ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2015

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒளிவட்டத்தைப் பாதுகாப்புக் கவசமாக்கிக்கொள்ளுங்கள்

குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

உயிரின் துணைகொண்டு துருவ நட்சத்திரத்தின்பால் இணைந்து துருவ நட்சத்திரம் வேறல்ல, நாம் வேறல்ல என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தோடு ஒன்றுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி முக்கண் என்ற உணர்வினை துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அதனின்று வெளிப்படும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. பேரருள் பேரொளியை நாம் நுகர்வோம்.

இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்.
உயிருடன் ஒன்றிய உணர்வினையும் பேரருளையும் பேரொளியையும்
(அகக் கண் கொண்டு) நீங்கள் காணலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்வினை நீங்கள் இப்பொழுது அகக்கண்ணால் பார்க்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை இப்பொழுது அகக்கண்ணால் நீங்கள் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்,
எங்கள் இரத்த நாளங்களில் கலந்து,
எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும்,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று,
உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி,
கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
உடலிலுள்ள ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறும். அந்த உணர்வின் மணம் வெளிவரும் பொழுது உங்கள் உடல் முழுவதும் ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று பேரருளின் ஒளிவட்டத்தை நீங்கள் காணலாம்.
தீமைகள் உங்கள் ஆன்மாக்குள் புகாது
பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக அமையும்.

உங்கள் உடல் முழுவதும் ஒளிவட்டம் இருப்பதை அகக்கண்ணால் இப்பொழுது நீங்கள் உணரலாம்; பார்க்கலாம். இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி  கணவன் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் படர்ந்து கணவர் உடலிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உணர்வினைச் செலுத்தி, பேரருள் பெற வேண்டுமென்று கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டுமென்று ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவணுக்கள் அனைத்தும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
இரு உணர்வும் ஒன்றி , இரு உயிரும் ஒன்றி, இரு மனமும் ஒன்றி,
பேரொளி என்ற உணர்வினை நீங்கள் உருவாக்குங்கள்.

உங்கள் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக கருவாக உருவாக்குங்கள்.

எங்கள் தாய் தந்தை உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் அன்னை தந்தையர் பேரருள் பேரொளி பெற்று அவர்களின் அருளாசியால் எங்கள் வாழ்வில் பொருளறியும் திறன் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.