ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2015

முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்

குருவின் துணையால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்.

உயிருடன் ஒன்றி நினைவினை சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் அருங்காட்சி (மனக் கண்ணால்) நீங்கள் காணலாம். சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உயிரின் துணைகொண்டு சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வினை விண்ணை நோக்கிச் செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் ஏங்கிப் பெறுங்கள்.

எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி, உங்கள் உடலிலுள்ள ஜீவணுக்களுக்கு உணர்வினை ஊட்டுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து ஏங்கித் தியானியுங்கள்.

கணவனின் உடலிலிருந்து ஆன்மா பிரிந்தாலும்
அவரின் உணர்வு உங்கள் உடலிலே உண்டு.

மனைவி உடலை விட்டுப் பிரிந்தாலும்
அவரின் உணர்வு உங்கள் உடலிலே உண்டு.

அந்த உணர்வின் துணை கொண்டு கணவரின்/மனைவியின் உணர்வுகள் அருளொளி பெற வேண்டுமென்று ஏங்கினால், உங்கள் இரு மனமும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

ஆக இவ்வாறே உங்களுடன் அவரின் உணர்வு ஒன்றியே வாழ்கின்றது.

அவர் உடலை விட்டுப் பிரிந்தாலும்
அந்த உணர்வின் தன்மையை இணைத்தால்
அவர் ஆன்மா என்றும் உங்களுடன் இணைந்து
ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியைப் பெறும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலைவிட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த ஆன்மாக்களை உந்தி விண் செலுத்துங்கள்.

எங்கள் முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

நாம் இதற்கு முன்பு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை இப்பொழுது அகக் கண்ணால் உணரலாம்.

அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை அகக் கண்ணால் பார்க்கலாம்.