ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2013

பேரின்பத்தை தரும் பேரொளி

(பக்கம் 7-12)
நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு, அதற்கு இரையாகி, அதனின் உணர்வைக் கவர்ந்து, கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்று, பல கோடி சரீரங்களைப் பெற்றதன்பின்,
இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
நம்மை மனிதனாக உருவாக்கியது.
இதுதான் கோடிக்கரை”.

நாம் எதை எண்ணுகின்றோமோ, உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை, நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் ராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தலப்புராணங்களை வடித்து வைத்தார்கள்.

உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும், எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும், எத்தனை தெய்வங்களை வணங்கினாலும், கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம், அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.

நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை, உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை ஓம் நமச் சிவாயஎன்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் ஏசும் பொழுது, ஏசுகின்றார்என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகிவிட்டால். அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் சிவதனுசு”.

நம் உடலுக்குள், அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு, நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான், நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு, “ஒருவன் என்னைக் கோபித்தான் என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான்,
அவனை விடுவேனா பார்
என்று  அங்கு சொல்லப்படும்போது,
நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி, கோபமான சொல்லின்   உணர்வுகள், அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதற்குத்தான் தனுசு என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாயஎன்று
நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது
சிவதனுசு ஆக மாறுகின்றது.

ஆனால், ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்,
அவனை நான் விடுவேனா பார்,
அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்
என்று நாம் சொல்லுகிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில், நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை, நண்பர் நம்மிடம் வந்து அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்”, என்று சொல்லும்போது என்ன ஆகின்றது?

நாம் …. அப்படி ஆகிவிட்டதா, அவனை அடிக்கிறேன், அவனைக் கொல்கிறேன்என்று  இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,

அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது.
சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை சிவதனுசு என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.

ஆகவே, நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள்,  உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள், இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.

உடல் பற்றின்  தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று கோடிக்கரையாகமனித உடலைப் பெற்றோம் என்பதனை, இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இராமாயணத்தில் இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர், தனுசுகோடிக்கு வந்தபின், பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து, சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

ஏனென்றால்,நேரமாகிவிட்டதுஎன்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர். ஆனால்,  இந்த உடலில் காலதாமதமாகிவிட்டது என்பதுதான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை, ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து  (மனதைக் குவித்து)  சிவபூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார், சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள். எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.
அனைத்து தீமைகளையும், விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.

இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு,  நம்முள் பெற முடியும். ஆகவே, இதிலிருந்து  நாம் இராமேஸ்வரம்,  நமது எண்ணத்தால்,  துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

தனுசுகோடி, ம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது, அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி,  கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம். 

நாம் சேர்த்துக்கொண்ட உணர்வின் தன்மை, ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து, தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும். இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும் என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து, நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப, பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை
நமது உயிர் உருவாக்கியுள்ளது.
ஆகவே மனிதர்களான நாம்தான், தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.

ஆனால் தனுசுகோடி என்பது,  யிர் பல கோடித் தீமைகளை வென்று, தீமைகளையும், விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று, உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.  நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்  எமது அருளாசிகள்.
(பக்கம் 12-16)
யற்கையில், ஒரு செடியில் விளைந்த சத்தை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, காற்று மண்டலத்தில் வைத்துக்கொண்டால், அந்தச் செடியில் விளைந்த வித்தினை எடுத்து, மற்றொரு பக்கத்தில் விதைத்து விட்டால், விதைக்கப்பட்ட வித்துக்கள்,
பூமியின் ஈர்ப்பின் துணைகொண்டு,
தான் எந்தச் செடியில் விளைந்ததோ,
அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து,
அதே ரூபமாக விளைகின்றது.
அதே சுவையைக் கொடுக்கின்றது.
அதே இனமாக வளர்கின்றது.
அதே வித்தாக உருவாக்குகின்றது.

இதைப் போன்றுதான், நமது மனித வாழ்க்கையில் நாம் பிறிதொருவர் வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது, அது நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர நேர்ந்தால், வேதனையை உருவாக்கும் அணுக்கள் நமது உடலிலே விளைகின்றது.

உதாரணமாக, ஒரு குளவி தன் விஷத்தை புழுவின் உடலில் பாய்ச்சும் பொழுது, குளவியின் விஷம் புழுவின் உடல் முழுவதும் படர்ந்து, புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மாறி, புழுவின் உருவமே மாறி, குளவியின் ரூபம் பெறுகின்றது.

இதைப் போன்றுதான், வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால்,
வேதனையான உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலந்து,
நமது உடலிலுள்ள நல்ல அணுக்களில் ஊடுருவி,
நண்பருடைய உடல் எப்படி நலிந்ததோ, இதேபோன்று நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள் மாற்றம் ஆகி, நமக்குள் வலியும் வேதனையும் உண்டாகின்றது.

இப்படி தொடரப்படும் போது, நாளுக்கு நாள் நமது உடல் நலிந்து கடைசியில் உடலைவிட்டுப் பிரிய நேரும் நமது உயிரான்மா, தான் சேர்த்துக்கொண்ட உணர்விற்கொப்ப, விஷத்தை உணவாக உட்கொள்ளும் உயிரினத்தின் உடலிற்குள் அழைத்துச் சென்று, நம்மை அந்த உடலாக மாற்றிவிடுகின்றது.

ஆகவே, நாம் நமது மனித வாழ்க்கைக்காலத்தில், நம்மை அறியாது வரும் நஞ்சுகளிலிருந்து நம்மை மீட்கத் தவறினால், வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நமது உடலில் வளர்க்கப்பட்டு, கடும் நோயாகி, மனித உருவையே சீர்குலையச் செய்கின்றது.

நமது உடலில் விஷத்தின் தன்மை ஆனபின், மனித உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் சுருங்கி விடுகின்றன. மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் சுருங்கியபின், நமது உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா, அடுத்து, மற்றொன்றைக் கொன்று புசிக்கும், பாம்பினமாக உடல் பெறுகின்றது.

நஞ்சினை வென்ற அகஸ்தியர், துருவனாகி, துருவ மகரிஷியானர். கணவனும் மனைவியும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி, ஒன்றுபட்டு வாழ்ந்து, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டுஇல்லற வாழ்க்கையில் இருளை நீக்கினார்கள்.

அவர்கள், வானுலக ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து, மின்னலின் அணுக்களைத் தமக்குள் அணுவாக மாற்றி, உயிருடன் ஒன்றி மின் அணுவாக தம் உடலின் தன்மையை மாற்றி,  இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற, ஆறாவது அறிவு பெற்றர்கள், ஏழாவது நிலை கொண்டு, இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர். 

தீமைகளிலிருந்து விடுபட்ட, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகர்ந்து பழகினால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று, தீமையற்ற நிலையாக வாழலாம்.

வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால், அது நமது இரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்கள் விஷத்தின் தன்மை கொண்டபின், உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.

உடலின் அணுத்தன்மை, விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது, உடலில் வலி வருகின்றது. வலி வந்தால் உடல் நலிகின்றது, எண்ணம் குறைகின்றது.

எவ்வளவு செல்வம் தேடினாலும், எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும், கடுமையான நோய்கள் வந்துவிட்டால், வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.

வெறுப்பு உணர்வுகள் வரப்படும்பொழுது
உடலை வெறுக்கின்றோம்,
வேதனையை வளர்க்கின்றோம்.
இதனால், நாம் நிம்மதியற்ற நிலைகளில்தான் வாழ வேண்டி வரும்.

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில், அழுக்குப்பட்டு விட்டால், கண்ணாடியின் அழுக்கைத் துடைத்தால்தான், நம்முடைய உருவத்தைக் காணமுடியும்.

இது போன்று, பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகிவிட்டால், நம்மை எது இயக்குகிறது என்று அறிய முடியாதபடி, நாம் பார்த்திருந்த உணர்வுகள் நமது உடலை இயக்கி, நம்மை நாம் அறிய முடியாத நிலைகள் ஆக்கி விடுகின்றது.

ஆகவே, நம்மை நாம் எப்படி அறியவேண்டும்? கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால், நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது.

இது போன்றுதான், நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்துவிட்டால், சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.

கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால்,
கண்ணாடியில் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று,
நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கி,
தூய்மைப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று சிறிது நேரம் ஏங்கி தியானித்துவிட்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, ங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நம் உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தப்படும்போது,  வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி, நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது. அப்பொழுது,
நமக்குள் தெளிவான நிலைகள் வரும்.
சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது.
தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது.
தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.
(பக்கம் 17-20)
தொழில் செய்பவர்களுடைய நிலைகளை எடுத்துக் கொண்டால், தொழில் சீராக லாபத்துடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம். தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கும் பொழுது, யாராவது கடன் கேட்டால் கொடுத்துவிடுவோம். இது போன்று இரண்டொரு பேருக்குக் கடன் கொடுத்து, அவர்கள் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்றால், சோர்வடைகின்றோம்.

