ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2013

தீமைகள் வராதவண்ணம் தடுக்கும் ரேடார் (RADAR)

சிறு துளியாக மழை பெய்தாலும்,
அந்த மழை நீர், அது வேகமாக நீராக ஓடையாக ஓடுகின்றது.
அப்பொழுது அங்கு இருக்கக்கூடிய
கல், மண் இவைகளை எல்லாம் அடித்துத் தள்ளிவிட்டு,
அது தன்னுடைய செயலைக் காட்டுகின்றது.

இதைப்போல, நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் எண்ண ஓட்டத்துடன் இருந்து, அந்த உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற வேண்டும், என்ற ஏக்க உணர்வுடன் நாம் எண்ணி தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வின் வலுவைக் கொண்டபின், நம்மைச் சார்ந்த மூதாதையர்களின், உடலைவிட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை குலதெய்வங்களாக எண்ணி, எல்லோருடைய உதவிகொண்டு ஏகக்காலத்தில், அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் உந்தித் தள்ள வேண்டும்.

அங்கே சென்று, இன்னொரு உடல் பெறும் அந்த உணர்வின் தன்மையை, அங்கு கருக்கிவிட்டு, அந்த உடல் பெற்ற உணர்வின் ஆற்றல் மிக்க காந்தசக்தி, ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி நிலைத்து விடுகின்றது.

ஆக சப்தரிஷிகள், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து, அதை உணவாக எடுத்துக் கொண்டு, அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் ஆற்றல் அவர்களுக்கு, (நாம் செலுத்திய உயிராத்மாக்கள்) இது உணவாக வந்து, ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

எந்த மூதாதையர்கள் நம் உடலிலே எந்த உணர்வுடன் வந்து, இந்த உடலின் சரீரமாக இருந்தாலும், அவர்களை நாம் உந்தித்தள்ளி மகரிஷிகள் அருள் வட்டத்துக்குள், இந்த உணர்வின் ஒளி சரீரமாக இருக்கும்போது,
நாம் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்போது,
அங்கே “ரேடர்” (RADAR)
எவ்வாறு ஒரு கருவியின் இயக்கத்தை
விஞ்ஞானி கண்டு கொள்கின்றானோ,
இதைப்போல நம் எண்ணத்துக்கு “ரேடர்” போன்ற
நம் நினைவு அலைகளுக்கு அது பக்குவப்படுகின்றது.

நாம் அந்த விண்ணை நோக்கி, சப்தரிஷி மண்டலங்களை எண்ணும்போது,
நம்முடைய நினைவு அலைகின்ற நம்மை அறியாதபடி
நமக்குள் தீமை வருவதை வராத வண்ணம்
முன் கூட்டியே அந்த ரேடர்,
நமக்குள் அது உணர்த்துகின்றது.

அப்பொழுது அந்த மெய்ஞானியின் ஆற்றலை நமக்குள் செலுத்தப்படும்போது, நம் உணர்வின் அலையை, எண்ணங்களை, நம் எண்ண உணர்வுகள் சீர்படுத்த உதவுகின்றது. நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்க, இது உதவுகின்றது.

அப்பொழுது, எதிர் நிலைகள் கொண்டு தாக்கும் உணர்வுகளை, முன் கூட்டியே நாம் அறியமுடியும். இந்த நினைவு அலைகளை, அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு கொண்டு, அந்த உணர்வின் ஈர்ப்பின் சக்தியை நாம் நமக்குள் பெற வேண்டும்.
அதற்கு இப்பொழுது, யாம் சொல்லும் “ஆத்மசுத்தி” என்ற எண்ணத்தை நீங்கள் கவர்ந்து, உங்கள் உடலுக்குள்  செலுத்தப்படும்போது,
இந்த உணர்வுகள் உள்சென்று,
உடலில் இருந்து வரும் அந்த ஆவியின் தன்மை,
நம்மையறியாது நமக்குள் வரும் தீயவிளைவுகள்
அனைத்தையும் அப்புறப்படுத்துகின்றது.
இதற்குப் பெயர்தான் “நரசிம்ம அவதாரம்” என்பது.