ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2015

மெய்ஞானியின் உணர்வை நாம் குரு பலம் கொண்டு பருக வேண்டும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் எம்மை ஆட்கொண்டு எமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைப் பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.

குருநாதர் எம்மை முதலில் சூரியனைத்தான் பார்க்கச் சொல்லியிருந்தார். சூரியனைப் பார்க்கச் சொன்னபோது சூரியன் எப்படி உருவானது, எப்படி பாதரசத்தை அது உருவாக்குகின்றது? என்ற நிலைகளையெல்லாம் யாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஆரம்பக் காலத்தில் யாம் தியானவழி அன்பர்களை சூரியனை எண்ணித்தான் சுவாசிக்கச் சொன்னோம். அன்றைக்கு சூரியனிலிருந்து அதிகமாகக் கதிரியக்கங்கள் வெளிப்படவில்லை.

ஆனால், மனிதர்கள் செய்த கதிரியக்க வேலைகள் சூரியனுக்குள் சென்றுவிட்டது. அதனால் சூரியன் இன்று கரும் புகைகளை வெளிவிட்டுக் கொண்டுள்ளது. கரும்புள்ளிகள் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள்.

கரும் புகைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூரியனை நாம் பார்த்தோம் என்றால் நம் உடலில் விஷத்தன்மைகள் வந்துவிடும். ஆகையினால் குருநாதர் காண்பித்த அருள்வழியில் சூரியனை விட்டுவிட்டு துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கச் சொன்னோம்.

அதே சமயம 27 நட்சத்திரங்களை எண்ணி தியானிக்கச் சொன்னோம். 27 நட்சத்திரங்களின் சக்தியை யாம் நேரடியாக எடுத்துக் கொள்வோம். எமக்குள் எடுத்துக் கொண்ட அந்த நட்சத்திர அலைகளின் உணர்வை 27 நட்சத்திரங்களை எண்ணி தியானிப்பவர்களுக்குப் பாய்ச்சுவோம்.

யாம் சொன்னது போன்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்குத் தொந்தரவில்லை. அதை விடுத்து நீங்கள் நேரடியாகச் சென்றால் உடலில் அரிப்பு வந்துவிடும். எதிர் நிலையாகிவிடும்.

ஆரம்பத்தில் பவானியில் சிலர் எம்மை விட்டுவிட்டு நட்சத்திரங்களை எண்ணி தியானித்தார்கள். பவானியிலிருந்து யாம் வெளியிலே வந்தபின், யாம் சொன்னோம் என்று சொல்லி நட்சத்திரங்களை எண்ணி தியானிக்கச் சொல்லியுள்ளார்கள். அப்படித் தியானித்தவர்களில் நிறையப் பேருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.

யாம் நட்சத்திர அலைகளை எமக்குள் எடுத்து அதன் வீரியத்தைத் தணித்து உங்களுக்குச் செலுத்துகின்றோம்.

ஆகவே யாம் உங்களிடம் சொல்லிப் பதிவு செய்த உணர்வு கொண்டு நீங்கள் தியானித்தீர்கள் என்றால் எம்முள் விளைந்ததை நீங்கள் எடுக்க முடியும். உங்களுக்குத் தொல்லை கொடுக்காது.

தீமைகளையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம் அதனால்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் அடிக்கடி சொல்லி செல்ஃபோன்களில் பதிவு செய்வது போன்று உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

இதனின் நிலை அதிகமாக அதிகமாக உங்களுக்குள் பேரருள் உணர்வுகள் அதிகரித்து வரும்.

ஆகவே, மெய்ப்பொருள் கண்ட மெய்ஞானியின் உணர்வை நாம் பின்பற்றி நமக்குள் ஆட்சி புரியும் நஞ்சினை வென்று, அந்த நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்ற மெய்ஞானியின் உணர்வை நாம் குரு பலம் கொண்டு பருக வேண்டும்.

குருவின் துணையால் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
குருவின் துணையால் மகரிஷிகளின் அருள் வழி செல்வோம்
குருவின் துணையால் மெய்வழி செல்வோம்
குருவின் துணையால் மெய்ப் பொருளை அடைவோம்
குருவின் துணையால் நாம் விண் செல்வோம்.