வுகளைத் தூண்டும் அந்த உணர்வினைப் பதிவாக்கி அதனை ஈர்க்கும் சக்தியாக உடல் முழுவதும் உள்ள எலும்புகளில் (அந்த இடத்தில்) வைத்து விடுகின்றது.

சற்றுக் கவனமாகக் கவனிக்க வேண்டும்.

மண்ணுக்குள் ஒரு செடியில் விளைந்த வித்தினை ஊன்றினால் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு எந்தச் செடியில் விளைந்ததோ அது எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்ததோ அதன் வழி அந்தச் செடியின் உணர்வுக்கொப்ப ரூபமாகின்றது.

இதே போல ஒரு குணத்தின் தன்மை இங்கே பதிவான பின்
1.வேதனை என்ற உணர்வை நாம் நுகரப்படும்போது
2.வேதனையை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து அது இரசாயணமாக மாறி
3.நரம்பு மண்டலங்களில் கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த இரசாயணக் கலவை நம் நரம்பு மண்டலங்களை அது இயக்குகின்றது.

இது சிறு மூளை பாகங்களில் நாம் எண்ணும் உணர்ச்சிக்கொப்ப அந்த இரசாயணக் கலவை அதன் அழுத்தத்தின் உணர்வின் அழுத்தங்களைக் காட்டும் போதுதான் கைகளை மடக்குவதும் மற்ற நிலைகளைச் செயல்படுவதும் இவை அனைத்தும்.

இப்படி இரசாயணக் கலவைகள் வரப்படும் போது அதனதன் அமைப்பு தன்மைப்படி வேதனை என்ற விஷத் தன்மை வரப்படும் போது இந்த எலும்பை அசைக்கும் நரம்பு மண்டலங்களிலிருந்து வரும் இரசாயணத்தில் அந்த விஷத்தின் அணுக்கள் உருவாகி விடும்.

வேதனை என்ற உணர்வின் தன்மை கொண்ட இரசாயணக் கலவையில் வரப்படும் போது இதனில் எதிர்மறையான விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.

சாதாரணமான நிலையில் இந்த எலும்புக்குள் இரசாயணக் கலவை ஊடுருவி அதை எடுத்து எலும்பின் வளர்ச்சியும் அதற்குப் போதுமான நிலைகள் கொண்டு வலு கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் உருவாக்கிய அந்த அணுக்களை வைத்துத்தான் அதன் மலம் எலும்பாகிறது.

ஆனால் அந்த இரசாயணக் கலவையில் வேதனை என்ற விஷ அணுக்கள் உருவாக்கி விட்டால் எலும்பை உருவாக்கிய அணுக்களை இது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.

இது விழுங்கத் தொடங்கினால் எலும்புக்கு வலு கொடுக்கும் அந்த அணுக்களின் மலங்கள் கிடைக்கவில்லை என்றால் எலும்பு சொத்தையாகி விடும். தொட்டால் கத்தரித்து விடும். இது போன் டி.பி. (BONE T.B.)

இதைப் போல வேதனை உணர்வுகள் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களில் வரப்படும் பொழுது மூளையில் டி.பி, கண்களுக்கு வரும் நரம்பு மண்டலங்களில் டி.பி. என்று காரணப்பெயர் வைக்கின்றார்.

இன்னென்ன அணுக்களின் செயலாக்கங்களால் இந்த அணுக்கள் மற்ற அணுக்களைக் கொன்று சாப்பிடுகின்றது என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

விஞ்ஞான அறிவுப்படி டி.பி. அணுக்களைக் கொல்லும் போர் முறைக்காக அதைக் காட்டிலும் அதிகமான அணுக்களைச் சேர்த்து பல கலவைகளைச் சேர்த்து (3-4 மாத்திரைகள) அதை உணவுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

அதே சமயத்தில் இரத்த நாளங்களில் இஞ்சக்சன் மூலம் கலக்கச் செய்கின்றனர். அல்லது நேரிடையாகவே அமில சக்தி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு ஆசிட் போன்றவைகளைச் செலுத்தச் செய்கின்றார்கள்.

அப்பொழுது அந்த எலும்புகளில் உள்ள அந்த விஷத்தன்மையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்துகின்றனர்.

தடைப்படுத்தினாலும் அதனுடைய கொடுமையான உணர்வுகள் நாம் சிறுகச் சிறுக வேதனையின் உணர்வுகள் எடுத்திருந்து மற்றவைகளுக்கு இணைத்து அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அறிவை ஊட்டும் நிலையில் இது மடிந்து விட்டால் சிந்தனை மாறி விடும்.

இதற்காக இந்தச் சிந்தனையின் நிலையை வைத்து இன்னென்ன உறுப்புகளில் இன்னென்ன இராசாயணக் கலவை கொண்டு இயங்குகின்றது என்று காண்கின்றனர்.

விஞ்ஞான அறிவுப்படி ஈரல் என்றால் அதற்குச் சத்து கொடுப்பதற்காக மற்ற தாவர இனங்களைப் புசித்து அந்த நிலையில் நல்ல அணுக்கள் உருவாக்கும் தன்மையை ஆரம்பத்தில் கொண்டு வந்தார்கள்.

இப்பொழுது நேரடியாகவே மாட்டு இனங்களில் இருந்தோ ஆட்டு இனங்களில் இருந்தோ மனிதனுக்கொத்த உணர்வுகள் கலந்த அந்த ஈரலை மற்ற இராசாயணக் கலவையைக் கொண்டு அதைப் பவுடராக்குகின்றார்கள்.

அந்தக் கலவைகளை இஞ்சக்சன் மூலமோ உணவு மூலமோ உட்செலுத்தி நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றார்கள்.

ஆக, எலும்பை உருக்கும் அணுக்களிலிருந்து மீட்க மருந்துகளினால் அந்த அணுக்களை உருவாக்கி இதனைக் கலந்து மற்ற அணுக்கள் செத்து விடாது அதற்குகந்த உணர்வின் சத்தைச் சேர்க்கின்றனர்.

இன்னென்ன நிலைகளில் இன்னென்ன உறுப்புகளுக்கு அது பாதிக்காத நிலைகள் கொண்டு இந்த இஞ்சக்சன் செய்கின்றார்கள்.

இதையெல்லாம் நான் பேசுகிறேன் என்றால் விஞ்ஞான அறிவில் படித்தவன் அல்ல. மெய்ஞான அறிவை ஊட்டி அந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்று குரு காட்டிய அருள் வழியில் தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.

1.காற்றில் கலந்துள்ள உணர்வை நீ நுகர்ந்து
2.உணர்வின் தன்மை அறிந்து
3.அந்த இயற்கையின் செயலாக்கங்களை நீ அறி
என்று குருநாதர் சொன்னார்.

அவர் கொடுத்த அருள் ஞான வித்தின் துணை கொண்டுதான் இயற்கையின் விளைவு அது எவ்வாறு என்ற நிலைகளில் நான் அறிய முடிகின்றது.

இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் தன் வளர்ச்சியில் நாம் சிறிது காலம் வாழ்வதற்காக வேண்டி இந்த உடலைக் காக்க எவ்வளவோ பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

ஆனால், மெய்ஞானிகளோ விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைவதே மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் அடைய வேண்டிய எல்லை.