ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2013

நாம் விடும் மூச்சலைகள், மழை நீராகக் கொட்ட வேண்டும்

இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை, அதாவது செல்கள், அதாவது சிலிகான்களைப் போன்று, நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து, நமக்குள் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும், இன்று, விஞ்ஞான அறிவு கொண்ட, கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பதிந்தபின், அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.

மனிதன் என்ற எண்ணமே, இங்கே போய்விட்டது,
இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு,
இன்று நாம் வந்துவிட்டோம். 

இவ்வாறு, நாம் அந்த நிலைகள் கொண்டு, இதை நமக்குள் பதிவு செய்தபின், இருந்த இடத்திலே இருந்துகொண்டே, ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்துவிட்டது, இன்றைய விஞ்ஞானம்.

ஆக, மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும், சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும், இந்த பூமியினுடைய நிலைகளும், அணுக்களாக பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.

இன்று, பூமியினுடைய நிலைகளில் அணுகுண்டு வெடித்தால், இவன் பதுக்கி வைத்திருக்கும், லேசர் கதிரியக்கங்கள், நீருக்குள்ளும், நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற அணுக்கள் வெடிக்கும். இதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுத்தாலும், அணு நீர் மூழ்கியினுடைய நிலைகளை ஒரு இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும், அது ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அணு கதிரியக்கங்கள் தாக்கி, அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்,

அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும், பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு, இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் ஊடுருவி,  வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு வந்தாலும், இன்று வரக்கூடிய நிலநடுக்கங்கள் இவன் அணு உலையாலே, இவன் அணுக்களைக் கண்டுபிடித்து,  மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று, இவன் எண்ணுவான்.

ஆனால், இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் ஆனவுடன், இந்த இயற்கையின் துடிப்பு கொண்டு, தன் கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.

அங்கே எதிர்நிலையான நிலை வரப்படும்போது, பூமியில் நிலநடுக்கம் ஏற்படும்,  எல்லாமே போய்விடும்.  இந்த அளவுக்குத்தான்,  உலகின் தன்மைகள் இருக்கின்றது.

ஆக, இயற்கையின் நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும், மனிதனின் உணர்வுக்குள் எட்டியதை அசுத்தப்படுத்திக் கொண்டு, மனித உணர்வுக்குள்ளும் பதியச் செய்து, இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.

ஆனால், இதுபோன்று வெடித்தாலும், வெடிக்கும் நிலைகள் கொண்டு, புகை மண்டலங்களாகக் கூட்டப்பட்டு, சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்திவாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி, பூமியில் இருக்கக்கூடிய, நீர் வளங்கள் அனைத்துமே, உறையும் தன்மை பெறும். இங்கே, நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே,  உறையும் தன்மை வருகின்றது.

இதிலிருந்து வெளிப்படும் இந்த கதிரியக்க சக்தியின் தன்மைகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன், இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி, இதே உணர்வின் தன்மைகள், சூரியனிலே மாறுபடும் காலங்கள் வருகின்றது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே, இன்று சூனிய நிலைகளாக ஆகும் காலம் வந்துவிட்டது.

யாம் சொல்வது, உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.  ஆனால், விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு, நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது என்று சொல்வார்கள். இன்று  எழுதி வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம்.

நமது குருநாதர், ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி,
மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது? அதிலே, நீ எவ்வாறு செயல்பட வேண்டும்? என்ற நிலைக்கு,  எமக்கு உபதேசித்தார். ஆகையினாலே, இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து, 
இது சரி,  இது தப்பு, என்று வரவேண்டாம்.

நாம் அனைவரும் மெய் ஒளியைக் காணவேண்டும். குறைகளைக் காண வேண்டாம், மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் ஓரே குடும்பம், ஓரே நிலைகள் தான்.

நமக்குள், இருளான நிலைகள் வந்தாலும் உடனடியாக மாற்றிச் சென்று, மகரிஷிகளின் அருளாலே, இந்த இருள்கள் நீங்கவேண்டும், நாம் அனைவரும் ஒளிநிலைகள் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்கு தான்,
நமது குருநாதர் ஆணைப்படி,
இதை யாம் செயல்படுத்தினோம்.
நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும், ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த உணர்வின் ஒளிகள், நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.

நாம் இடும் மூச்சலைகள்,
இன்று  மழை நீராகக் கொட்டவேண்டும்.
அப்படிப் பெய்யும் மழை நீருக்குள், இந்த விஷத்தன்மைகள் 
(விஷக் கதிரியக்கங்கள்) மாயவேண்டும்.

அந்த விஷத்தின் தன்மைகளை, நீக்கும் ஆற்றல்களை,
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூண்டும் நிலைகள்தான்,
யாம் செயல்படுத்தும், இந்த தபோவனத்தின் தத்துவம்.