ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2013

உங்களுக்கு வரும் உடல் வலிகளை உங்கள் எண்ணத்தாலேயே நீக்க முடியும்

1. துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்கச் செய்யுங்கள்
பிறருடைய கஷ்டங்களையோ, நஷ்டங்களையோ மற்றும் பல நிலைகளைப் பார்த்தோம் என்றால் நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்?

படத்தில் காட்டியபடி காதிலே கையை வைத்துக் கொள்ளுங்கள்.
 
“ஓம் ஈஸ்வரா குருதேவா”, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வவை, உடல் முழுவதும் எண்ணி சொல்லிக் கொண்டயிருங்கள்.

இதை அங்கே பாய்ச்சி
உங்கள் செவிக்குள் கொடுத்து
இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.
நீங்கள் இந்த மாதிரிச் சொன்னீர்கள் என்றால் இந்த உணர்வலைகள் அங்கே வரும்.

உடலில் எங்கெல்லாம் வலி இருக்கின்றதோ, அந்த இடங்களிலெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும் என்று இதே போன்று சொல்லி, நினைவைச் செலுத்தினால் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால், இதே மாதிரி கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படரவேண்டும், எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் பெரும் துயரங்களும் தொல்லைகளும் வந்து கொண்டிருக்கும் பொழுது, இதைப் போல உங்கள் உணர்வுக்குள் உங்களுடைய சொல்லை, செவிகளைக் கொண்டு
அந்த அருள் உணர்வின் தன்மையை உந்தச் செய்து,
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலின் வீரிய சக்தியை
உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்க
இது உதவும்.
2. உங்களுக்கு வரும் உடல் வலிகளை உங்கள் எண்ணத்தாலேயே நீக்க முடியும்
இதைப் போன்று, உடலில் எந்த வலி வந்தாலும் சரி, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உங்கள் உயிரை எண்ணி, வலி எடுக்கின்ற பக்கம் கண்ணின் நினைவைச் செலுத்தி, உடலில் உள்ள வலி நீங்கவேண்டும் என்று சொல்லுங்கள்.

எங்கள் உடலில் உள்ள வாத நீர், பித்த நீர், விஷ நீர் அனைத்தும் இறங்க வேண்டும், தரையிலே இறங்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

இவ்வாறு நீங்கள் உங்கள் நினைவுகளை
உங்கள் உடலில் வலி உள்ள இடங்களுக்குச் செலுத்த செலுத்த,
அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நீங்கள் நுகர,
உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த,
துரித நிலைகள் கொண்டு
தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.
வேதனையிலிருந்து விடுபட முடியும்.

அருள் வாக்குப்படி, “நீங்கள் இப்படிச் செய்யுங்கள்” என்று சொல்கின்றேன். யாம் சொன்ன முறைப்படி நீங்கள் இதைச் செய்தால்
உங்கள் உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்து,
இதெல்லாம் வாக்குப்படி சித்தம்தான்.

யாம் கொடுக்கும் இந்த அருள் வாக்குகள் உங்களுக்குள் பதிவானபின், இதைச் செய்தால்
உங்களுக்குள் வரும் எத்தகையை தீமைகளையும்
அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.

ஆகவே, இதையெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் எடுத்துப் பழகுங்கள். எமது அருளாசிகள்.