சோர்வடைந்து வேதனை என்ற உணர்வுகள் வரும் பொழுது, வியாபாரம் என்னாகும்? வாடிக்கையாளர்கள் யாராவது சரக்கைப் பற்றிக் கேட்டால், தெளிவான பதிலைச் சொல்ல முடியாது.

வேதனையான நிலையிலிருக்கும் பொழுது, நமது உணர்விற்குத் தக்கதான் நல்ல சரக்கை விட்டுவிட்டு, வேதனைக்குரிய சரக்கைத்தான் எடுத்துக் காண்பிப்போம்.

இப்படி வியாபார நிமித்தங்களால் சோர்வடைகின்றோம். சோர்வடைந்தால், விஷத்தின் தன்மை நமக்குள் உள்செல்கின்றது. நம்மிடம் தெளிந்த நிலை இல்லாமல் போகின்றது. ஆன்மாவில் தூசிபடும் பொழுது, நாம் நல்ல பொருளைக் காணமுடிவதில்லை. சிந்திக்கும் தன்மை இல்லை.

மேலும், மேலும் சோர்வடையப்படும் பொழுது, நம்மையறியாமலே சோர்வைச் சுமந்த வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

நாளடைவில், வேதனையின் அணுக்கள் உடலில் பெருக்கமாகின்றது. நமது வியாபாரமும் மந்தமாகின்றது. தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடிவதில்லை. உடல் நோயைத் தீர்ப்பதற்கு செலவழித்து, நோயால் அவதிப்படும் போது, தேடிய செல்வத்தை மீண்டும் நிலை நிறுத்த முடிவதில்லை.

இது சமயம் நாம் என்ன எண்ணுகின்றோம்?
அன்றைக்கு நல்ல நேரம் இருந்தது, நன்றாகச் சம்பாதித்தோம்.
இன்றைக்குக் கெட்ட நேரம் வந்துவிட்டது,
வியாபாரம் போனது, நோயும் வந்தது என்று சொல்கின்றோம்.
ஆனால், நேரம் எதில் வருகின்றது?

நாம் சந்திக்கும் நேரம் தான் கெட்ட நேரமாகின்றது. நமது எண்ணம் நல்லதாக இருந்தால், நமது நேரமும் நல்லதாக மாறிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் இணைத்து, நமது ஆன்மாவில் சேர்ந்துள்ள சிந்தனையை இழக்கச் செய்யும் உணர்வை நீக்கி, நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

நம்முடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பொழுது, நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது. மனவலிமை கிடைக்கின்றது. வியாபாரத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

வேதனை உணர்வுகள் நமக்குள் ஆனபின், நல்லதை யார் சொன்னாலும், காதில் கேட்கவிடாமல் தடுத்துவிடும். கண்ணாடியில் அழுக்குப் படிந்தால், நமது முகம் தெரியாது. கண்ணாடியில் உள்ள அழுக்கைத் துடைத்தால், நமது முகத்தை நாம் பார்க்கலாம்.

ஆகவே, பிறருடைய உணர்வுகள் நம்மில் இணைந்து,
நமது சிந்தனையை மறைக்கும் பொழுது,
நாம் நம்முடைய ஆன்மாவைத் தூய்மையாக்கும் நிலை பெற்றால்,
நம்முடைய எண்ணம் கொண்டு
நமது செயலாக்கங்களை வலிமையாக்க முடியும்.

ஆனால், சாதாரண நிலையில், நமக்கு இடைஞ்சல் தருபவரை உதைத்து வாங்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இப்படித்தான் நமது எண்ணங்கள் பிறரை அடிக்கவும், உதைக்கவும், எண்ணங்கள் வருகின்றது. எல்லை கடந்த கோபம் வருகின்றது. அவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள்தான் வருகின்றது.

உணர்ச்சிகள் மாறப்படும் பொழுது, நாம் தெளிவான செயல்களைச் செயல்படுத்த முடிவதில்லை. ஆகவே, வேதனையின் உணர்வின் தன்மைகள் நமது இரத்தத்தில் கலக்கின்றது. இதனால், நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள், தங்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவிக்கின்றன.

பின், நஞ்சின் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது, வேறுவழியில்லாது உடல் நோய் பெறுகின்றது இதைப் போன்ற நிலைகளில் நமக்கு நாமே தண்டனை கொடுத்து விடுகின்றோம். ஆகவே, நாம் எண்ணிய உணர்வுகள் உயிரினில் பட்டபின், உயிர், நுகர்ந்த உணர்வு எதுவோ, அதன் தன்மை கொண்டு உடலாக்குகின்றது. ஆகவே இது சிவதனுசு.

நஞ்சான உணர்வுகள் நம்முள் வரும் பொழுது, நஞ்சான உணர்வுகளை மாற்ற வேண்டுமானால், அடுத்த கணமே, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.

பின், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று உள் செலுத்தப்படும் பொழுது, இதனின் உணர்வின் தன்மைகள் இங்கே வரப்படும் பொழுது, விஷ்ணு தனுசு”.
அதாவது, அருள் உணர்வுகளைத் தமக்குள் பெறும் பொழுது, அருள் உணர்வுகள், தீய உணர்வுகளைத் தூண்டிவிடும் அணுக்களுக்குத் திரையாகிவிடுகின்றது.
தீய உணர்வைத் தூண்டும் அணுக்கள்
தன் உணர்வை இழுக்கும் தன்மை குறைந்து,
அருள் உணர்வுகள் நமக்குள் பெருகி,
நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.
நம்முடைய எண்ணம் வலிமை அடைகின்றது.
தெளிவான சிந்தனை கிடைக்கின்றது.

ஆகவே, இதற்காகத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் காலதாமதமாகிவிட்டது என்று, கடைசி நேரத்தில் மணலைக் குவித்து, சிவலிங்கத்தை பூஜித்தார், என்று காண்பிக்கப்பட்டது. அதாவது, நாம் ஒவ்வொரு நொடியிலும், அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் சேர்க்கும் நிலைதான் கடைசி நிலை. இது தனுசுகோடி. அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது, நமக்குள் பிறவியில்லா நிலை பெறும் தகுதி உருவாகின்றது.

ஆகவே, அருள் ஒளியின் உணர்வுகளை நமது உடலில் குவித்து, இந்த உடலுக்குப்பின், உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும், என்பதைத்தான்  நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
(பக்கம் 24-28)
சாதாரணமாக, ஒருவர் நமக்கு இடைஞ்சல் செய்தால்,
அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
அவர் செய்யும் இடைஞ்சல்களிலிருந்து
நம்மை மீட்டுக்கொள்ளும் நிலையாக
அவருக்கு நாம் தொல்லைகள் செய்ய ஆரம்பிக்கிறோம்.

அவருக்கு நாம் தொல்லைகள் செய்யும்போது, “அவர் இனி நமது வழியில் வரமாட்டார், நமக்குத் தொல்லைகள் தரமாட்டார்”, என்று எண்ணித்தான் செய்கின்றோம்.

ஆனால், இப்படி மற்றவருக்கு தீமைகள் செய்து அவரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது, அதனின் உணர்ச்சிகள் நம்மையும் கெடுக்கும் நிலைக்குப் போகின்றது.

ஆகவே, பிறரைக் கெடுக்கும் நிலைக்குப் போகும் பொழுது, நம்மை நாம் கெடுத்துக் கொள்ளும் நிலைதான் வருகின்றதே தவிர, நம்மை நாம் காக்கும் நிலை இல்லை. இதுதான் சிவதனுசு’.

ஆகவே, நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தாக்கும் நிலை வருகின்றது. நம்முள் இருள் சூழும் நிலையே வருகின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா?

இதற்குத்தான் அன்று சாஸ்திரங்கள் கூறியது, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் எடுத்து, நமது உடலுக்குள் செலுத்தி, அதனின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது இது விஷ்ணுதனுசு”.

உயிரால் விஷ்ணுதனுசு என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது, இது விஷத்தின் தன்மையை முறிக்கின்றது.

இதை இராமாயணத்தில், “இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்” என்று ரைக்கப்பட்டிருக்கும். வாலி யார் என்றால், சூரியனின் பிள்ளை.
உதாராணமாக, நமக்கு வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்றால், நமக்குள் வேதனையாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின் வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின் நாம் நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைச் செயலாக்க முடிகின்றதா? இல்லை.

ஒருவர், தான் வேதனையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, அதனை சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. ஆகவேதான், வாலியை சூரியனின் பிள்ளை என்கிறோம்.

ஆகவே, அவருடைய வேதனைப்படும் உணர்வுகளை, நாம் உற்றுப்பார்த்து நுகரப்படும் பொழுது, அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் வரும்போது, வாலியாகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால், இரண்யன் ஆகின்றது. அது நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று காண்பிக்கின்றனர்.

இராமாயணத்தில், குகைக்குள் இருக்கும் வாலி வெளியே வராதபடி, மேலே இருக்கும் பாறையைக் கீழே தள்ளி, மூடிவிடுகின்றனர். இப்பொழுது வாலி வெளியில் வரமுடியவில்லை என்று எடுத்துரைக்கின்றனர்.

