ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2013

தியானம் - படங்களுடன்

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் வசிஸ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒரு மனமாகி, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, அவர்கள் வாழ்க்கையில் இருளை வென்று, ஒளி என்ற உடலைப் பெற்று, இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள் சூரியனால் கவரப்பட்டு, நமது பூமியில் அலைகளாகப் படர்கின்றது. அந்த ஆற்றல் மிக்க சக்திகளை, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிக் கொண்டுள்ள அணுக்களுக்கு, வீரியமாகச் சேர்க்கவும், அதைப் பெறவும், இப்பொழுது நாம் தியானிப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா.., ஓம் ஈஸ்வரா குருதேவா.., ஓம் ஈஸ்வரா குருதேவா

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும்போது புருவ மத்தியில் உள்ள உங்கள்  உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்தி அவனிடம் (உங்கள் உயிரிடம்) வேண்டி, ஏங்கி தியானிக்க வேண்டும்.

அம்மா அப்பா அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கண்ணில் செலுத்தி, கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தோடு இணைத்து, அதிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்ற உணர்வுடன் ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, நம் கண்களில் உள்ள கருமணிகள் அதைக் கவரும், அதன்வழி, நம் உடல் உறுப்புக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டி, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி, நம் பூமியில் பரவியிருப்பதைக் கவரும் திறன் பெறுகின்றோம். .

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை, புருவ மத்தியில் இந்த உடலை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனும், நுகர்ந்ததை உருவாக்கிக் கொண்டுள்ள ஈசனிடம் செலுத்தி, உயிர்வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று உணர்வினைச் செலுத்தி, உயிருடன் இணைக்கச் செய்யுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் பொழுது, நம் உடலிலுள்ள தீய அணுக்களுக்கு, நம் உயிர்வழி உணர்வுகள் செல்லாது தடைப்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, உங்கள் நினைவினை உயிரான ஈசனிடம் செலுத்தி, உயிர் வழி கவர்ந்து வலுப்பெறச் செய்யுங்கள், ஒரு நிமிடம்.

இப்பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் செல்லாது நிறுத்திவிட்டு, நம் உடலில் தீமை என்ற உணர்வுகளை உருவாக்கும் உணர்வினை, நம் உடலின் ஈர்ப்பை விட்டுக் சுழற்றிச் செல்ல, துருவ  நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, இரத்தத்திலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவான்மாக்கள் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவினைச் செலுத்தி, நம் இரத்த நாளங்களில் உள்ள, ஜீவான்மா ஜீவ அணுக்களிடம் உணர்வினைச் செலுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.
உங்கள் இரத்தத்திலுள்ள உணர்வுகள்
அந்த வீரிய சக்தியைப் பெறும் பொழுது,
உங்கள் இரத்தத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள்
உங்களை இயக்குவதை உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, ஏங்கி தியானியுங்கள்.
இப்பொழுது, உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறும் தகுதியை ஏற்படுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு, உங்கள் உடலிலுள்ள அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள, தீய அணுக்களை அப்புறப்படுத்த இது உதவுகின்றது.

துணியைச் சோப்புப் போட்டு நுரைத்து, அழுக்கை வெளியேற்றுவது போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் பெருக்கி, உடலின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள, தீய அணுக்களை வெளியேற்றுவதுதான் இது.

இப்படி வெளியேற்றியபின், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து, சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் சிறுகுடல் பெருங்குடலில் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு, அந்த வீரிய சக்தியை ஊட்டும் போது, நாம் உண்ணும் ஆகாரத்தை, நல்ல இரத்தமாகவும் சீராகவும் மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கணையத்தில் செலுத்துங்கள்.

