
கூட்டுத் தியானத்தை யாம் அமைத்ததன் முக்கியமான நோக்கம்
ஒவ்வொரு நொடியிலும் நமது வாழ்க்கையில் நாம் நல்லோரைச் சந்தித்தாலும் சரி…
அவருடன் உறவாடினாலும் சரி… ஆனால் அவர் உடலிலே அதற்கு முன்
அவர் அறியாது வந்த நோய்கள் பல உண்டு.
ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்நிலைப் பட்ட அந்த உணர்வின் தன்மைகள் உண்டு. உதாரணமாக இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்
1.ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு
நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது.
2.மற்றொரு உணர்வின் தன்மை
எதிர் நிலையாகி அது துடிப்பின் இயக்கமாக உயிராக உண்டாகி
3.அதனின் துடிப்பின் இயக்கத்திற்குள் அது
எடுத்துக் கொண்ட உணர்வினை ஜீவணுக்களாக
மாற்றும் நிலைகள் பெற்றது “ஒவ்வொரு உயிரும்…”
கார்த்திகை நட்சத்திரம் என்பது அறிந்திடும் அறிவாற்றல் மிக்க
நிலைகளையும்… ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின்
அலைகளாக அது பெருகினும்… மற்ற மற்ற 27 நட்சத்திரங்களும் ஒவ்வொருவிதமான நிலைகள் கொண்ட்து.
வைரங்களில் எத்தனை விதமான கலர்கள் இருக்கின்றதோ அவை அனைத்துமே ஒவ்வொரு
நட்சத்திரத்தின் வலுவின் தன்மை பெற்றது.
1.27 விதமான வைரக் கற்கள்
உண்டு.
2.இதைப் போல தான் உணர்வின் இயக்கங்களும் இருக்கும்.
இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இருப்பினும் பிறிதொரு
உடலில் விளைய வைத்த கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர்கள் அவர் உடலில் எடுத்துக் கொண்ட
எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்கள் வெளிப்படுத்தினும் அவர்கள் நல்லவராகத் தோன்றினும் அதே சமயத்தில்
அது எதிர்மறையான நட்சத்திரம் கொண்ட நான் அவருடன் நட்புடன் இருப்பினும் நாம் பேசிடும்
உணர்வு கொண்டு அவர் உணவாக உட்கொண்ட மற்ற அந்த நட்சத்திரத்துடன் ஒத்துக் கொண்ட மற்ற
உணர்வின் நிலைகள் கொண்டு எதிர்நிலையாக இயக்கும்.
ஏனென்றால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கத்தால்
தான் ஒவ்வொரு உணர்வின் எதிர் நிலையின் மறைகள் உருவாகி அதனின்
நிலைகள் கொண்டு தாவர இனங்களும் விளைகின்றது.
அந்தத் தாவர இனச் சத்தை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் மணங்கள்
கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அங்கே
மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக்கொண்ட
நிலைகளும் வரும். ஆனால் அதே சமயம்
1.மற்றவர்களுடைய நிலை வரும் பொழுது எண்ணத்தால்
எதிர் நிலைகள் வரும்.
2.அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை
நட்சத்திரத்தின் நிலைகள் அவர் சொல்லால்
எனக்குள் வரப்படும் பொழுது
3.என்னை அறியாமலே எனக்குள்
தீமையை விளைவிக்கும் நிலையாக வரும்.
இதைப் போல உணர்வுகள் மாறுபட்ட நிலைகள் விண்ணிலே நட்சத்திரங்கள்
ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாது அதனின் உணர்வின் தன்மை அலைகளாகப் பிரிந்து… “எப்படித் தாவர இனங்கள் இருக்கின்றதோ
இதைப் போல தான் நட்சத்திரங்களின் இயக்கமும்…”
1.அதனின் உணர்வுகள்
எதிர்மறையாகி ஒன்றுடன் ஒன்று எதிர் நிலையாகும் பொழுது தான்
விண்ணுலகில் ஆற்றல் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
2.அதைப் போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள்
வரப்படும் பொழுது எதிர்மறையான உணர்வுகள் வரும் பொழுது தான் அதனுடைய இயக்கமும்
வருகின்றது.
