ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2013

எதிர்கால சந்ததிகளை மெய்ஞானிகளாக நாம் உருவாக்குவோம்

1. தெய்வ குணத்தை நமக்குள் வளர்ப்போம்
அன்றைய அரசர்கள் துவைதம் என்ற நிலைகள் கொண்டு
ஆண்டவனுக்கு இதையெல்லாம் செய்தால்,
மகிழ்ந்த நிலையில் உதவி செய்கிறான் என்று சொன்னார்கள்.
இதைப்போல, எதை எதையோ செய்து நம்மைத் தவறான திசைகளிலே திருப்பிவிட்டுவிட்டார்கள் அன்றைய அரசர்கள்.

ஆகவே, அந்த வழியில்லாதபடி ஆதிசங்கரர் நமக்கு எதைச் சொன்னாரோ அதன் வழி நடப்போம். சூட்சமமாக மறைந்திருக்கக்கூடிய உணர்வின் சக்தியை நாம் சுவாசிப்போம்.

நம் உடலுக்குள் அதைச் சேர்த்து அதை விளைய வைத்து, அந்த உணர்வின் நிலைகள் கொண்டு நம் எண்ணமும் செயல்படும் தன்மைக்கு ஆதிசங்கரர் சொன்னபடி எல்லா ஆலயங்களுக்கும் நாம் செல்வோம். அங்கே இருக்க்கூடிய தெய்வ குணத்தினை நாம் தியானிப்போம்.

அதைத் தியானித்து நம் உடலுக்குள் அந்த தெய்வ குணத்தினைச் சேர்த்து, அந்தக் கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று நம் மூச்சின் அலைகளை அங்கே பரவச் செய்வோம்.

கோவிலுக்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும், புனிதம் பெறவேண்டும் என்ற நிலைகளில் ஜெபத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்கள் உடலுக்குள் 100 தரம் தியானித்து வந்தால், அது 100 தரம் ஜெபமாக வெளியிலே செல்கின்றது.

அங்கு வருவோர் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் தியானிக்கும் பொழுது, உங்கள் உடலுக்குள் நல்லது கிடைக்கின்றது. இன்று ஆலயங்களில் அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடும் மூச்சலைகள் அன்று அரசர்கள் நமக்குள் ஊட்டிய விஷத்தன்மைகளிலிருந்து இந்த உலகை மீட்பதற்கு உதவட்டும்.
2. எதிர்கால சந்ததிகளை மெய்ஞானிகளாக நாம் உருவாக்குவோம்
மகரிஷிகளின் அருள் ஒளிகள் உங்களுக்குள் ஊடுருவி
அது வளரட்டும்.

உங்கள் பேச்சும் மூச்சும்
விஞ்ஞான அறிவிலிருந்து வரக்கூடிய விஷத்தை மாய்க்கட்டும்.

மெய்ஞானிகளினுடைய நிலைகளை மாற்றி
மந்திரத்தால் விஷத்தைத் தூவிய அந்த விஷ அலைகள் மாயட்டும்.

உங்கள் உணர்வுகள் அனைத்தும்
ஒளியாக சுடர்விட்டுப் பிரகாசிக்கட்டும்.

மெய் ஒளியின் உணர்வுடன்
உங்கள் உணர்வுகள் தொடரட்டும்.

அந்த மெய்ஞானி அருளுடன்
உங்கள் உணர்வுகள் ஒன்றியே ஒளிரட்டும்.

விஞ்ஞான உலகத்தினுள், உங்கள் பேச்சும் மூச்சும் நாளைக்கு வரக்கூடிய “எதிர்கால சந்ததிகளை” உயர்ந்த நிலைகளுக்குக் காக்கும் உணர்வாக உங்கள் உணர்வுகள் வளரவேண்டுமென்று எல்லா மகரிஷிகளையும் யாம் வேண்டுகின்றோம்.

நமது குருநாதர் அருள் சக்தியால், இன்று விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவருக்கும் அது கிடைக்கட்டும்.

இந்த உணர்வின் வித்துகள் உங்களுக்குள் ஒளியாக வளரட்டும். எமது அருளாசிகள்.