ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2017

உங்கள் கண்களுக்கு யாம் கொடுக்கும் சக்திகள்

உங்கள் வாழ்க்கையில் வரும் இன்னல்களை எளிதில் மாற்றிக் கொள்ளலாம். எளிதில் மாற்றிக் கொள்ளும் உபாயத்தைத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

எப்படிக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனரோ இதைப் போல உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

உங்கள் கண்ணில் உள்ள கருவிழி விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது
1.தீமை நம்மை எப்படி இயக்குகின்றது?
2.தீமையிலிருந்து எப்படி மீள வேண்டும்? என்ற ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்று செல்ஃபோன்களை வைத்துள்ளார்கள். அதிலே அந்த நம்பரை யார் அழுத்துகின்றார்கள் என்று தெரிந்து கொள்கின்றோம். இதைப் போல நாம் எங்கெங்கேயோ இருக்கக்கூடிய இடங்களுக்கு எல்லாச் செய்திகளையும் படங்களையும் காட்சிகளையும் அனுப்புகின்றோம்.

Electrical wire எதுவும் கிடையாது. அது இல்லாமலே செய்திகளை அனுப்புகின்றோம்.

ஆகவே, சூரியனிலுருந்து வரக்கூடிய காந்தப் புலனறிவு இதை மோதச் செய்து நாம் அனுப்புவதை அங்கே இருக்கக்கூடியவர்களைத் தெளிவாக்குகின்றது.

இந்த விஞ்ஞான அறிவு கொண்டு இதைச் செய்கின்றார்கள். இதைப் போன்றுதான்
1.யாம் உபதேசிக்கும் மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை
2.உங்கள் விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கிவிட்டால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுதெல்லாம்
4.அது உங்களுக்குள் எளிதில் கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொள்வதற்கு இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதெல்லாம் உங்கள் அம்மா அப்பாவை எண்ணி ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தினால் அந்த அணுக்களுக்கு நேரடியாகச் சக்தி கிடைக்கின்றது.


உங்கள் வாழ்க்கையில் தெளிந்து வாழ்ந்திட மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும். எமது அருளாசிகள்.