ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2013

முழுமையான தியானம், தவம்

1. தியானம்
.ம் ஈஸ்வரா குருதேவா

அம்மா அப்பா அருளால்மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால்அகஸ்தியர் துருவனாகிதுருவமகரிஷியாகிதுருவ நட்சத்திரமான அந்த பேரருளை பெற வேண்டும்
என்று உங்கள் உயிரான ஈசனிடம்அந்த ஆறாவது அறிவை வைத்துஉங்கள் எண்ணத்தை செலுத்துங்கள். இப்பொழுது

குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
என்று  கண்ணிலே ஏங்கும் பொழுதுஅந்த கண்ணிலே ஈர்க்கும் சக்தி வரும். கொஞ்சம் கனமாக இருக்கும். மெதுவாக கண்களை மூடுங்கள்.
“”குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி தியானியுங்கள். இப்பொழுது உயிர் வழிஅந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் ஏங்கி பெறும் பொழுது உயிரின் பாகம் அது வலிமை பெறுகின்றது. இப்பொழுது அதை எடுத்து உயிரின் பாகம் வரும் பொழுது ம் பிரணவம்ஆகதுருவ நட்சத்திரத்தின் இயக்கமாகநம் உடலிலே மாறுகின்றது.

நமது உடலில் உள்ள தீமையான அணுக்களுக்குஆகாரம் மூக்கின் வழி சென்றுதான் சேருகின்றது. இப்பொழுது அங்கு போகாதபடி தடைப்படுத்துகின்றோம். 

இப்பொழுது உயிரிலேஅந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி மோதும்போதுஅந்த உணர்வின் அறிவுஉங்களுக்குள் இயக்கமாக ஆகப்படும்போதுஅந்த ஈர்க்கும் சக்தி கிடைக்கின்றது. ஒரு நிமிடம் ஏங்கி தியானிப்போம்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து. எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள்ஜீவ ஆன்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா

நாம் எதை எண்ணினாலும்அந்த உணர்வுகள்நமக்குள் இரத்தமாக மாறிஜீவ அணுவாக மாறுகின்றது. அப்போது அந்த ஜீவ அணுவிற்குநாம் கண்ணின் நினைவு கொண்டுஅது செயல்படுத்தும் பொழுதுஅந்த தீமை என்ற நிலை உருவாகாதபடி தடுக்கின்றது. தீங்கு செய்ததும் அணுவாக வருகின்றது. அதை எண்ணும்போதுநமக்கு தீமை விளைவிக்கின்றது. நல்லது செய்ததும் அணுவாக வருகின்றது. அது நமக்கு நல்லது செய்கின்றது. ஒருவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால்வேதனைப்படும் உணர்வை உருவாக்குகின்றது. அவ்வுணர்வால் வேதனைப்பட்ட ஒருவன் ஜீவான்மாநமக்குள் வந்தால் ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆனால் அதனால் வேதனையை மாற்ற முடியாது.

குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள்ஜீவ ஆன்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள். இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும். இந்த வலிமை பெறும்போதுஉங்கள் உடலுக்குள் தீமையை இழுக்கும்உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வெறுப்புவேதனைசலிப்புகோபம்இது மாதிரி   எத்தனையோ வகையான தீமையான உணர்வுகளைஉங்கள் உடலின் ஈர்ப்பை விட்டு தள்ளிவிடுகின்றது. உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் வலிமை பெறுகின்றது. இவ்வாறு சுத்தப்படுத்திவிட்டு,



குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடலிலும் பெருங்குடலிலும் கலந்துசிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்ற உணர்வினை செலுத்துங்கள். இப்பொழுது சிறுகுடல்பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடையும் பொழுதுஉங்கள் குடல்களில் இதற்கு முன்னால் வேதனைவெறுப்புஎன்ற உணர்வுகள் பட்டிருந்தாலும்அந்த சிறுகுடலில் உள்ள அணுக்கள் வீரியமடையப்படும் பொழுதுகுடல் புண்ணோகுடல் வாதங்களோஇதைப் போன்ற நிலைகள் இருந்தால் அவைகள் நீங்கி நல்ல குடலாக சிறுகுடலை உருவாக்க முடியும். அதனால்,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
என்று நினைவைச் செலுத்துங்கள். சிறுகுடல் பெருங்குடல்களில் வாத நீர்கள் இருந்தால்சரியாக ஜீரணிக்க முடியாது. புளித்த ஏப்பங்கள் வரும்குடல் வாதங்கள் வரும்குடல் புண் வரும். இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க,
எங்கள் சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திடவேண்டும்
என்று கண்ணின் நினைவைசிறுகுடலிலும் பெருங்குடலிலும் செலுத்திஒரு நிமிடம் ஏங்கி தியானியுங்கள். இப்பொழுது அது உற்சாகம் அடைவதை உங்களால் உணர முடியும்.



குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்களில் கலந்துகணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
இந்த கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை செலுத்தப்படும்பொழுதுஅந்த கணையங்களை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடைவதை உணர முடியும்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரலில் கலந்துகல்லீரலையும் மண்ணீரலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள். நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் வெறுப்புவேதனை போன்ற உணர்வுகள் நம் ஆகாரத்துடன் கலந்துநம் இரத்தத்துடன் கலந்துஇரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை விஷத்தின் தன்மையானால்கல்லீரல் மண்ணீரல் விஷத்தன்மையானால்இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிஷத்தன்மையான அணுக்கள் அதை மறைக்கும் பொழுதுகல்லீரல்மண்ணீரல் வீக்கமாகும். அங்கே வலியும் ஏற்படும். வேதனைபட்டோரைக் கண்டால்கல்லீரல் மண்ணீரல்களில் வீக்கம் வருவதைப் பார்க்கலாம். இது போன்ற நிலைகள் வராமல் தடுப்பதற்குவெறுப்புவேதனை உணர்வு கொண்டவர்களைப் பார்க்கும் பொழுது,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலையும் மண்ணீரலையும் உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
என்று ஏங்கி தியானியுங்கள். ஏனென்றால்  இன்ஜெக்சன் செய்வது மாதிரிஅந்த அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டும்போது,  அந்த விஷத்தை மாற்றியமைத்துஇரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை வருகின்றது.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலில் கலந்துநுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று கண்ணின் நினைவைநுரையீரலில் செலுத்தி அதை வீரியமடையச் செய்யுங்கள். நேரடியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுஅங்கே நுரையீரலில் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.
இராமாயணத்தில் சொன்ன மாதிரிராமனின் பக்தன் ஆஞ்சநேயன்சுக்கிரீவனின் மந்திரி. அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வு நம் சொல்லாக அது தாவி சென்றுஉங்கள் உடலுக்குள் அந்த தீமைகளை நீக்கும். அந்த உணர்ச்சிகளை ஊட்டிஎங்கே நோய் இருக்கின்றதோஅங்கே சுக்கிரீவனின் உணர்வுகள்தீமைகளை நீக்கும்.
 விஷத்தன்மை கண்டால்வேதனையான உணர்ச்சிகள்இந்த நுரையீரல் வழி தான் சுவாசிக்க நேரும்அப்போது பிறர் உடலில் அதிகமாக நுகர்ந்த விஷத்தின் தன்மைநம் உடலில் வரப்படும்பொழுதுநுரையீரல் பலவீனமாகி ஆஸ்த்மா போன்ற நோயும்சளிக்கட்டிகள் போன்ற தீய விளைவுகளும் ஏற்படும். இதைப் போன்ற நிலைகளைத் தடைப்படுத்த
எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள்.  



குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கிட்னியிலும்சிறுநீரகத்திலும் கலந்துகிட்னியையும்சிறுநீரகத்தையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று உங்கள் கண்ணின் நினைவை கிட்னியிலும்சிறுநீரகத்திலும் செலுத்துங்கள். இவ்வாறு அந்த அணுக்களை வலுப் பெறச் செய்தால், உப்புச்சத்துசர்க்கரைச் சத்துவாத நீர் போன்ற நிலைகளை அது சுத்திகரிக்கும். நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது. இவ்வாறு நல்ல இரத்தமாக மாறிஇதயத்திற்குச் செல்லப்படும் பொழுது, இந்த இதயத்திலிருந்து வீரிய உணர்வுகளை மேற்கொண்டு, நல்ல அணுக்கள் அனைத்திற்கும்இந்த உடலை இயக்குவதற்கும்மனவலிமை பெறுவதற்கும்நமது சிறுமூளை பாகங்களை அது வீரியத்துடன் இயக்குவதற்கும் இந்த உணர்ச்சிகள் பயன்படுகின்றது.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இதயத்தில் கலந்துஇதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள். இதயம் பலவீனமடைந்தால் நுரையீரலும் கல்லீரலும் பலவீனமடையும். இதயத்தை வலுப் பெறச் செய்தால், எல்லா உறுப்புகளையும் சீராக்கும் அந்த உணர்ச்சிகளின் பக்குவம் பெறுகின்றது.  இப்போது உங்கள் இதயத்தில் உள்ள அணுக்கள் வீரியமடைவதை உணரலாம். நெஞ்சுவலிஅல்லது பலவீனமான நிலைகலக்கமோ இருந்தால் அது அகலும்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கரு மணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று உங்கள் நினைவினை கருமணிகளில் செலுத்தி ஏங்கி தியானியுங்கள். நீங்கள் வேதனைப் பட்டதோவெறுப்படைந்ததோகோபப்பட்டதோஇந்த கருமணியில் ஈர்க்கப்பட்டு தான், அதன் வழி நரம்பு மண்டலத்தின் மூலமாக உடல் முழுவதும் பரப்புகின்றது. இந்த மாதிரி வேதனைவெறுப்பு போன்ற உணர்வுகளைப் பார்த்தால். அடுத்துநல்ல பொருளை பார்த்துசிந்தித்து செயல்படுதல் என்றால் முடியாது. ஒரு பொருளின் தரத்தை நாம் பார்க்க முடியாது. ஒரு மணத்தின் தரத்தை நாம் நுகர முடியாது. எனவே நாம் இத்தகைய தீமையான உணர்வுகளை பார்த்தபின்அடுத்த நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று எண்ணினோம் என்றால்இந்த கருவிழிகள் சுத்தமடைகின்றது.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலத்தில் கலந்துநரம்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
இந்த கருமணி வழி கொண்டுதான்வேதனைவெறுப்புகோபம்குரோதம் போன்ற உணர்வுகள் சேர்க்கப்படுகின்றது. நரம்பு மண்டலங்களின் அணுக்களில் இது மாறினால்வாத நோய்சரவாங்கி நோய்மூட்டுவாதம்இதைப் போன்ற நோய்கள் அதிகரித்து விடுகின்றன. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்களில் படர வேண்டும் என்று ஏங்கி தியானிக்கும் பொழுதுஅத்தகைய நோய்கள் வராமல் தடுக்கலாம்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலங்களில் கலந்துஎலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள். இந்த நரம்பு மண்டலம் வழி தான்வாயு மண்டலம் செல்கின்றது. நாம் எண்ணிய உணர்வுக்கொப்ப விரல்களை அசைப்பதும்எலும்புகளை இயக்குவதும் இதுவேதான். எலும்பு மண்டலத்தின் இயக்கத்தால் ஆவியாக மாறிவிடுகின்றது. அவ்வாறு ஆவியாக மாறிஎலும்பு மண்டலத்தில் உணவாக உட்கொள்ளும் பொழுது, வேதனை என்ற உணர்வாகிவிட்டால்.T.B. போன்ற நோய்களும்கேன்சர் போன்ற நோய்களும் எலும்பு மண்டலங்களில் வந்துவிடுகின்றது. அதைப் போன்ற நிலைகளை நீக்கஇதை முறைப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் பாகம் (விலா எலும்புகள்) உள்ள எலும்புகளில் கலந்துகுருத்து எலும்பு முழுவதும் படர்ந்துஅந்த எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் முழுவதும் படர்ந்துஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று உங்கள் கண்ணின் நினைவினைவிலா எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள். இவ்வாறு செய்வதனால், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்வேதனையை நீக்கும் உணர்வாக, ஊழ்வினை என்ற நல்ல வித்துக்களை உருவாக்கும் சக்தியாக உருபெறுகின்றது.  ஆகவே நமக்குள் வேதனைவெறுப்புகோபம்ஆத்திரம் என்ற உணர்வுகளை வளராது கட்டுபடுத்தஇது உதவும். அதனால் ஒவ்வொரு நிமிடத்திலும்துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா எலும்புக்குள்ஊனை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள்.
இப்பொழுது விலா எலும்புக்குள் ஒரு உற்சாக உணர்வு இருக்கும். உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் ஒரு மெலிதான வெளிச்சம் வருகின்றது. உங்கள் நெஞ்சு எலும்புக் கூட்டில்வீரிய உணர்வின் சக்திகள் வளர்ச்சி பெறும் சந்தர்ப்பத்தைநாம் உருவாக்க வேண்டும்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலங்களில் கலந்துதசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள்.


குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலங்களில் கலந்துதோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கி தியானியுங்கள். இவ்வாறு தோல் மண்டலத்தில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சேர்க்கும் பொழுது, காற்றில் உள்ள தீமையான உணர்வுகள்நம் அருகில் வராது விலகிச் செல்லும்.

இதைப் போன்ற தியானம்நாம் காலையில் 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது இருக்க வேண்டும். முடிந்தால் கொஞ்ச நேரம் கூட இருக்கலாம். இதுதான் ஏகாதசி விரதம் பத்தாவது நிலையை அடையக்கூடிய சக்தி பெற வேண்டும். தீமைகளை நாம் கவருவது இல்லை. 

2. நம் உடலில் உள்ள அணுக்களுக்கு உரம்
இதைப் போன்று காலையில் வீரிய சக்தியை எடுத்தபின்,
நான் பொருளறிந்து செயல்படும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற அருள்வாய் ஈஸ்வரா

என் சொல்லைக் கேட்போர் வாழ்வில்அந்த கனியைப் போன்ற சுவையான வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

என் குடும்பத்தில் அனைவரும்அந்த கனியைப் போன்ற சுவையான வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

நான் பார்க்கும் குடும்பமெல்லாம் இந்த நிலை பெற வேண்டும்

நான் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.


காலையில் எழுந்தவுடன் இவ்வாறு ஆன்மாவை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்த தங்கத்தைப் போன்று என் மனம் மங்காத நிலை பெற வேண்டும்  ஒருவர் கோபித்து விட்டால்அந்த கோபமான உணர்வுநம் மனதை மாற்றிவிடக் கூடாது. தங்கம் எவ்வாறு நிறம் மாறாதிருக்கின்றதோஅதைப் போன்று

தங்கத்தை போன்றுஎன் மனம் மங்காத நிலை பெற வேண்டும்.

என் குடும்பத்தில் அனைவரும்தங்கத்தை போன்றுமனம் மங்காத நிலை பெற வேண்டும்
வைரத்தைப் போல் என் சொல் ஜொலிக்க வேண்டும்என் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கை வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்
என்று நாம் நினைக்க வேண்டும்.


என் கணவர்/மனைவி அருள்ஞானம் பெற வேண்டும்.

என் கணவரைப்மனைவியைப் பார்ப்பவருக்குஅந்த அருள்ஞானம் பெற வேண்டும்.

அவர்கள் தொழில் செய்யும் இடங்களில்அந்த நிலை பெற வேண்டும்,
என்று எண்ணத்தால் படைத்தல் வேண்டும்.