இதைப்போன்றுதான், நாம் என்ன செய்ய வேண்டும், நாம் வேதனையின் உணர்வைப் பார்க்கும் பொழுது, ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி, நமது கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மையை எடுத்து, அதுங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், என்ற இவ்வுணர்வின் தன்மையை உடல் முழுவதும் படரவிட வேண்டும்.

அப்படிப் படரவிடும் பொழுது, தீமை என்ற வாலியை இங்கே அடைத்து விடுகின்றோம். உள்புகாது தடுத்து விடுகிறோம் என்ற நிலையைத்தான் இராமாயண காவியத்தில் தெளிவுப்படுத்தினார்கள்.

அதே சமயம், வாலி எவரைப் பார்த்தாலும் சம வலுவைப் பெறுவார் என்றும், ஆனால் சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்பு கொண்டவர் என்றும் காவியம் கூறுகின்றது.

ஒரு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது, அவர் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும், என்று  இரண்டு உணர்வுகளையும் கலந்து சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது, இதை சூரியனின்  காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்ளும்.

எதன் உணர்வைக் கவர்ந்து, அவர் நலமாக வேண்டும் என்று சொல்லாகச் சொல்கின்றோமோ, “இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்”, இந்த ணர்வின் தன்மை, “வாயுப்புத்திரன்”.

அந்தச் சொல்லின் தன்மை நோயாளியாக இருப்பவர் செவிகளில் பட்டு, நீ மகரிஷிகளின் அருள்சக்தியால் நலமாவாய்என்று உணர்ச்சிகளைக் கூட்டப்படும் போது, அவருடைய கண்கள் இதைக் கவர்ந்து, நுகரச்செய்து, உயிரில் பட்டபின், தீமை என்ற நிலைகளிலிருந்து விடுபடும் சிந்தனையை அங்கே கூட்டுகின்றது.

அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்றபின்,
அங்கே தீமையிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
அப்படித் தூண்டினால்,
அதுதான் இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்.
ஆகவே, அவன் ஒரு மந்திரி.
ஆனால், வேதனையின் உணர்வுகளைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, அதைக் கேட்போர் உணர்வுகளில் வாலியாகி விடுகின்றது. ஆக இராமாயணமோ, மற்ற காவியங்களோ எதுவும் குறையில்லை. இவைகள் நம்மைத் தெளிவுபடுத்தவே உருவாயின.

ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமானப்புத்திரன் நாரதன். அகஸ்தியர் தம் வாழ்நாளில் அணுவின் இயக்கத்தை அறிந்தார். துருவத்தை நுகர்ந்தார். துருவத்தின் ஆற்றலை தம்முள் பெருக்கினார். துருவ மகரிஷியானார்.

கணவனும், மனைவியும் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றிணைந்து, இருளை வென்று உணர்வின் தன்மையினை ஒளியாக்கினார்கள், துருவநட்சத்திரமாக ஆனார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், உணர்வின் ஒளியலைகளைத் தான் நாரதன் என்றார்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை, சூரியனின் காந்தப்புலனறிவுகள்  கவர்ந்து, இப்புவியில் படரச்செய்கின்றது. அது மட்டுமல்லாமல், சூரியனின் காந்தப் புலனறிவுகள் செடிகள் மற்ற நிலைகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கவர்ந்து, மற்றொன்றிற்கு உணவாக எடுத்துச் சென்று, மற்றொன்றை வளர்த்து நன்மை செய்கின்றது. இது யார்? சுக்ரீவன். சுக்ரீவனும் சூரியனின் பிள்ளைதான்.

ஆக, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வரப்படும் பொழுது,
இதை நாம் நுகர்ந்தால், ரிஷியின் மகன் நாரதன்.
அது நமக்குள் வந்தபின்,
நம்மிடம் உள்ள பிடிவாதமான நிலைகள்,
தவறான நிலைகள் நம்மிடம் செயல்படுவதை
நமக்கு உணர்த்தி,
இது தப்பு, இது குற்றம்,
இதிலிருந்து நீ மீள வேண்டும்
என்ற உணர்ச்சிகளை ஊட்டி நல்வழிப்படுத்துகின்றது.

சூரியனின் புத்திரன் சுக்ரீவன் என்பது, எல்லாவற்றையும் கவர்ந்து யார் எதை எண்ணுகின்றனரோ, அவர்களுக்கெல்லாம் அதன் நிலையில் உதவும் பண்பு கொண்டது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கொண்டால், “ரிஷியின் மகன் நாரதன்”. மனிதனாக இருந்து, உணர்வினை ஒளியாக சிருஷ்டித்துக் கொண்டவர். எதனையும் உருவாக்கக்கூடியவர். ”ரிஷிஎன்ற நிலை கொண்டு, தமக்குள் எதனையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர்.

அதனின் அருளுணர்வுகளை நமக்குள் நுகர்ந்து பெருக்கினோம் என்றால், நமக்குள் வரும் தீய உணர்வுகளை மாற்றி, இருள் என்ற நிலைகளை நீக்கி, உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியினை, நம்மிடத்தில் உருவாக்குகின்றது.

ஆகவே, நாம் நம்முள் துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வை இணைத்து, தீமைகளை அகற்றி,
உயிர் என்ற ஒளியின் தன்மையை,
என்றுமே ஒளியாக வைத்திருக்கும்
விஷ்ணுதனுசு எனும் நிலையைப் பெறுவோம்.
(பக்கம் 29-41)
நாம் நமது வாழ்க்கைக் காலத்தில், இயற்கையின் இயக்க உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். ஒரு செடியில் விளைந்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, நமது பரமான பூமியில் பரமாத்மாவாக மாற்றியுள்ளது.

அதே செடியின் வித்தை எடுத்து நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து புவியின் ஈர்ப்பு துணை கொண்டு, பரமான பூமியில் பரமாத்மாவாக மாறியுள்ள தன் தாய் செடியின் சத்தைக் கவர்ந்து, நுகர்ந்து, அதே உணர்வு கொண்டு, அதே செடியாக வளர்ந்து, தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதே போன்று ஒரு மனிதர், தான் நோய்வாய்ப்படும் போது
தன் மகன் மேல் பற்று வைத்து, அந்த மகனும்
தன் தந்தையின் மீது பற்று வைத்தால்,
இவ்வேதனையின் உணர்வுகள், மகனிடத்தில் விளைந்து அதிகமாகும்.
தந்தையின் உணர்வு மகனிடத்தில் விளைந்தபின், தந்தையின் உயிரான்மா தன் உடலைவிட்டு வெளியே சென்றபின், தனது மகனின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

இதன் தொடர் கொண்டு மகனுடைய உடலில் புகுந்து கொண்ட தந்தையின் உயிரான்மா, மகனின் உடலில் வேதனையின் விஷத்தன்மையை அதிகமாக உருவாக்கி, மகனின் சிந்தனையை மாற்றி விடுகின்றது.

இந்நிலையில், தந்தை தான் உயிரோடு வாழும் காலத்தில்,
தன் மகன் சொத்துகளைக் காப்பாற்றுவானா,
ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறானே,
என்ன செய்யப் போகிறானோ
என்ற குழப்பத்தின் உணர்வுகளைத் தன்னுள் வளர்த்துக் கொண்ட நிலையில் இருந்தவரென்றால், உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா, தன் மகனின் உடலில் வாழும் காலத்தில், இதே குழப்ப உணர்வுகளைத் தூண்டி, மகன் சொத்துக்களைக் காப்பாற்ற முடியாத நிலையினை உருவாக்குகின்றது.

இப்படி மகன் தன் சிந்தனையை இழந்து, தன் சொத்துக்களை எல்லாம் இழந்து, நோய்வாய்ப்பட்டு, தன் உடலைக் காக்கும் திறனையும் இழந்து, செயலாக்கங்கள் குன்றப்பட்ட நிலையில் வாழ்கின்றான். பின், இதே உணர்வை வளர்த்து உடலை விட்டு பிரிந்து செல்லும் உயிரான்மா, பரமாத்மாவில் கலந்து ஐக்கியமாகி விடுகின்றது.

நாம் வயதான நிலையில், நோயில் இருக்கும் பொழுது வேதனை தாங்காத நிலையில்,
என்னைக் கொண்டு போய்விடு,
பரமாத்மாவில் ஐக்கியமாகி விடுஎன்று சொல்வோம்.

பரம் என்பது நமது பூமி. இதனின் ஆத்மாவில் வந்து ஐக்கியமாகி விடுகின்றோம். பரமாத்மாவில் ஐக்கியமானபின் என்னவாகின்றது? நமது ஆன்மாவில் எதனின் உணர்வுகளைச் சேர்த்திருந்தோமோ,
அதே போன்ற இன்னொரு ஜீவ ஆன்மா (உடல்) இருந்தால்,
அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுகின்றது.