இவ்வாறு தியானிக்கும் போது, நீங்கள் உண்ணும் உணவில் இருந்து ஆவியாக வருவதை, அமிலமாகவும், பல சத்துகளாகவும் பிரித்து, நல்ல இரத்தமாக மாற்றும், திறனுள்ள கணையங்களாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்ந்து, கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப் பெறச் செய்யுங்கள்.
நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய, நல்ல அணுக்களைச் சீராக வைக்கவும், பரிசுத்தமான இரத்தமாக உருவாக்கவும் இது துணை புரியும்.

எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப்பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு வலுப் பெறச் செய்யும் பொழுது, நுரையீரலில் உள்ள குறைகளை நீக்கி, வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கும் திறன் அது பெறுகின்றது.

 நுரையீரலை உருவாக்கிய அணுக்கள், அந்த வீரிய சக்தியைக் கவர்ந்து, நமக்குள் ஆரோக்கிய உணர்வுகளைப் பரப்ப, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்தி, அந்த அணுக்களை வலிமையாக்குங்கள்.

இவ்வாறு நாம் தியானிப்பதால், நம் நுரையீரலில் உள்குறைபாடுகள் அகலவும், வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கவும், சந்தர்ப்பம் உருவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் செலுத்தி, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அந்த வீரிய சக்தியைப் பெறச் செய்ய தியானியுங்கள்.
இவ்வாறு, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, சர்க்கரைச் சத்து, உப்புச் சத்து, விஷத் தன்மை போன்ற நிலைகளை அது பலவீனப்படுத்தும்.

எப்படி, குப்பையில் பல கழிவுகள் இருப்பினும்
அதன் சத்தினை மாற்றி, செடி, கொடி, மரங்கள்
நல்ல சக்திகளாக மாற்றிக் கொள்கின்றதோ,
அதைப் போல, நமக்குள் முந்தைய தீமைகள் இருப்பினும்,
இதைப் போன்று வீரியமடையச் செய்யும் பொழுது,
இந்த அசுத்தமான விஷத் தன்மைகளை, ஒளியின் சுடராக மாற்றிவிடும். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் அணுக்கள், இவ்வாறு மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற, அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு வலுப்பெறச் செய்யும் பொழுது,
இதனுடன் சென்று, வீரிய இரத்தங்களாக மாறி,
உடல் முழுதுக்கும் பரப்பி,
அசுத்த உணர்வுகளைத் தனித்து,
அருள் உணர்வுகளைப் பெருக்கி,
இருளை அகற்றும் அந்த உணர்வின் இயக்கங்களாக மாறி,
மன உறுதி கொண்டு
நம் வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஞானமும்,
தெளிந்த மனமும் கொண்டு,
தெளிவான வாழ்க்கை வாழ, இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்ணிலுள்ள கருமணிகள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.
நமது வாழ்க்கையில், காலையில் இருந்து இரவு வரையிலும், வேதனை, வெறுப்பு, சலிப்பு, சங்கடம், கோபம் போன்ற உணர்வுகள் அனைத்தும் கருமணிகளில் பட்டுத்தான், உடலுக்குள் செல்கின்றது.

ஆனால் அதே சமயம், இந்தக் கருமணியில் விஷத்தின் தன்மை பட்டால், வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு. ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால், அது நடைபெறாது.

வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு, நாம் சிந்திக்கும் ஆற்றலைப்பெருக்க வேண்டுமென்றால், அது தடைப்படும். வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு அடுத்து, எதைச் செய்ய வேண்டுமென்றாலும், சிந்தனையற்ற செயல்களையே செயல்படுத்தும்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளில் நமது கருமணிகளைத் தூய்மைப்படுத்த, வேதனைப்பட்டோரைப் பார்த்தால், அடுத்த கணமே, “ஈஸ்வரா” என்று கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று ஏங்கி தியானித்து, கருமணிகளைத் தூய்மைப்படுத்த, இந்த உபாயத்தைக் கடைப்பிடியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள். இப்பொழுது உங்கள் கருமணிகளில், துருவ நட்சத்திரத்தின் ஒளியலைகள் படர்ந்து, தூய்மைப்படுத்துவதை உங்களால் உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு தியானிக்கும் பொழுது, நரம்பு மண்டலத்திலுள்ள விஷத்தன்மைகளைக் குறைத்து, கைகால் குடைச்சல் என்ற நிலையோ, மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நிலையோ, சரவாங்கி நோய் என்ற நிலையோ, அதைச் சிறுகச் சிறுக மாற்றி, இத்தகைய நோய்கள் வராது தடுக்க, இது உதவும்.