இதே போன்று தொழிலுக்கு போனால்அலுவலகத்தில் குறைபாடு இருந்தாலும் நீங்கும். அவர்கள் எடுத்துக் கொண்ட தொழிலும் நன்றாக இருக்கும்நல்ல பெயரும் வரும். 

அலுவலகத்தில் குறைபாடு வந்துவிட்டால்அந்த உணர்வுகள் வீட்டில் பதிந்துஇருவரும் ஒருவரை ஒருவர் குறைபாடாக வளர்த்துஅலுவலகத்திலும் கெட்ட பெயராகும். 

இந்த முறைப்படி நீங்கள் தியானம் செய்யும் பொழுதுஉங்களுக்குள் தீமையை நீக்கும் அணுக்கள் வளர்ச்சியடைந்துவேதனையை நீக்குகின்றது.

ஆகவே, இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால்நீங்கள் எல்லா விதத்திலும் உயர்வு பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் வரும் நோய்களை போக்க முடியும். 

அதே சமயம்இந்த வாழ்க்கைக்குப்பின்இந்த உடலைவிட்டு நாம் சென்றால்எங்கு போவது என்று தெரியும். 

அப்பொழுது நாம் நம் குழந்தையின் மீது பாசத்தால் இவ்வாறு ஆகிவிட்டானே என்ற உணர்வை எடுக்காதபடிதுருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்து கணவனும் மனைவியும்அதை மாற்றி நல்ல நிலை பெறலாம். இந்த உடலுக்குபின் பிறவி இல்லா நிலை பெறலாம். அழியா ஒளி சரீரம் பெற முடியும்.
3. தீமைகளை அடக்கும் அங்குசபாசவா
உயிர்நம்மை மிருக நிலையில் இருந்து மனிதனாக உருவாக்கியது. முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாகஇந்த மனித உடலை உருவாக்கியது.. கணங்களுக்கெல்லாம் ஈசாகணேசா என்று உயிரை வணங்கச் சொன்னார்கள். 

நாம் தீமையிலிருந்து நீங்க வேண்டுமென்பதற்காககணங்களுக்கு அதிபதியாகிஉடலில் உள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றது. அங்குசபாசவா

யானை பெரியது. ஆனாலும் அதை அங்குசத்தால் அடக்கிவிடலாம். அதே போன்று, விஷம் அனைத்திலும் வலிமையானது. அந்த விஷத்தை, துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டுஅடக்குதல் வேண்டும். 

அதைத் தான் அங்குசபாசவா  தீமைகளை அடக்கும் நிலை, என்று ஞானிகள் உரைத்துள்ளனர்.
4. தெளிந்து, தெரிந்து, வாழவேண்டும்
தங்கத்தில் எப்படி திரவகத்தை ஊற்றி சுத்தப்படுத்துகின்றார்களோஅதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நமக்குள் பெறவேண்டும் என்று நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஞானமும்சாந்தமும்விவேகமும் நாம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு நாம் செய்தோம் என்றால்நமது உயிரிலே போய் இணைந்துநமக்குள் நல்ல சக்தி ஜீரணித்துநல்ல சத்து கிடைக்கும்.

தொலைகாட்சிப் பெட்டியில் எந்த அலைவரிசை வைக்கின்றோமோஅது தான் வரும். அதே போல்நம்முள் எந்த சக்தி எடுக்கின்றோமோஅது தான் வரும். 

அது சரியாக வரவில்லை என்றால்அது சரியாக வராது. அது சரியாக வரவில்லை என்றால்அதைச் சரிப்படுத்திசரியாக நல்ல சக்தியைநாம் எடுக்க வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையில், தெளிந்துதெரிந்துஎப்படி வாழவேண்டும் என்பதற்குத்தான்ஞானிகள் கோவிலை வைத்தார்கள்.

நாள் பூராவும்நாம் எடுக்கும் உணர்வுகள், அந்த அத்தனை அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெறுவது ஏகாதசி விரதம். 