பின், அதனின் உணர்வைக் கவர்ந்து, கவர்ந்த உணர்வுக்கொப்ப உடல் பெறுகின்றது என்பதை, நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு முறை யாம் குருதேவருடன், சென்னையிலிருந்து மும்பைக்கு, இரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது, இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை, அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து, மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல், உறவினர்களிடம் தண்ணீர் கொடு, அது கொடு, இது கொடுஎன்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ, மருத்துவர் சொன்னபடி உணவோ, தண்ணீரோ, ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாதுஎன்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ, “அடப்பாவிகளா, எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது, உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா?”, என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் நோயாளியைப் பார்த்து, “நீ சும்மா இருக்க மாட்டாயாஎன்று மிரட்டுகிறார்கள்.
       
உடன் வந்தவர்கள், நோயான பெண்மணியைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும் அம்மாஎன்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு, உறவினர்கள், “ஏனய்யா, என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா?, நீ ஏன் கேட்கிறாய்?” என்று சொன்னவுடன், நோயான பெண்மணி, பார், உதவி செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களேஎன்று எண்ணுகின்றார். 

சந்தர்ப்பம், இது போன்ற உணர்வுகளை நுகரும்பொழுது, உயிர் அதை, ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது. குருநாதர் இதைக் காண்பித்தார். ஆனால், அங்கு யாரும் தவறு செய்யவில்லை. 

மருத்துவர்கள் கூறிய அறிவுரையை, உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள். எதற்காக?. நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று.

ஆனால் நோயான பெண்மணியோ, “இப்படி அவஸ்தைப்படுகிறேனே, கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே, கொஞ்சம்கூட இரக்கம் இல்லையேஎன்று எண்ணுகின்றார்.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே, உறவினர்கள் வேகம் கொண்டு நீ பேசாமல் இருஎன்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி, “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம், என்னுடைய நோயின் தன்மை தெரியாமல், இப்படி சீறிப் பாய்கிறார்களே, வேதனைப்படுத்துகிறார்களேஎன்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.  இதெல்லாம் சந்தர்ப்பங்கள்.

இரயிலை விட்டு இறங்கியவுடன், நோயான பெண்மணியின் வீடு வரை எம்மை சென்றுவரச் சொல்லிவிட்டு, குருநாதர் ஒரு இடத்தில் இருந்துவிட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து, அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள், நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

இரயிலில் வரும்பொழுது, நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ, அவர்களுடைய நினைவு, நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வந்தது. மகராசி எனக்கு உதவி செய்தாளேஎன்ற எண்ணம் வந்தது.

ஆனால், உறவினர்களை நினைத்து, என்னுடைய எல்லா சொத்துக்களையும் வைத்துக் கொண்டு, துரோகம் செய்தார்களேஎன்று சாபமிட்டது.

இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில், சாப உணர்வுகள் விளைந்து பெருகி, அவர்கள் குடும்பத் தொழில் நசுங்கியது, குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.

இதையெல்லாம் பார்க்கும்படியாக, குருநாதர் எம்மை,  48  நாட்கள் அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து, பார்க்கும்படி செய்தார். ஒரு பக்கத்தில் அமர்ந்து, இங்கே என்ன நடக்கிறது என்று, பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில்,  நோயான பெண்மணிக்குப் பரிந்து பேசினார்களே, அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப்பக்கம் வந்து பார்த்தவுடனே, நோயான பெண்மணியின் உயிராத்மா, இவருடைய உடலுக்குள் வந்து,  தான் எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ, அதே வேதனையின் உணர்ச்சிகளை, இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார். ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது. இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது?
தொடர்ந்து, இவருடைய வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகி,
வியாபார மந்தம்,
தங்களை அறியாமலே குழந்தைகளை சீறிப் பேசுவது,
தவறான நிலையில் பேசுவது,
சங்கடங்கள் போன்ற பல இயக்கங்களை,
அங்கே எம்மைக் கண்டுணரும்படி செய்தார். 

இயற்கையின் இயக்கத்தில், சந்தர்ப்பம், மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது?  சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கோலமாமகரிஷி, ரிஷி நிலையை எப்படிப் பெற்றார் என்று அறிவதற்காக, மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில், யாம் தியானமிருந்து வந்தோம். அதற்காக மங்களூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு, குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்த குடும்பத்தில், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின், சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பா இறந்து போனார். அப்பா இறந்தவுடன், பையனுடைய அம்மா வேதனை கொள்கின்றார்.

பையனுக்கு, ஏற்கனவே மூத்த சகோதரி இருக்கிறார். அந்த அம்மாவோ  இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு, தன் கணவர் இறந்து விட்டாரே என்றும், இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வதுஎன்றும் எண்ணினார்கள்.

இப்படி, தன் கணவருடைய உணர்வை எடுத்துக் கொண்டபின், சிறிது நாட்களில், பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள். இந்த பையனுடைய அம்மாவுடைய அம்மா, அதாவது பையனுடைய பாட்டிதான், தொழில் செய்து, குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், பாட்டி தன் பேரனைப் பார்த்து, “நாசமாகப் போகிறவன், இவன் பிறந்தான், இரண்டு பேரைக் கொன்று விட்டான், தொலைந்து போடா, நாசமாகப் போகிறவனே”, என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.

பையனுடைய அக்காவோ, “அவன் என்ன செய்வான் பாட்டி, அவர்கள் இறந்து போனால், இவன் என்ன செய்வான், இவனா அவர்களைக் கொன்றான்என்று பையனுடைய சகோதரி, தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.

ஆனால் பாட்டி, “அவனுக்குச் சோறு போடாதே, வெளியே தள்ளிவிடு, எங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்என்று சொல்கிறது.

ஆனால் பையனுடைய அக்கா, “தம்பி என்ன செய்வான்என்று கூடுமான வரையில், தன் தம்பியைப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

பாட்டியோ, “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார், வியாபாரமும் கெட்டது, இருக்கின்ற சொத்தும் போனது”, என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின், தன் பேரனை வெடுக், வெடுக்என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள். 

தன் பேரன் மேல், பாட்டிக்கு வெறுப்பு அதிமான அதே நேரத்தில்,  பேத்தி மீது, அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள். இதனின் தொடர் கொண்டு பாட்டி இறந்த பின், பாட்டியின் உயிராத்மா, அதன் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின்,
பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ, 
அதே போன்று பையனின் சகோதரியும்,
தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில்,
தம்பியைப் பார்த்து, “தோலைந்து போடா, நாசமாகப் போடா
என்று சொன்னாள்.  அதன்படியே தம்பியையும் விரட்டினாள்.

ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள், மற்றொரு உடலுக்கு மாறுவதும், இதனின் உணர்ச்சிகள் வந்ததும், செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்று,  யாம் அறிந்து கொள்ளவே, குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.

அதற்கான இடத்தைக் காண்பித்து, “இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும், இதனுடைய நிலைகளை நீ பார்என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

இதன் தொடர் கொண்டு பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து, நோய் வந்து, பையனின் சகோதரியும் மடிந்து விட்டது.

பையனோ, ஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து, மற்றவர்களால் காக்கப்பட்டு, அவன் தொழிலில் பெரியவனாக வளர்ந்து விட்டான். ஒதுக்கப்பட்டாலும், தன் மீது பற்றுகொண்டு, தான் எப்படியும் வளர வேண்டும் என்று பற்று கொண்டு, மற்றவர்களின் அன்பைப் பெற ஆரம்பித்தான்.

மற்றவர்கள், பாவம் பையன் என்ன செய்வான்என்று எண்ணிய உணர்வு கொண்டு, அவனுக்கு உதவிகள் செய்தனர். அவன் இன்று, சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான். இன்றைக்கு அவன் அமெரிக்காவில் இருக்கின்றான். 

அவன் அனாதையாக இருந்தாலும், தன் உணர்வின் வேகத்தைக் கூட்டி, தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வு எடுத்து, இன்று விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான்,  இது நடந்த நிகழ்ச்சி. 

அவன் இப்பொழுது, அமெரிக்காவில் இருக்கின்றான். சந்தர்ப்பம் இருந்தால் இங்கே வருவான். அவனுடைய வாழ்க்கை எப்படி அமைந்தது என்ற உண்மையை யாம் அனுபவரீதியாக அறிந்து கொண்டோம்.

குருநாதர், யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காக, பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார். இப்படிப் போகச் சொன்ன பக்கம், ஒரு நகரமாக இருந்தது. குருநாதர் சொன்ன இடத்திற்குப் போனால், ஏற்கனைவே யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தம் அங்கே மண்ணில் கலந்து பதிவாகி இருந்தது. அதே மண்ணில், அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது. ஆனால், குறித்த நேரம், எந்த நேரம் கொல்லப்பட்டாரோ, அந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ, அந்த நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம், “அடப் பாவிகளா.., என்னைக் கொல்கிறீர்களே, என்னைக் கொல்கிறீர்களே..,” என்று சப்தம் வருகின்றது. இப்படி ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன், இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது? என்ன செய்கின்றது?

