ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2015

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் - அகஸ்தியனும் அவன் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை

பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வரும்பொழுது அவை தோஷங்களாக மாறுகின்றது.

அதனை நீக்குவதற்காக பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்
மின்கதிர்களின் உணர்வுகளை
நட்சத்திரங்களில் வரும் ஒளிக் கதிர்களை எடுத்து,
அதைக் கருக்கி உணர்வை ஒளியாக மாற்றி
உணர்வின் தன்மையைத் தான் பெற்றான் அகஸ்தியன்

அகஸ்தியன் தான் பெற்ற உண்மையின் உணர்வின் தன்மைகள் அனைத்தையும் தன் மனைவிக்கு அந்த உண்மையின் இயக்கத்தை எடுத்துச் சொன்னான்,

அகஸ்தியன் தனக்குள் நஞ்சை வென்றிடும் உணர்வின் வலிமை கொண்டு 27 நட்சத்திரங்கள் கவர்ந்து வரும் அலைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒளிக் கற்றைகளாகப் பரப்புவதை அவன் நுகர்ந்தான்.

தனக்குள் இந்த உயிரின் துடிப்பு எப்படி வருகிறது என்பதை அகஸ்தியன் அறிந்து கொண்டான்.

நட்சத்திரமாகி உயிரின் துடிப்பானதோ இதைப் போல, அவன் உடலுக்குள் இருக்கும் நிலை உயிரைப் போன்றே வலுக் கொண்ட உணர்வின் நிலையும், தீமைகள் புகாத நிலையும் பெற்றவன் அகஸ்தியன்.

அணு என்ற துடிப்பு வரப்ப்படும் பொழுது இதே நட்சத்திர உணர்வின் துடிப்பு தான்.

அந்த நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து சேர்த்து உயிர் எப்படி முழுமையாகி மற்றவைகளை உருவாக்குகின்றதோ, ஆக இதைப்போல இந்த ஒளியின் உணர்வினை
இந்த நட்சத்திரங்களின் உணர்வினை
ஒளியாக மாற்றும் தன்மையினைப் பெற்றவன் அகஸ்தியன்.

அந்த உண்மையின் உணர்வினைத் தன் மனைவிக்குச் சொன்னான் – செவி வழி. உணர்வினை ஏங்கிப் பெற்றது மனைவி – கண் வழி.

அவன் கண்டுணர்ந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுவதை
அவளும் உணர்ந்தாள்;
உயிரிலே இணைத்தாள்;
உணர்வின் தன்மையை அறிந்தாள்;

அறிந்த உணர்வுகள் கணவனால் அறிந்தேன். அந்தக் கணவன் மேலும் உயர வேண்டும் என்றும், அறிந்த பின் சொல்லும் பொழுது என் மனைவி பெற்றாள், அவள் உயர வேண்டும் என்ற உணர்வினை ஊட்டினான்.

இப்படி இரு மனமும் ஒன்றினர்.
இரு உணர்வும், இரு உயிரும் ஒன்றாக இணைத்தனர்.
ஒன்றாக இணைத்து ஒளியின் கற்றையாக உருவாக்கும் ஜீவத்தன்மை பெற்றனர்.

உயிரின் துடிப்புக்குள் வரப்படும் பொழுது வெப்பம், விஷ்ணு. ஈர்க்கும் காந்தம், லெட்சுமி. இரண்டும் சேர்ந்து உணர்வின் தன்மை உருவாக்கும், ஈசன். உருவாக்கும் தன்மை வரும்பொழுது ஒன்றை உருவாக்கிவிட்டால் பிரம்மா.

எந்த குணத்தின் தன்மையை பிரம்மா உருவாக்கியதோ, அந்த உணர்வின் தன்மை அதன் மணம் சரஸ்வதி, ஞானம். எந்த குணத்தின் தன்மை பெற்றதோ உணர்வின் தன்மை உடலாகும் பொழுது, சிவம்.

சிவத்துக்குள் இந்த குணத்தின் சக்தியாக அந்த உடலை இயக்கும். அந்த மணத்தின் உணர்வாக இந்த உடலை இயக்கும்.

அந்த மணத்திற்கொப்ப அந்த உணர்வின் இயக்கமாக உடலின் அமைப்பு. ஆக குணத்தின் செயலென்ற நிலைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, நமது சாஸ்திரங்களில். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிவன் எங்கேயோ இருக்கின்றான்; ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

நாம் எண்ணியதை உருவாக்கும் உயிர் ஈசனாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை சிவமாக நம் உடலும் சிவமாகின்றது. சிவத்துக்குள் வினையின் இயக்கமாக இருப்பது எக்குணமோ அம்மணத்தின் ஞானமாக நம்மை இயக்குகின்றது.

ஆகவே நமக்குள் எண்ணியதே பிரம்மமாகின்றது, அதுவே நம்மை உருவாக்குகின்றது.
“எண்ணியதைத் திரும்பவும் எண்ணினால்
அதுவே நமக்குள் குருவாகின்றது
“அந்த உணர்வைச் செயலாக்கும் பொழுது
அதுவே தெய்வமாகின்றது"
என்று அன்று அகஸ்தியன் தெளிவாகக் கூறினான்.

ஆக இதனின் தன்மையைத் தன் மனைவிக்குச் சொல்லப்படும் பொழுது ஏற்று உணர்ந்தாள்; நுகர்ந்தாள்; நுகர்ந்த உணர்வுகளோ அது பதிவானது.

ஆகவே இவன் கண்ட உண்மை மனைவிக்குள் பதிவாகின்றது. கணவன் அதைப் பெறவேண்டும்; மனைவி அதைப் பெறவேண்டும் என்று இரு உணர்வும் எடுத்தனர்.

இந்த உடல் இனி உடல் பெறாது. வானில் தோன்றும் மின்னணுக்களைத் தனக்குள் உயிர் எப்படித் துடித்ததோ, இதைப்போல அதை உருவாக்கும்;
இரு மனமும் ஒன்றானது;
இரு உயிரும் ஒன்றானது;
இரு உணர்வும் ஒன்றானது.

அப்படி உருவாகித்தான் எந்த துருவத்தை ஏங்கி இருந்ததார்களோ அந்த எல்லையில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் துருவனாக இருக்கப்படும்பொழுது,
தாவர இனங்களையும் மற்றவைகளையும் உணவாகப் புசித்து,
மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்காது,
தாவர இனங்களை வேக வைத்து விஷத்தினை அடக்கி
இயற்கையிலிருந்து மாறாது,
அதன் இனத்தைத் தனக்குள் பெருக்காது,
அந்த உணர்வின் குணத்தை நமக்குள் வராது,
சுவைமிக்க நிலைகளில் உருவாக்கி,
உணர்வின் தன்மை எண்ணத்தால் மகிழ்ச்சி பெறும்
உணர்வினை உருவாக்கினான் - துருவன்.
அவ்வாறு உருவாக்கியவன் துருவ மகரிஷியானான்.

ஆகவே கணவன், மனைவி இரண்டறச் சேர்க்கும் பொழுது ரிஷி. “ரிஷி பத்தினி என்ற நிலைகள் உருவாக்கப்பட்டு உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டான்.

இதையெல்லாம் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால், இவை காலத்தால் மறைந்துவிட்டது.

நீங்கள் அகஸ்தியனின் சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும், அவனும் அவன் மனைவியும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை கணவன் மனைவி நீங்கள் வாழவேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.