பகைமை நீக்கிபத்தாவது  நிலை அடைந்தது துருவ நட்சத்திரம். நாம் வயலில் பலவித குப்பைகளை போடுகின்றோம். அந்த வித்து என்ன செய்கின்றது. மற்ற செடி கொடிகளுடன் சேர்த்து நல்ல வித்தாக விளைகின்றது. 

இதுபோன்றுஇவை எல்லாவற்றையும் கருக்கியது துருவ நட்சத்திரம். இதற்கு முன்னால் தெரிந்தோதெரியாமலோ சேர்த்தது விஷம்தான்அதை எல்லாம் கருக்கிநம்மை ஒளியாக மாற்றுகின்றது.

காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக உள்ளது. காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவராக அவதாரமாகநல்ல சக்தியை நீங்கள் பெற வேண்டும். அந்த நல்ல சக்திநீங்கள் பெற்று வளர்த்துக் கொள்ளக்கூடியது

எலெக்ட்ரிக்-எலக்ட்ரானிக்-ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடிய ஒரு ரோபோட் தயார் செய்கின்றனர். ஒருவனது மனது எந்த நிலையில் இருக்கின்றதோஅவனைப் பார்த்தவுடனேஇவன் தவறு செய்பவன் என்று தன் எஜமானனுக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

அதே போன்று உடல் உறுப்புகளுக்குஎலெக்ட்ரிக்எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்உங்கள் உடல் உறுப்புகளுக்கு சக்தி ஏற்றுகின்றேன். அதை வளர்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் நிலைவளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நல்லது.
5. பத்தாவது நிலையை நாம் அடைய வேண்டும் - கல்கி
அரும்பெரும் சக்தியை தியானத்தின் மூலமாக பெறுகின்றோம். எனக்கு குருநாதர்என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் சக்தி கொடுத்தார். அதே போன்றுஉங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்சக்தி கொடுத்தது

நீங்கள் அதை ஓங்கிப் பெற வேண்டும். நீங்கள் அதை எண்ணுகின்றீர்கள். உங்கள் உடலில் அது சேரட்டும். இதே போன்றுகாலையில் சக்தியைக் கூட்டிக் கொண்டுஎது எது நல்லதோஅதை நினைத்தீர்கள் என்றால்நல்ல சிந்தனை வரும்தீமையை நீக்கச் சொல்லும்வாழ்க்கை உயரும். இதே போல் கேட்டுக் கொண்டீர்களேயானால்இந்த உடலுக்கு பின் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளி சேர்க்கப்படும்போதுஅவன் அப்படிச் செய்தான்இவன் இப்படிச் செய்தான் என்பதை பற்றற்றதாக மாற்றுகின்றீர்கள். அதைப் பற்றுடன் பற்றிஇதைப் பற்றற்றதாக மாற்றிநீங்கள் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். விஜய தசமி  பத்தாவது நிலை அடைந்ததை வைத்துஇந்த பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.
6. சந்தர்ப்பம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்
எல்லாமே சந்தர்ப்பத்தில் உருவானதுதான். செடி கொடியானாலும்மிருகமானாலும்மனிதனானாலும்எது வலிமையோ அதன் வழி வளர்ந்ததுதான். இதைப் போல சந்தர்ப்பத்தால் வலிமை பெற்றுஒளியின் உடல் பெற்ற அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைநாம் பெற்றோமென்றால்அந்த சந்தர்ப்பம் தீமைகளை நீக்கும்.

சந்தர்ப்பம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். 
எதன் வலிமையோஅதன் வழி மாற்றிக் கொள்ளும்.

இதைப் போன்று, உங்களுக்குள் பதிவான, வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக, எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் சங்கடமோசலிப்போவேதனையோவெறுப்போ வருகின்றதோஅப்பொழுதெல்லாம் தாய் தந்தை அருளால், (ஏனென்றால் நம்மைக் காத்தது அவர்கள்தான்) அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணிப் பாருங்கள். 

என் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கும்பொழுதுஅதைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அது நமது உடலில் வலிமை பெறுகின்றது. 