உடலில் விளைந்த உணர்வுகள், இறந்த பின் எப்படிப் பதிவாகிறது? என்ற நிலையைப் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர். அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி, இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது? சென்றபின், புகுந்து கொண்ட உடலில் எப்படி அணுக்கள் உருவாகின்றது? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்?
என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு
எம்மைச் சென்றுவரச் செய்து,
பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து,
அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.
(பக்கம் 44-47)
அபிஷேகம் என்பது என்ன? நாம் உயர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது, அது நம் உயிரான ஈசனுக்கு, அபிஷேகம் ஆகின்றது.
இதனின் உணர்வலைகள் உடல் முழுவதும் படர்கின்றது.. தெளிவாகும் உணர்வின் அணுவாக மாறி, நம்மைத் தெளிந்த அறிவுடையவராக ஆக்குன்றது. இதனை நம்மிடம் பெறச் செய்வதற்கே ஆலயங்களில் அபிஷேகமும், ஆராதனையும் செய்ய வைத்தார்கள் ஞானிகள். இது துவைதம்.

அருள்ஞானிகளின் அருள் உணர்வை எண்ணினால், அத்வைதம்.
இதன் வழி கொண்டு நுகரப்படும் பொழுது, விசிஷ்டாத்வைதம்.
நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி, நம்மை இயக்குகின்றது.

உணர்வின் தன்மை உடலானால் துவைதம். ஆகவே, நீங்கள் உயர்ந்த குணங்களை உங்களுடைய உடலாக ஆக்குங்கள்.

இருளான நிலைகளை அகற்றப் பழக வேண்டும்  என்பதற்குத்தான், ஞானிகள் துவைதம் எனும் நிலையாக உருவங்களை அமைத்து, நமக்கு உணர்த்தினார்கள்.

காவியப்படைப்புகள் அனைத்தும் அத்வைதம், காவியப்படைப்புகளின் கருத்துக்களை எண்ணும் பொழுது, அதனின் உணர்ச்சிகளை நாம் நுகர முடிகின்றது. நுகர்ந்தபின், அதனின் உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

ஆனால், இங்கே துவைதவாதிகளுக்கும், அத்வைதவாதிகளுக்கும், விசிஷ்டாத்வைதவாதிகளுக்கும், தர்க்கவாதம் நடந்து கொண்டே ருக்கும். அவரவர்கள், தாங்கள் சொல்வதுதான் உண்மை என்று, வாதம் செய்து கொண்டேயிருப்பார்கள்.

ரு முறை மது குருநாதர், ரிக்வேதத்தை தெளிவாக, பாடிக் காண்பித்தார். அதையே திருப்பி, தலைகீழாக பாடிக் காண்பித்தார். வேதங்கள் என்றால் என்ன? என்று தெளிவாக விளக்கிக் கூறினார். குருநாதரும் ஒரு பிராமணர்தான்.

ஒருமுறை ரிக் வேதத்தை, பாடமாகச் சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை, “இங்கே வாடாஎன்று தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.

குருநாதர், எமக்கு முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார். குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்என்று கேட்டார்.

ரிக் வேத ஆசிரியர் முழித்தார். “அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே, அது எப்படி என்று எனக்குச் சொல்”, என்று கேட்டார் குருநாதர்.

பிறகு குருநாதரே அந்த மந்திரங்களை, தலைகீழாக சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.

ரிக் வேத ஆசிரியர், “திரு திருவென்று முழித்தார்.

எமக்கு இவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள், பாடிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பேசுவது, அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.

இனி இதுமாதிரி தவறு செய்யாதேஎன்று ரிக் வேத ஆசிரியரை அடித்து,’போஎன்று கூறி விட்டார் குருநாதர். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து போனால் போதும் என்று, வேகமாகப் போய்விட்டார்.

பிறகு குருநாதர் எம்மிடம், “அவன் திருடன், காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தவறாகச் சொல்கிறான்என்று சொன்னார்.

மறுநாள், குருநாதரிடம் அடிவாங்கி ரிக் வேத ஆசிரியர் வந்தார். ரிக்வேத ஆசிரியர் குருநாதரைப் பற்றி எம்மிடம் “இவர் மனிதரே இல்லை, ரிஷிபிண்டம்”.
இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது. சொல் பிழையில்லாதபடி, சரியான சுருதியுடன் சொல்கிறார். அவர் அடித்த அடியில், நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது.

நான் இனி பாடம் சொல்லித்தரும் வேலைக்கே செல்ல மாட்டேன். என்னுடைய ஊர் உடுப்பிக்கே செல்கிறேன். அங்கு வேறு ஏதாவது வேலை பார்த்து, பிழைத்துக் கொள்கிறேன். உங்களுடைய அதிர்ஷ்டம், நீங்கள் அவரை குருவாகப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று கேட்டார்.

எனக்கு சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என்று கேட்டார். யாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து போய்வரச் சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.

உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ, அத்தனையையும் எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின்கம்பத்தை அடிப்பார்.
தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார்.
மின் கம்பத்தை அடித்துக்கொண்டே,
இந்த லைன், அந்த லைன் என்பார், குருநாதர்.

டேய்.., “மிளகாய் ஒரு லட்சம், “கோடி, கோடி என்பார். எமக்கு ஒன்றுமே புரியாது. .பைத்தியம் பிடித்தது போன்று பேசிக்கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். கோடி கோடி என்பார். சாமி கோடி இங்கே இருக்கிறது? என்போம்.

அந்தக் கோடி இல்லை என்பார். “ஈகோடி என்பார். மிளகாய் கோடி, கோடி என்பார். என்னென்னவோ கோடி என்பார், எமக்கு அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார், ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து, எத்தனை கோடி உணர்வுகளாக மாறுகின்றது, என்பதையெல்லாம் விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாக்கப்படும் பொழுது இதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது? .உணர்வுகள் எப்படி மாறுகின்றது? என்பதை குருநாதர் எமக்குச் சொல்வார்.
உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்வார்.
முதலில் சொல்லிவிடுவார்.
பின்னர் புரிய வைப்பார்.

இப்படி குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை, யாம் அப்படியே உங்களிடத்தில் பதிய வைக்கின்றோம். சந்தர்ப்பம் வரும் போது, இதன் நினைவு உங்களிடம் வரும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அது உங்கள் நினைவுக்கு வரும். அப்பொழுது, அதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும். எமது அருளாசிகள்.
(பக்கம் 56-59)
அன்றைய அரசர்கள் எப்படித் தவறு செய்தார்கள். அரசர் காலங்களில், மக்களை சூனியமாக்கி வைத்திருந்தார்கள்.
வேறொன்றும் வேண்டியதில்லை.
யாகம் செய், பாவம் போய்விடும்,
அர்ச்சனை செய், கஷ்டம் போய்விடும் என்று வழிப்படுத்தி,
உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் அறியவே முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள். இதன் தொடர்கொண்டு, உண்மையை நாம் மறந்தே விட்டோம். பொய்யை நம்பிவிட்டோம்.

கோயிலுக்கு நாம் பக்தியுடன் சென்று, நான் எண்ணியது நடக்கவில்லை,
என்னை இப்படிச் சோதிக்கின்றாயே,
கஷ்டம் தாங்க முடியவில்லை
என்னை உன் இடத்திற்கே கூட்டிக்கொண்டு போ
என்றெல்லாம் கோயிலில் போய் வேண்டுவார்கள்.

இதே பக்தி கொண்டு வணங்கும் பொழுது, இதே பக்தி கொண்டு உடலை விட்டு பிரிந்து சென்ற பிறிதொரு ஆன்மா இவர்கள், உடலில் புகுந்து கொண்டு, ஆட ஆரம்பித்துவிடும்,
ஆக, ஆவியின் தன்மைதான் நமக்குள் வருகின்றது.
இப்படித்தான், நாம் இயங்கிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால், மெய்ஞானிகள் காண்பித்த உண்மை நிலை என்ன?
மனிதர்களிடம் இருக்கக்கூடிய குணத்தின் சக்தியை,
சிலையாக உருவாக்கினார்கள்.
சிலையின் தலையில் வைரக் கிரீடம் வைத்து,
தங்க ஆபரணங்களைப் போட்டு,
மலர் மாலைகளைப் போட்டு,
பதார்த்தங்களை வைத்து,
இருட்டறையில் வைத்து திரையைப்போட்டு, மூடி,
நாம் இங்கிருந்து போனதும் திரையை நீக்கி
தீபாராதனை காண்பிப்பார்கள்.

இதன் பொருள் என்னவென்றால், திரையை நீக்கி, தீபாராதனை காண்பிக்கப்படும் பொழுது இருளில் இருக்கும் பொருள் தெரிகின்றது.

ஆகவே, இதைப் போன்று நாங்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்என்று இந்த உணர்வை நம்முள் அபிஷேகிக்க வேண்டும்.

இந்த உணர்வை நம்முள் எடுக்கும் பொழுது, இந்த உணர்வின் ஒலிகள், உணர்ச்சிகள் உடல் முழுவதும் படர்கின்றது. விஷ்ணுவின் கையில் என்ன இருக்கின்றது சங்கும், சக்கரமும்.

நம்முள் இதனின் உணர்வின் ஒலி ஆனபின், இந்த உணர்வின் அதிர்வுகள், நமது உடல் முழுவதும் சக்கரம் போன்று சுழல்கின்றது. நமது உயிர் எப்படி இயக்குகின்றது? என்பதை அங்கே தெளிவாகக் காண்பிக்கிறார்கள்.

