ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2023

பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை "உங்கள் மூச்சலைகளால் துரத்தியடிக்க வேண்டும்..."

யாம் (ஞானகுரு) சொல்லக்கூடிய உபதேசங்களை… புரியவில்லை என்று விட்டு விடாதீர்கள். ஏனென்றால்
1.நான் படித்து வந்ததவன் அல்ல
2.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
3.பதிந்த நிலைகளை எடுத்தவன்
4.எடுத்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே உபதேசிக்கின்றேன்.

இது உங்களுக்குள் பதிவானால்… உங்கள் நினைவு மகரிஷிகள் பால் சென்று… இருளை நீக்கி ஒளியான உணர்வைப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்

உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை… நோய்களை நீக்கக்கூடிய சக்தியாகத் தான் வர வேண்டும். ஆனால்
1.கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்து “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவது போல்
2.என்னையும் நீங்கள் அப்படி எண்ணி… “சாமி என்னைச் சோதிக்கிறார்…” என்று எண்ணுவதற்கு அல்ல
3.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் “சக்திமானாக” நீங்கள் மாற வேண்டும்
4.இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும் அல்லது அதை அடக்க வேண்டும்
3.உங்கள் உடலில் மட்டுமல்ல…! (எல்லாம் சேர்த்துத் தான்…!

அதைப் பெறச் செய்வதற்கு தான் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நீங்கள் எல்லாம் தீமைகளை நீக்கும் வல்லுனர்களாக ஆகிவிட்டால்... இந்தப் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளையும்… நாட்டுக்கு நாடு போர் என்று பரவி வரும் அசுர உணர்வுகளையும்… நிச்சயம் உங்கள் மூச்சலைகள் அடக்கும்… நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

அதே சமயத்தில் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அருள் உணர்வின் தன்மையைப் பிறப்பிலிருந்தே பெறச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற பேரருளை எல்லாம் கருவிலே வளரும் சிசுக்கள் பெற வேண்டும்.
2.அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்த துருவனின் ஆற்றலை குழந்தை பெற வேண்டும்
3.அணுவின் இயக்கத்தை உணர்ந்த அகஸ்தியனின் உணர்வு கருவில் வளரும் சிசுக்கள் பெற வேண்டும் என்று
4.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஏங்கிப் பெற்றால் குழந்தையின் கருவிலேயே அந்த சக்தி உருவாகின்றது.

இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் அந்தப் பதிவு உண்டு. இந்த நினைவு கொண்டு கர்ப்பமுற்ற தாய் இதை எண்ணி எடுக்க வேண்டும். காற்றிலே அந்தச் சக்திகள் உண்டு… அதை எடுக்கும் போது துருவ நட்சத்திரத்திற்கே உங்களை எட்டும்படிச் செய்யும்.

அகஸ்தியன் எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்று கருவில் வளரும் குழந்தைகளை ரிஷிகளாக நாம் உருவாக்க வேண்டும். இனி வரக்கூடிய தீமைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக உங்கள் மூச்சு கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதைப் பெறக்கூடிய தகுதியாக வருகிறது.

விஞ்ஞான அறிவால் காற்று மண்டலமே விஷத்தன்மையாக மாறியதை அந்த ஞானிகள் வளர்ந்த பின் “இதே உணர்வுகள் தாவர இனங்களுக்குப் போய்ச் சேரும்…”

நறுமணம் வீசும் ரோஜாப்பூவின் உணர்வுகள் பட்டபின் நாம் நுகர்ந்தால் நறுமணங்களாக மாறுகின்றது. இதைப் போன்று மனித உணர்வுகள் விளைந்து வெளிப்படும் பொழுது மற்ற தாவர இனங்களுடன் சேர்க்கப்பட்டு பழையது மறைந்து மீண்டும் புது விதமான நல்ல தாவர இனங்களாக உருவாகும்.

அப்படி உருவான பின் பல உணர்வுகள் இன்று காற்றிலே படர்ந்து இருப்பினும் புதிதாக நம்மால் உருவாக்கப்படக்கூடிய இந்த தாவர இனங்கள் அந்தக் கசடுகளைக் கவர்ந்து இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தும்.

பின் ஞானிகள் என்று நாம் சொல்லும் கருவில் வளரக்கூடிய சிசுக்கள் ஞானக் குழந்தைகளாக உருவானபின் உலகைக் காக்கும் சக்தியாக வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் மாசுபட்ட காற்று மண்டலத்தை நல்லதாக மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலைபெற்ற உணர்வுகளுக்கு
3.இங்கிருந்து சென்று ஒளியின் உணர்வாக அங்கே மீண்டும் பெருகும் (சப்தரிஷி மண்டலம்).

இதை எல்லாம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்வது சிறிது காலமே… அதற்குள் நாம் எடுப்பது எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்திவாய்ந்த உணர்வுகள். அத்தகைய ஆற்றலைத் தான் பதிவு செய்கிறேன்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் பெருக்கும் பேரின்ப நிலையை… ஏகாந்த நிலை அடையும் பருவத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.