விஷத்தன்மையுள்ள பாம்பு, தன் விஷத்தினைப் பாய்ச்சி மற்றொரு உணவினை எடுத்துத் தனக்குள் நாகரத்தினமாக மாற்றியதோ, இதைப் போன்று நமது நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக, துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்யும் பொழுது, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் தெளிவான நிலைகள் பெற்று, தெளிவான செயல்களைச் செய்து, நமக்குச் சாதகமாகச் செயல்பட முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, எல்லா உறுப்புகளிலும் உள்ள உணர்வுகள் அனைத்தும், ஒளியின் சுடராகும் நிலை பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
நம் நெஞ்சிலுள்ள அணுக்கள் அந்த வீரிய சக்தி பெற்றால், நம் அருகில், தீமை என்ற உணர்வுகள் வராது, தடுக்கும் திறன் பெறுகின்றது.

இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் எலும்புகள் பெறவேண்டுமென்று, உணர்வினைப் பதிவாக்கப்படும் பொழுது, நெஞ்சுக்கு முன் ஒரு குருத்தெலும்பு இருக்கும். அதன் வழி, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் காற்றில் கலந்திருப்பதை, உங்கள் ஆன்மாவிற்குக் கொண்டு வருகின்றது.

வேதனைப்படுத்துவோரின் உணர்வு பதிவானால்,
குருத்தெலும்பு, வேதனைப்படுத்துவோரின் உணர்வினைக் கவர்ந்து,
நமது ஆன்மாவிற்குக் கொண்டு வரும்.
அப்பொழுது, படபடப்பு என்ற நிலைகள் உருவாகி,
அதன் உணர்வுகள் சுவாசித்தபின், அதே இயக்கமாக மாறும்.

இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வை  நம் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள அணுக்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்தால் அது வலிமை பெறும் பொழுது, நாம் அருள் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

தீமை என்ற உணர்வுகளோ, விஷத்தன்மை கொண்ட உணர்வுகளோ, நம் அருகில் வராது தடைப்படுத்தி, நம் உடலுக்குள் உள்ள, சர்வ ரோகங்களையும், சர்வ பிணிகளையும், நீக்கும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து, தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து, தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.
ஏனென்றால், இந்த அணுக்கள் வீரியத் தன்மை பெறப்படும்பொழுது, நம் அருகில் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வராதபடி, இதுவும் வலிமை சேர்க்கப்படும் பொழுது, நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறும்.

நல்ல உணர்வினை நாம் வளர்த்துக் கொள்ளவும், நமக்குள் அருள் உணர்வினைப் பெருக்கிக் கொள்ளவும், இருளை அகற்றி என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வினை நாம் பெற, இத்தகைய நல்ல அணுக்களை வளர்த்துப் பழக வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு, ஊசி மூலம் மருந்தை இரத்தத்தில் கலக்கச் செய்து, எப்படி வளர்க்கின்றனரோ, அதைப் போன்று, அருள் உணர்வினை நம் கண்ணின் நினைவு கொண்டு, 
நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு, வீரிய உணர்வைச் செலுத்தி,
திடமாக அந்த இருளை அகற்றிடும்,
ஓர் ஒளியின் உணர்வாக நாம் வளர்ப்பதே,
இப்படித் தியானிக்கும் முறை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், நம் உடலிலுள்ள, எல்லா  உறுப்புக்களையும் உருவாக்கிய அணுக்களுக்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்து, அதை வளர்த்துக் கொண்டு வருவதே, இந்த தியானத்தின் நோக்கம்.