நாங்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
இந்த ஆலயம் வருவோரெல்லாம், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
ங்கள் குடும்பத்திலுள்ளோர், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலுள்ளோர் அனைவரும், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று நாம் நுகரவேண்டும்.

அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும், நமது உயிர் ஓம் நமச்சிவாயஎன்று உணர்வின் அணுவாக மாற்றி, நமது உடலாக மாற்றிக் கொண்டேயிருக்கும். ஆகவே,
நாம் எதை நமது உடலாக்க வேண்டும்?
எதைப் பிரணவமாக்க வேண்டும்? என்று
ஆலயத்தின் பண்புகள்
இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆக, பக்தி என்பது எது? கீதையில், நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றுரைக்கப்படுகின்றது. அதாவது, யாம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, இதனின் உணர்வின் அணுவாக எமக்குள் மாறுகின்றது.

கீதையைச் சொல்வது யார்? கண்ணன். அதாவது, நாம் ஒரு மனிதரைப் பார்க்கின்றோம், அவர் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இதனின் உணர்வின் தன்மை நம்முள் இணைந்து, நம்மை உயர்த்துகின்றது. நமது சொல் அவரை உயர்த்தப் பயன்படுகின்றது.

இப்படி இங்கே கண்ணின் இயக்கங்களுக்கு, இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள். கோயிலைச் சாதரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு எவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.

சாதரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெறவேண்டும், அகஸ்தியர்  கண்டுணர்ந்த உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்ற நிலைக்காக வேண்டி, ஞானிகள் காவியங்களையும், ஆலயங்களையும் படைத்தார்கள்.

இயற்கையின் இயக்க உண்மைகளை அறிந்தவர்கள் நீங்கள் இனி, அர்ச்சனை, அபிஷேகம், யாகம் செய்து, பாவத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்துப் போய் விடாதீர்கள்.
உண்மையான யாகம் எது?
உண்மையான யாகம் என்பது,
நமது உயிர் ஒரு நெருப்பு,
நாம் எந்த உணர்வின் தன்மையினை
நமது உயிரான நெருப்பில் போடுகின்றோமோ,
இதனின் உணர்வலைகளை நமது உயிர்,
உடல் முழுவதும் பரப்பும்.
உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது,
பிறருடைய நிலைகளை இயக்கும்.

நீங்கள் ஒருவர் மீது, மயக்கப் பொடியைப் போட்டால் மயங்கி விடுகிறார். நல்ல நறுமணத்தைக் கொடுத்தால், மகிழ்ச்சி ஆகின்றார். நல்ல உணர்வின் தன்மையை, சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, கேட்போர் உணர்வுகளை இனிமை படச்செய்கின்றது.
நமக்குள் நட்பு என்ற நிலை வளர்கின்றது.
பகைமை என்ற நிலைகளை மாற்றுகின்றது.
அருளுணர்வை நமக்குள் கூட்டுகின்றது.
ஆகவே, கோயில்களை நாம் மதித்திட வேண்டும்.

நமது உடல் தான் கோயில் ஒவ்வொரு உயிரும் கடவுள். உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, உங்கள் உடலை ஆலயமாக மதித்து, நீங்கள் அருள்சக்தி பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும், உங்களுடைய ஆன்மா பரிசுத்தமாக வேண்டும் என்று, எமது குருநாதர் காண்பித்த அருள்வழியில் யாம் உபதேசிக்கின்றோம்.

இதனால், உங்களிடத்தில் அருளுணர்வும் பெருகுகின்றது. அருள் ஒளி பெருகுகின்றது. உங்களுடைய ஈசனான உயிர் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாகின்றது.

இப்படி இதனின் உணர்வுகளை உங்களிடத்தில் எழுப்பி உங்களுடைய ஆன்மாவைச் சுத்தப்படுத்தி, எமது ஆன்மாவையும் யாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

சூரியன் பல உணர்வுகளை எடுத்து, ஒளியாக மாற்றுகின்றது. இதுபோன்று, உயிரானது தோன்றி தன்னுள் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டபின், துருவ நட்சத்திரமாக இருக்கின்றது. மனிதரிடம் உள்ள ஆறாவது அறிவு ஏழாவது நிலை ஆகும் போது, சப்தரிஷி மண்டலம் ஆகின்றது. அதனால்தான்
சூரியனிடமிருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு,
ஏழாவது ஒளி,
மனிதருடைய அறிவு ஆறு,
தன் உணர்வின் தன்மை அறிந்து எடுப்பது ஏழு.
இதைத்தான், ஈரேழு லோகத்தையும் வென்றவன், விண் செல்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
(பக்கம் 77-79)
மனிதர்கள் ஆட்டுக்கறியை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால், ஆட்டைக் கொன்றால், கொன்றவர் உடலுக்குள் ஆட்டின் உயிர் செல்கின்றது.

ஆட்டுக்கறியைத் தின்றவரின் உடலில் அந்த ருசி வருகின்றது.
ஆட்டுக்கறியைச் சாப்பிட்டுவிட்டு, ருசி கண்டு,
உடலில் விளைந்த அணுக்களின் இயக்கத்தால்,
நமது உயிர், உடலை விட்டுச்சென்றபின்,    
உயிர் நேராக, ஆட்டின் ஈர்ப்பிற்குள் சென்றுவிடும்.

மனிதராக உருவாக்கிய உயிரில், ஆட்டுக்கறியை ருசித்துப் பழக்கமான உணர்வுகள் சேர்ந்தபின், உயிர் ஆட்டிற்குள் சென்று சேரும். இன்று டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள், “கறி சாப்பிடுங்கள் உடல் திடமாக இருக்கும் என்று.

ஆனால் விஷத்தின் தன்மை கொண்டு இன்று மனிதனாக உள்ளோம். நாளை ஆடாகப் பிறக்கத் தயாராகிறோம்.

யாம், எம்முடைய இளைய வயதில் வேட்டைக்குச் செல்வோம். வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், இரண்டு மூன்று நாள் அங்கேயே இருப்போம்.

கோழி, புறா போன்றவைகளை கையில் எடுத்துச் சென்றிருப்போம். கொண்டு போனவைகளை வேக வைத்துச் சாப்பிடுவோம். இல்லையெனில், பச்சைப் புறாவில் நிறையச் சத்து இருக்கிறது, என்று காட்டிற்குச் சென்று, பச்சைப் புறாவை அடித்து, அங்கேயே வேக வைத்துச் சாப்பிடுவோம். வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம்.

பிற்காலத்தில், குருநாதர் இந்தச் சம்பவங்களை எடுத்துக்கூறி, “நீ இத்தனை பறவைகளைச் சாப்பிட்டிருக்கிறாய், இவைகள் மனிதனாகப் பிறக்கப்போகிறது”.

அது எத்தனை இம்சைப்பட்டு வந்துள்ளது? உன்னிடம் வந்து, நீ இறந்தபின், உன் சிநேகிதனிடம் சென்று, அவன் ஈர்ப்பிற்குள் போய் அவனின் உணர்வை எடுத்து, அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப்போகின்றது என்று கூறினார்.

நிறையச் சாப்பிடுஎன்று கூறினார் குருநாதர்.

சாமி, சாப்பிட்டால் இப்படி ஆகிவிடும் என்கிறீர்களேஎன்று குருநாதரிடம் யாம் கேட்டோம்.

தற்கு, “உனக்கு விருப்பமில்லை என்றால் கறி சாப்பிடாதேஎன்று கூறினார் குருநாதர். நீ கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினாலும், உடலில் உருவான அணுக்கள் கேட்கும். அப்பொழுது, அதனின் எண்ணத்தைத் தடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.
              
சாதாரண நிலையில் கறி சாப்பிடாமல் இருந்தாலும், கறியைப் பார்த்ததும், சாப்பிட வேண்டும் என்று ஏக்கமானால், அது ஒரு கிலோ கறியை சாப்பிட்டதற்குச் சமமாகும்என்று கூறினார்.

இப்படி குருநாதர் சொல்லும் பொழுதெல்லாம், “ஏன்தான், இவரிடம் சிக்கினோமோ?” என்று பயம் அதிகமாகிவிடும், ஆடாக, மாடாகப் பிறந்தால் என்ன செய்வது? என்ற பயம் எமக்குள் அதிகமாகும்.

பிறகு, குருநாதர் எம்மைப்பார்த்து
நீ விட வேண்டும் என்று விரும்பினாலும்,
உனக்கு கறி சாப்பிட ஆசை தோன்றுகிறது பார்,
இதனால் நீ 10 கிலோ கறி சாப்பிடுகிறாய்
என்று பயமுறுத்துவார்.

உதாரணமாக, உடலில் ஒரு நோயாகின்றது. நோயைத் தணிப்பதற்கான மருந்தைத் தயார் செய்வதற்கு, விஷத்தை எடுத்து இதற்கு சக்தி கொடுத்தவுடன், நமது உடலிலுள்ள நோயின் அணுக்களைக் கொல்கின்றது. மருந்தின் அணுக்கள் பெருகுகின்றது. நோயின் தன்மை தணிகின்றது.

