ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2025

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?


உதாரணமாக நமது குடும்பத்தில் இருப்போர் (மூத்தவர்கள்)) அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள். அந்த நன்மை செய்த பின் நாம் அந்த நன்மை செய்தவரை எண்ணும் பொழுது எப்படி எண்ணுகின்றோம்…?
 
அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன் எனக்கு எல்லாம் நல்ல வழி வகுத்துக் கொடுத்தார் என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அவர் அந்த உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?
 
1.இப்படி எனக்கு எல்லாம் உதவி செய்தார்.
2.நோயோடு வாடும் பொழுது நல்ல மனிதன் இப்படி நோயோடு வாடுகின்றார்…” என்று. இந்த உணர்வைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
3.ஆனால் உடலை விட்டு அவர் பிரியப்படும் பொழுது நல்ல மனிதன் போய் விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
4.அவருடைய உணர்வு நமக்குள் வேதனைப்படும் காத்தில் நமக்குள் இருப்பதனால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது.
5.நல்லது செய்தார் ஆனால் உடலை விட்டுப் பிரியும் போது அவருடைய பக்குவ நிலையை நாம் இழுக்கப்படும் போது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
 
ஆனால் அவர் கடைசியில் எந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளர தொடங்கி விடுகின்றது. 
 
ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?
 
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்… நமது அறியாமை பண்பும் அன்பும் பரிவுடன் நாம் எண்ணும் பொழுது அவருடைய ஜீவன் பிரியப்படும் பொழுது நம்முடைய வேகமான உணர்வுடன் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
 
1.ஆனால் நம் உடலுக்குள் வந்த பின் நம் உடலில் அது கவரப்பட்டு நமக்கும் அவரின் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
2.நோயின் உணர்வு நமக்குள் வரும் பொழுது அவருடைய ஆன்மா நமக்குள் இருந்து விஷத்தை வளர்த்து
3.நாம் இறந்தபின் மனித உடலுக்குள் செல்லாதபடி விஷத்தின் தன்மை கொண்ட மிருக உடல்களுக்குள் அவரை அழைத்துச் சென்று விடுகிறது.
 
மாடு ஆடு என்று இவையெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்கு: அதனதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கின்றது.
 
மானோ யானையோ மாடோ புலியோ நாயோ நரியோ இவையெல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப அதன் விகிதாச்சாரப்படி அந்த உறுப்புகளை எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப அந்த விஷத்தின் இயக்கத்தினால் அதன் ரூபங்கள் உருவாகின்றது.
 
உயிரால் உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்த உடல்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
 
ஆகவே இவ்வழியில் தெளிந்து கொண்ட பின்னும் இப்பொழுது நமக்கு நன்மை செய்தார்கள் என்றால் நமக்காக நன்மை செய்தார். இனி இவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?
 
அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அந்த நோயின் தன்மையால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலை அடைய வேண்டும்.
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
 
ஆனால் அதற்கு மாறாக மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அந்த வேதனை உணர்வு உருவாக்கப்பட்டு நாம் இறந்தபின் மனிதனல்லாத உருவை உருவாக்கத்தான் பயன்படுத்த முடிகிறது. அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செயல்படுத்த முடியவில்லை.
 
மௌனமாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா எல்லோருக்கும் நன்மை செய்திருந்தாலும்
2.அவர் கேட்டறிந்த விஷத்தின் தன்மை அந்த உடலிலிருந்தாலும்…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
5.இனி துயரமே இல்லாத நிலையாக என்றும் ஏகாந்த நிலை அடைய வேண்டும் என்று அவரை உந்தித் தள்ள வேண்டும்.
6.அது தான் ஞானிகள் காட்டிய முறை.
 
பிறருக்கு உதவி செய்து தன் துயரத்தின் தன்மை தனக்குள் எடுத்து நோயாகிப் பிரிந்து சென்றாலும் இனி அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று யாராவது எண்ணுகின்றோமா…? யாரும் எண்ணுவதில்லை.
 
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பற்றுடன் இருந்தால் ய்யய்யோ இவ்வளவு நாள் எல்லாம் கொடுத்தாயே... இப்படிப்  போய்விட்டாயே இவ்வளவு சொத்தையும் வளர்த்தாயே… என்னைக் கண்காணித்தாயே…!” என்ற நிலையில் அழுகப்படும் பொழுது யார் அதிகமாக எண்ணுகின்றாரோ அவர் உடலில் அந்த ஆன்மா வரும்.
 
அந்த உடலுக்குள் வந்தால் மீண்டும் அந்த உடலை வீழ்த்திவிட்டு அந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் மீண்டும் பாநிலையான மனிதனல்லாத உடலைப் பெறுகின்றது.
 
இப்படித்தான் நம்மை அறியாதபடி நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்த வேண்டும். அதற்குத்தான் தெளிவாகச் சொல்வது.