ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2013

தீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று தான் எல்லா ஞானிகளும் சொல்லியுள்ளனர்

1. தன் நாட்டைக் காக்க, மனிதன் உருவாக்கியுள்ள அணு ஆயுதங்கள்
இன்று உலக அளவில் தன் மதத்தைக் காக்க வேண்டுமென்ற நிலையில் பல கொடூர ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.
அது எந்த நிமிடத்தில் வெடிக்கும் என்று
யாருக்கும் தெரியாது.
இவர்களும் வெடிககச் செய்ய வேண்டியதில்லை.

அந்த ஆயுதங்களை எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்று ஒரு கம்ப்யூட்டரை நிர்ணயித்து அதன் பாதுகாப்பில் வைத்துள்ளார்கள்.

ஆக, எலக்ட்ரான் என்ற முறை வைத்து, பல எதிர்ப்பு தீமைகள் தாக்கப்படும்போது உடனே மாற்றி அதைச் சமப்படுத்தும் எந்திரங்களை அமைத்து, பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

அந்த கம்ப்யூட்டர், உணர்வுகள் உராய்வதற்குத் தக்கவாறு கடினமானால் உடனே சமப்படுத்தும், சமப்படுத்தும் நிலை தாழ்வடைந்தால் அடுத்த நிமிடம் சமமான நிலைக்குக் கொண்டுவரும்.

இத்தகைய பாதுகாப்பான நிலைகள் வைத்திருப்பினும்,
இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிரியக்கங்கள்
வான்வீதியில் வீசிய உணர்வுகள்
அது கடுமையான நிலைகள் வருகின்றது.

இதை நாளடைவில் சூரியன் ஈர்க்கும் நிலைகள் வரப்படும் பொழுது, எப்படி பூமியில் கதிரியக்கப் பொறி ஒரு இரும்புக்குள் தாக்கியவுடன் அந்த கதிரியக்கப் பொறியால் இரும்பு உருவானாலும், இந்த உணர்வுகள் தாக்கப்படும் பொழுது அந்த இரும்பே உருகுகின்றது. ஆக, புயல் போல கிளம்புகின்றது. மற்றொன்றைத் தாக்கி அழிக்கின்றது.
2. அணுக்கதிரியக்கங்கள் நம் பிரபஞ்சம் முழுவதும் பரவிவிட்டது
இதைப் போன்ற நிலைகள் விஞ்ஞான அறிவால் செயல்பட்ட இந்த உணர்வுகள் வான்வீதியில் தூவிய இந்த கதிரியக்கப் பொறிகள், சூரியனால் கவரப்பட்டு, மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து வளர்ச்சி பெற்றுவிட்டது.

இப்படிக் கலந்த நிலைகள் கொண்டு இன்று சூரியனை அது அணுகி, அந்த உணர்வின் பொறிகளை மின் கதிர்களாக மாற்றும் நிலை வந்துவிட்டது.

இன்று சிறிதளவு உள்ள கதிரியக்கத்தை வைத்து, பலமான நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டுகின்றான். சிறிதளவே கைக்குள் அடங்கும் பொறிகளை வைத்து அணு மின் நிலையங்களை உருவாக்கி, மின்சாரத்தை உருவாக்குகின்றான்.

அதே சமயத்தில் கடினமான பல இயந்திரங்களையும் சிறிதளவே உள்ள கதிரியக்கப் பொறிகளை வைத்து இயக்குகின்றான். ஆக, இப்படி இயக்கினாலும், அதிலிருந்து வந்த கசிவுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் வைத்துள்ளது.

இதைப் போல பரிசீலனை என்ற பெயரில் வான் வீதியில் வெடித்த அணுக்கதிரியக்கங்களும் பிரபஞ்சத்தில் பரவி மற்ற கோள்களிலும் கலந்துவிட்டது.

அது உமிழ்த்தும் உணர்வுகள் சூரியனுக்கு அருகில் வரப்பட்டு, அதிகமாக மின் கதிரியக்கங்கள் வரும் பொழுது, காந்த்ப்புலனறிவு இயக்கம் கொண்டு, சம அளவாக நாம் இருக்கும் நிலைகளில் ஆக, சூரியனால் உருவாகும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப்பொறிகள் அதிகமாகிவிட்டால், எலக்ட்ரான் என்ற நிலைகள் மிகத் துரிதமாகச் செயல்படத் தொடங்கிவிடும்.

ஆக, எங்கே இதைப் பதிவு செய்துள்ளார்களோ
(ஆயுதங்களைப் பாதுகாக்கும் கம்ப்யூட்டர்)
பதிவான நிலைகள் அனைத்தும் கருகிவிடும்.
ஆக, அதனுடைய செயலை அது இழந்து விட்டால்
பாதுகாப்பாக உள்ள நிலைகள்
(அணு ஆயுதங்கள்) எந்த நிமிடமும் வெளியேறலாம்.

இன்று நாம் ஆசை கொண்டு வளர்த்தாலும், நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சேமித்து வைத்தாலும், பாதுகாப்பாக வைத்த அந்த நாடே அழியப்போகின்றது.

பாதுகாப்பாக வைத்தவனும் அழியப் போகின்றான். அது உலக நிலைகள் அனைத்திலும் பரவப்படும் பொழுது, மக்களின் சிந்தனை சீர்குலையப் போகின்றது.

மனிதனாக உருவில் இருப்பார்கள்.
ஆனால், வேதனையுடன், நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான்.
இது போன்ற உணர்வுகள் இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் ஏற்படலாம். உடனே ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இதிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
3. தீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று தான் எல்லா ஞானிகளும் சொல்லியுள்ளனர்
குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். ஆகவே, குரு காட்டிய அருள் வழியில் அருள்ஞானிகளின் அருள் உணர்வை நுகர்ந்து நமக்குள் பகைமை உணர்வு வளராது அருள்ஞானத்தை வளர்ப்போம்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதியுங்கள். ஒவ்வொரு உடலையும் ஆலயமாக மதியுங்கள். ஆலயமாக மதித்து, அந்த அருள் சக்தியை ஊட்டப்படும் பொழுது, அது நமக்குள் தெய்வமாக மாற்றும்.

இதுவே நம் எண்ணங்கள் கொண்டு பிறரைக் காக்கும் நிலைகள் வருகின்றது. பிறரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலை நம் உயிர் காக்கின்றது.

நபிகளும் இதைத்தான் சொன்னார்,
இயேசுவும் சொன்னார்.
பண்பு கொண்ட நிலைகள் கொண்டு இதைத்தான்
புத்தரும் சொன்னார்.
திருமூலரும் இதைத்தான் அன்று சொன்னார்.
அதே மாதிரி பண்பு கொண்டு அத்வைதம் என்ற நிலைகள் கொண்டு
ஆதிசங்கரரும் செய்தார்.

அருள்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து, அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிற மக்களால் உணர்த்தப்பட்ட
அந்த அஞ்ஞான வாழ்க்கையில் நுகர்ந்தபின்,
இவன் செய்த தவறு என்ற உணர்வை நுகர்ந்தறிந்தால்
அந்த உணர்வுகள்
நமக்குள் தவறை உருவாக்காமல் தடுக்க வேண்டுமென்றால்,
அருள் உணர்வுகளை நமக்குள் இணைத்து,
அந்த வீரியத் தன்மையை நமக்குள் புகுத்தினால்
அஞ்ஞானத்தை மாற்றிடும் நிலையும்
மெய்ஞானத்தின் உணர்வு கொண்டு
உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நாம் வாழமுடியும். எமது அருளாசிகள்.