விஷத்தை வென்றவர் அகஸ்தியர்.
அகஸ்தியரின் உணர்வை நமக்குள் எடுத்தால்,
நம்முள் உள்ள விஷங்களைக் கொஞ்சம்,
கொஞ்சமாக அடக்குகின்றது. அப்பொழுது,
நீ கறி சாப்பிட நினைத்தாலும், உடல் ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார், குருநாதர்.

யாம், யாரையும் கறி சாப்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும். இதுதான் இயற்கை நியதி.
இதனால், நாம் எப்படி இருக்க வேண்டும்?.
நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
(பக்கம் 88-92)
நாம் யாரிடமாவது நன்றாகப் பழகிவிட்டால், அவரை ஏமாற்றி அவரிடமிருந்து பணம் பெறுவதற்குத்தான் வழி காண்கிறோம். அல்லது ஏமாற்றி ஏதாவது ஒரு பொருளைப் பெறுவதற்குத்தான் கற்றிருக்கிறோம். ஆக, போதுமென்ற மனம் நமக்கு இல்லை. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர். அதன் வழிதான் நமக்குள் செயலாக்கும்.

இதனால் எதிர்காலம் எப்படியாகின்றது என்கின்ற பொழுது, விஷத்தன்மைகள் தான் அதிகமாகப் பரவுகின்றது. ஆக, மக்களாகிய நாம் எப்படி இருக்கின்றோமோ அது போன்றுதான் நாடும் அரசும் இருக்கும்.

ஏனென்றால், மக்களில் இருந்து தேர்ந்தெடுத்துதான் ஆட்சி புரிகின்றவர்கள் வருகின்றார்கள். ஆகவே, நாடு நலமாக இருக்க வேண்டுமென்றால், நல்ல ஒழுக்கங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.

ஏனென்றால், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒற்றுமை மக்களிடம் இருந்தால் கண்டிப்பாக நல்லது நடக்கும். ஆகவே, நம்மிடம் உள்ள தீமைகளை முதலில் நீக்கிப் பழகவேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்று இன்று நாம் பாடுகின்றோம். தென் நாட்டில் தோன்றிய அகஸ்தியர்தான், இந்த பூமியைத் திசை திருப்பி, பூமியை ஒரு நிலைப்படுத்தியுள்ளார்.

ஆனால், இன்று விஞ்ஞான அறிவால் பூமி திசை மாறும் நிலைக்கு வந்தாகிவிட்டது. ஒரு பக்கம் அணுகுண்டுகளும், மற்றவைகளும் வெடிக்கப்படும் பொழுது, ஒரு பக்கம், மேகங்கள் கூட்டம் அதிகமாகின்றது. அப்பொழுது பூமியின் எடை அதிகமானால் பூமி திரும்பக்கூடிய நிலை வருகின்றது.

அதே சமயம், ஓசான் திரை கிழிந்து கதிரியக்கத்தன்மை பூமியில் பரவுகின்றது. ஆகவே கடல் நீர் பெருகுகின்றது. கடல் நீர் பெருகும் பொழுது நிலங்கள் குறைகின்றது.

ஆனால், மக்கள் பெருக்கம் அதிகமாகின்றது.
மழை பெய்வது குறைகின்றது.
இந்த நிலைகளில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கடைசி நிலையில் இருக்கின்றோம்.
ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும்?

ராமாயணத்தில், இராமர் என்ன செய்தார் என்று காண்பிக்கின்றார்கள். இராமர் பூஜைக்கு காலதாமதமாகிவிட்டது என்று, மணலில் சிவலிங்கம் அமைத்து, இராமேஸ்வரத்தில் வணங்குகின்றார்கள். இது எண்ணத்தால் உருவானநிலை, என்று காண்பிக்கின்றார்கள்.

கோடிக்கரையில் நாம் இருக்கின்றோம். ஆகவே, நாம் இந்த உடலைவிட்டுச் சென்றுவிட்டால் பெற வேண்டியது எது? பிறவியில்லா நிலையை பெறுவதே.

ஆகவே, பிறவியில்லா நிலை பெறுவது எங்ஙனம்? என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.

நமது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் பார்க்கும் குடும்பம் எல்லாம், சந்தோஷமாக இருக்க வேண்டும். எங்கள் தெருவில் உள்ள குடும்பத்தினர் அனைவரும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்பொழுது, நீங்கள் குடியிருக்கும் தெருவில், குடியிருக்கும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்த உணர்வுகள் பெறுவார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் பொறுமையும், பொறுப்பும் பெறும்பொழுது, காற்று மண்டலம் தூய்மையடைகின்றது. காற்று மண்டலம் தூய்மையடைந்த இடத்தில், விவசாயம் நன்றாக இருக்கும்.

உதாரணமாக, மக்கள் சங்கடமான நிலைகளில் இருக்கும் பொழுது அந்த ஊர்களில் மழை பெய்யாது. காரணம்,
சங்கடமான உணர்வின் தன்மை
மேகங்களில் கலக்கப்படும் பொழுது,
மழை மேகங்கள் கலைந்து விடுகின்றன.

பக்கத்து ஊரில் மழை பெய்யும். ஆனால், இங்கே மழை பெய்யாது. இதைப்போன்று,
நாம் எடுத்துக்கொண்ட உணர்வுக்குத்தக்க
மழை மேகங்கள் கூடும்
அல்லது விலகும்.

வேதனையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது, மழை பொய்த்து தரித்திரமே வளரும். இவைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும்,
நமது ஊர் நன்றாக இருக்க வேண்டும்.
நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை,
முழுமையாகப் பாய்ச்சிப்பழக வேண்டும்.

நாட்டில் வாழ்வது யார்? நாம் தானே, நாட்டில் ஜாதி, மதம், இன பேதங்களை வளர்த்து, நாம் சண்டையிடும் பொழுது, இதனின் உணர்வுகள் மேகங்களை கலைக்கச்செய்து, மழையில்லாமல் செய்துவிடுகின்றது.

ஒருமுறை குருநாதர், அகஸ்தியர் தியானம் செய்த மலைப்பகுதிக்கு எம்மை போகச்சொன்னார். அகஸ்தியர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் சக்தி பெற்றது.
அவருடைய பாதம் பட்ட இடமெல்லாம், மேகத்தைக் கவர்ந்து நீராக மாற்றும் தன்மை வாய்ந்தது.

குருநாதர் போகச்சொன்ன இடத்தில், மலை உச்சியில் தண்ணீர் இருந்தது. ஆனால், மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை. ஆக, மலை உச்சியில் தண்ணீர் இருக்கிறதென்றால் காரணம் என்ன?
குருநாதர் எம்மை ஒரு இடத்தில் அமரச்சொல்லி, “சங்கடமாக, வெறுப்பாக, மற்றவர்களை மோசமாக நினைத்துக்கொண்டே இருஎன்று கூறினார்.

யாமும் குருநாதர் சொல்லியவாறு எண்ணிக்கொண்டிருந்தோம். அது சமயம் மேகங்கள் வருகின்றன. ஆனால், வந்த மேகங்கள் பிரிந்து சென்றன. ஈரப்பசையே அற்றுப்போகின்றது.

இப்படி மனிதர்க்கு உண்டான உணர்வுகள், மழை மேகங்களை எப்படி விலக்குகின்றது? என்பதை, குருநாதர் எமக்கு அங்கே தெளிவாக உணர்த்தினார்.

இவைகளையெல்லாம் யாம் அறிவதற்காக, காடு மலை என்று பல பகுதிகளுக்கு அலைந்தோம். ஆனால், யாம் பெற்ற பேருண்மைகளை உங்களிடத்தில் எளிதாகப் பதிய வைக்கின்றோம்.

நமது தியான வழி அன்பர்கள் எந்தெந்த ஊர்களில் இருக்கிறீர்களோ, அந்தந்த ஊரில் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

நீங்கள் உங்களிடத்தில் அருள்ஞான உணர்வுகளைப் பெருக்கி, எந்தெந்த ஊரில் இருக்கின்றீர்களோ அந்த ஊர் மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி பெறவேண்டும். ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்று எண்ணி ஏங்கி தியானியுங்கள். இதன் தொடர்கொண்டு,
அவ்வூரில் மழை சீராக இருக்கும்,
விவசாயம் செழித்து வளரும்.
நமது ஊரும், நாடும் நன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், அரவணைத்து வாழும் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இதில் அந்த நாடு, இந்த நாடு என்று பிரித்து விடக்கூடாது. நாட்டு மக்கள் அனைவரும், ஒற்றுமை உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாகப் பெருகும் பொழுது, உலகத்தைக் காக்கும் தன்மையை நாம் நிச்சயம் பெறமுடியும். எதிர்காலத்தில், தமிழ்நாடுதான் உலகைக் காக்கப் போகின்றது.
(பக்கம் 94-96)
குருநாதர் காண்பித்த அருள்வழியில், நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்சக்தியைப் பெற, தவறக்கூடாது.
நாடு நலமாக இருக்க வேண்டும்,
நமது ஊரும் நலமாக இருக்க வேண்டும்,
என்று ஒவ்வொரு மனிதரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணினால், தீமைகள் நமக்குள் வராது. நம்மைப் பாதுகாக்கின்றது. ஆகவே, தீமைகளை அகற்றும் அருள் உணர்வுகளைப்  பெருக்க, பெருக்க புவியில் அருளுணர்வுகள் படரப்படர, தீய உணர்வுகள் அகன்று சென்றுவிடும்.