இன்று எலக்ட்ரானிக் என்று வரப்படும் பொழுது அது
இயக்க வேண்டுமென்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான்
இயக்கும். அதைப் போல
1.ஒரு உணர்வின் சக்தி
உடலுக்குள் ஒத்துக் கொண்ட உணர்வாக இருப்பினும்
2.எதிர்மறையான நிலைகள் இருக்கும்
பொழுது தான் அது உந்தி இயக்கும் நிலைகள்.
கரண்ட் ஆக நாம் உபயோகப்படுத்தினாலும் அதனின் நிலைகள் கொண்டு
நெகட்டிவ் பாசிட்டிவ் என்று எதிர்மறையான நிலைகள் வரும் பொழுது தான் மின் அணுவின்
நிலைகளும்… அதனின்
அழுத்தத்தைக் கொண்டு மற்ற மோட்டார்களை இயக்கச் செய்யும்
நிலைகள்.
ஆனால் அந்த மின் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு
அதனின் இயக்கத்திற்குத் தக்கவாறு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது அதனுடைய ஒலிப்பேழைகளை மாற்றி அமைப்பதும் அதற்குத் தக்க நிலைகளை அது உருவாக்கவும்
செய்கின்றது.
இதைப் போன்ற நிலைகள் தொடர… மனிதனின் உணர்வுக்குள் நாம் நண்பர்களாகப்
பழகியிருந்தாலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறைகள்
உண்டு.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடும் பொழுது
இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம்… ஒரு
குழந்தை ஒத்து வராத நிலை வரும். எதிர்மறையான நிலைகள்
வரப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் வருகின்றது.
இதைப் போன்று தான் வசிஷ்டாத்வைதம்
1.27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் நவக்கோள்களின் சக்திகளையும் உள்ளடக்கி
2.உணர்வின் சக்தி ஒளியாக
மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி
மண்டலங்களாக உள்ளார்கள்.
3.அந்த மண்டனல்களிலிருந்து வரும் உணர்வின் சக்தியை நாம் கவரும் திறனாகத்தான் உங்களுக்குக் கூட்டுத் தியானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் பலருடன் பழகினாலும்… எண்ணத்தால் கவர்ந்து நட்பின் நிலைகள் கொண்டு கேட்டுணர்ந்தாலும்… கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை
உண்டாக்கி நோயாக உருவாகும்.
சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்… நண்பர்கள் பலருடன் சந்தித்துப்
பேசும் பொழுது இன்னொரு நண்பருடன் நாம் பேசி வரும் பொழுது
தன்னை அறியாமலே ஒரு கலக்கமும்… ஒரு
வியாபார ரீதியாகச் சென்றாலும் அவருடன் உறவாடி விட்டுச் சென்றால் இனம் புரியாது கலக்கங்கள்
ஏற்படுவதைக் காணலாம்.
இது எல்லாம் நம்மை அறியாது நடக்கும் செயல்கள். நமது
உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய உணர்வின் தன்மை எதிர்நிலையாக மாற்றங்கள் அமைக்கப்பட்டு நம்மை
இயக்குகின்றது.
இதைப் போன்ற நிலைகள் தான் “வசிஷ்டாத்வைதம்” என்ற தத்துவம்.
1.எதையுமே தனக்குள் கவரச்
செய்து - அருந்த்தி…!
1.இணைந்தே வாழும் நிலைகளும்
2.இணைத்து அறிந்திடும் நிலைகளும்
3.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்
4.இந்த உடலிலே இணைத்திடும்
நிலைகள் கொண்டு என்று நாம் என்று கொள்ளுகின்றோமோ
5.இதனை இணைந்திடும் நிலைகள்
ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின்
உணர்வுகளைப் பருக வேண்டும்.
6.அப்படிப் பருகும் நிலையை
உருவாக்குவதற்குத் தான் இந்தக் கூட்டுத் தியானம்.