குடும்பத்தில் எத்தகைய சிக்கல் வந்தாலும்இந்த முறைப்படிஅன்னை தந்தை அருளால்துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கி பாருங்கள்எளிதில் பெறமுடியும்அந்த  சிக்கலை நீக்கும் ஞானமும் கிடைக்கும்.
7. நம் குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்
நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான்நமது உடல். இதைத்தான் இராமேஸ்வரம்” என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோஅதன் வழிப்படிஇந்த உடலான பரத்தை உருவாக்கியது உயிர். இதுதான் இராமேஸ்வரம், 

ஸ்தலபுராணத்தை உருவாக்கிஇதே எண்ணத்தால் ஒளி என்ற உணர்வு பெற்றதுருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்வதற்குஇராமேஸ்வரத்தை அமைத்தார்கள். அங்கு அதிகாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தை பார்க்கலாம் என்பதற்காக கோவிலை அமைத்தார்கள்.
அதன் உணர்வை ஒரு மண்டலம் (48 நாட்கள்) வளர்த்துக் கொண்டபின்நம் குடும்பத்தில் நமது மூதாதையர்களையோஉடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களையோவிண் செலுத்திதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும்சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.மூதாதையர்களின் உணர்வு நமக்குள் உண்டு. அதன் துணைகொண்டு,

"எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த குலதெய்வமான உயிராத்மாக்கள்சப்தரிஷி மண்டலத்தில் கலந்துஉடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்துபெருவீடு பெருநிலை அடைந்துஅழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்று, பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் இடம் அது.

சிறிது காலமே மனித உடலில் வாழ்கின்றோம். இந்த மனித உடலில்மனதக் குவித்தல் வேண்டும். அதாவதுமனதில் எல்லா குடும்பங்களும் நல்லது பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இதைத் தான்இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாகஇராமாயணத்தில் காட்டினார்கள். இராமேஸ்வரத்தில்மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் உண்டு.

27 நட்சத்திரங்களின் சத்தைசூரியன்  எவ்வாறு பாதரசங்களாக மாற்றுகின்றதோ அதே போன்று, 27 நட்சத்திரங்களின் சத்தை சூரியன் கவர்ந்துஇயக்க அணுவாக மாற்றியதைஜீவ அணுவாக்கிஇந்த  உடலை உருவாக்கியது உயிர்.  
மனிதனான பின்,  27  நட்சத்திரத்தையும் சேர்த்து
முழுமை அடையும் பக்குவத்தைத்தான், 
இராமேஸ்வரத்தில் காட்டினார்கள்.

இராமேஸ்வரத்தில் 27 கிணறைக் காட்டி இருப்பார்கள். எதுஎது உணர்வுகள் ஊற்றெடுத்துநமக்குள் ஒன்றாக்குகின்றது என்று இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது. நம் மனதைக் குவிக்கும் இடம் இராமேஸ்வரம்.

அங்கு நம் மூதாதையர்களை எண்ணி,
"எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த மூதாதையர்கள்சப்தரிஷி மண்டலத்தில் கலந்துஉடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழவேண்டும்"
என அவர்களை விண்செலுத்தும் இடம் அது. மனிதன் ஒருவன் தான்அதைப் பெறமுடியும். கடைசி முடிவு. 

  அணுக்களாகச் சேர்த்துசூரியனாகிபிரபஞ்சமாகிபிரபஞ்சத்தில் உயிரணுவாகிஉயிரணு தோன்றிய பின்ஒளியின் உடலாவதுதான்இறுதி நிலை. ஆகையால்முதாதையர்களை முறைப்படி விண் செலுத்தினால்அவர்கள் பிறவி இல்லா நிலை அடைகின்றனர். 

அவர்கள் முன் சென்றால்அதை நாம் அனைவரும் எளிதில் பெற்றுநம் ஆன்மாவை புனிதப்படுத்திஎளிதில்நாம் எல்லோரும்,  அங்கு (சப்தரிஷி மண்டலத்திற்கு) செல்லலாம்.