இன்று, தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் மழைவளம் குறைந்துவிட்டது. மனிதர்கள், மற்றவர்களை அரவணைத்து இயக்கும் உணர்வுகள் குறைந்துவிட்டதனால், மழை மேகங்கள் ஒதுங்குகின்றது. மழையும் பொய்த்துப் போகின்றது.

ஒன்றுபட்டு வாழவேண்டும், நாடு நலமாக இருக்க வேண்டும், என்ற மக்களின் உணர்வுகள் மலேசியாவையும், சிங்கப்பூரையும் சொர்க்கமாக மாற்றியதோ, இதைப்போன்று, நமது தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தமிழ்நாட்டை உயர்த்துவோம், அழகான நகரமாக்குவோம், மகிழ்ந்த நிலைகளை உருவாக்குவோம் என்ற எண்ணங்களைப் பெருக்கி, தமிழ்நாட்டையும் சொர்க்கமாக்குவோம்.

நாட்டையும், அரசாங்கத்தையும் குறை கூறும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டிருந்தால், ஆட்சி நடத்தி வருபவர்களை, குறைவான செயல்களுக்கே அழைத்துச் செல்லும்.

அன்று அரசர்கள் இந்நாட்டை வழிநடத்திச் சென்றார்கள். ஆனால், அரசர்கள் தம் சுயநலத்திற்கே பயன்படுத்தினார்கள். ஆனால், இன்று இருப்பதோ மக்கள் அரசாங்கம்.

ஆகையால், அரசாங்க மேதைகள் அனைவரும் அருள்மகரிஷிகளின் அருளுணர்வுகள் பெற வேண்டும். அவர்கள் உயர்ந்த பண்புகள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தோமானால், இதனின் உணர்வுகள் அரசாங்கத்தைச் சீர்படுத்த உதவும்.

யாம் பிரித்துச் சொல்லவில்லை. அரவணைத்து வாழும் உணர்வின் தன்மை கொண்டு, எந்நாட்டவர்க்கும் இதனின் உணர்வலைகளைப் பாய்ச்சி, அவர்கள் பண்பட்ட நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால், அந்நாடு நலமாகும்.

ஒரு நாட்டுடன் ஒரு நாடு, ஒன்றியேதான் வாழ்கின்றது.
ஒரு மனிதருடன் ஒரு மனிதர், ஒன்றியேதான் வாழ்கின்றார்.
இதைப்போன்று, இவ்வுலகில் யாரும் பிரிந்து வாழவில்லை.
                                            
நமது சூரியனும், பேரண்டத்திலுள்ள மற்ற சூரியன்களும் பிரிந்து வாழவில்லை. இதன் உணர்வு அதற்கும், அதன் உணர்வு இதற்கும் என்று பகிர்ந்து கொண்டுதான் வாழ்கின்றன. எல்லாமே ஒன்றி, இணைந்துதான் வாழ்கின்றன.

ஒரு குடும்பத்தில் பெண்கள் வாடிய நிலையில் இருந்தால், அக்குடும்பத்தினர் விவசாயம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் எத்தகைய பயிர்களை விளைய வைத்தாலும் அவை வாடியே போகும்.

பெண்கள் வாடிய நிலையில் இருக்கும்போது, அக்குடும்பத்தினர் தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழில் நசியும். ஆகையினால், இதனின் உண்மைகளை உணர்ந்து, ஒவ்வொரு குடும்பத்தினரும், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நிலையையும், கணவன் மனைவி இருமனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழும் நிலையையும் குடும்பத்தில் உருவாக்க வேண்டும்.

அதற்கு, துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வை தங்களுள் பெறவேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை, நாம் எடுத்துப்பழக வேண்டும்.

வீட்டில் எத்தனை செய்வினைகள் இருந்தாலும் சரி, தோஷங்கள் ஆகிவிட்டது, பாவ வினைகள் வந்துவிட்டது என்ற நிலைகள் இருந்தாலும் சரி, குடும்பத்தில் ஒற்றுமையுடன் துருவ தியானத்தைக் கடைபிடித்து வரும் பொழுது, அங்கே துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வுகள் படர்ந்து, அனைத்து தீய வினைகளையும் நீக்குகின்றது. உங்கள் குடும்பத்தில், எத்தனையோ நற்பலன்களையும் விளைவிக்கின்றது.
(பக்கம் 96-98)
ஜோசியம், ஜாதகம் கேட்டு, அவைகளால் நன்மை ஏற்படும் என்று யாகங்கள் செய்து, பாவங்களில் விழ வேண்டாம். யாகம் செய்தால், அது நம்மைப் பாவ நிலைக்கே அழைத்துச் செல்கின்றது.

உண்மையான யாகம் என்பது, நமது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வைப் பெறவேண்டும் என்று, இதனின் உணர்வை
நமது உயிரான நெருப்பினுள் போட்டு,
இதனின் உணர்வின் எண்ண அலைகளை
நமது வீட்டினுள் பரப்ப வேண்டும்.

அப்படிப் பரப்பப்படும் பொழுது, நமது வீட்டில் எத்தகைய சாப அலைகள் இருந்தாலும் சரி, எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் சரி, அவைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.

இதைப்போன்று, ஒவ்வொரு நாளும் காலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து துருவதியானத்தில் அமரும் பொழுது, பிரதோஷம், அதாவது மற்றவர்களுடைய கஷ்டங்களை, வேதனைகளைக் கேட்டறியும் பொழுது, அவைகள் நம்மிடத்தில் தோஷங்களாக மாறி, தீய வினைகளை உண்டாக்குவதைத் தடுக்க முடியும்.

மற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும்
நாங்கள் பெற வேண்டும்,
எங்கள் இல்லம் முழுவதும் படர வேண்டும்,
எங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பெறவேண்டும்.
எங்களிடம் பணிபுரிகின்ற அனைவரும் பெற வேண்டும்.
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும், ஒன்றுபட்டு அரவணைத்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று, துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வுடன் இணைத்து, உங்கள் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால், உங்களுக்குள் உள்ள அரும்பெரும் சக்தியை
நீங்கள் காண முடியும், உணர முடியும்.

பக்கத்து வீட்டுக்காரர்களோ, மற்றவர்களோ உங்களை துயரப்படுத்திக் கொண்டிருந்தால், “அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி பெறவேண்டும், அவர்கள் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி, அவர்கள் உணர்வுகள் வருவதைத் தடுத்து நமது உணர்வுகள் பரப்பப்படும் பொழுது, அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். பகைமை உணர்வுகளை மாற்றவும் முடியும்.

ஆகவே, இதைப்போன்று அகஸ்திய மாமகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை, அருள் ஒளியின் உணர்வினை நாம் பெற்றோம் என்றால்,
நாம் தெளிந்த மனம் பெறலாம்.
உலகை அறியலாம்,
உலகைக் காக்கலாம்,
நாட்டைக் காக்கலாம்,
நமது குடும்பத்தையும் காக்கலாம்.

இன்றைய காலம் விஞ்ஞான யுகமாக இருக்கின்றது. ஆனால், விஞ்ஞான அறிவு, மனிதர்களைத் தீமைகளின் நிலைகளுக்கே அழைத்துச் செல்கின்றது. மனிதரின் உணர்வுகளைச் சீர்குலையச் செய்யும் நிலைகளையும், மனிதர்களிடையே சிந்தனையற்ற நிலைகளையும் உருவாக்குகின்றனர்.

இந்நிலையில், நமது குருநாதர் காண்பித்த அருள்வழியில்,
தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று
மீண்டும் இவ்வுலகத்தைக் காக்கும் நிலைகள்
தென் நாட்டில்தான் தோன்றும்.

தென்னாட்டிலுள்ள ஆண்களும், பெண்களும் தங்களுள் அரும் பெரும் சக்தியை உருவாக்கி, இந்நாட்டு மக்களும், உலக மக்கள் அனைவரும், உண்மையின் உணர்வுகளைப் பெறும்படி செய்து, உலகத்தை காக்கும் உணர்வுகளாக நமது உணர்வுகளை வளர்த்து, நம்மையும் காத்து நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி ல்லை என்ற நிலையை அடையும் தருணத்தை நாம் பெறுதல் வேண்டும்.
               
ஏனென்றால், நமது உடல் எப்போதுமே நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலால் தேடிய செல்வமும், நமக்குச் சொந்தமில்லை.

நமது உயிரில் ஒன்றும் உணர்வாக,
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இணைத்து,
அதைச் சொந்தமாக்கி உயிருடன் ஒன்றி,
என்றுமே அழியா ஒளிச்சரீரமாக, என்றும் பதினாறு என்ற நிலையாக வாழ்ந்து வளர்ந்திடும் நிலைகள் அனைவரும் பெறவேண்டும். எமது அருளாசிகள்.