ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2023

தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியைப் பெறுவதற்கு “எத்தனையோ துன்பத்திற்கு என்னை ஆளாக்கினார் குருநாதர்…”

விஞ்ஞான அறிவு… எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வினை லேசர் என்ற இயக்கத்தைக் கொண்டு அதைக் கவர்ந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரில் பதிவாக்கி அதனின் உணர்வின் ஓசைகளைக் கவர்ந்து கொள்கின்றார்கள்.

அதைப் பதிவாக்கி இராக்கெட்டை உந்து விசையால் செலுத்தப்படும் பொழுது வான் வீதியிலே பறக்கின்றது. எதன் உணர்வின் தன்மையோ அந்த ஒலிக்கொப்ப அந்தக் கோள் இருக்கும் இடத்திற்கு இழுத்து அழைத்துச் செல்கின்றது. அதாவது இந்த இராகெட்டை அங்கே இழுத்துச் செல்லும் தன்மை வருகிறது.

அந்தக் கோளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தரையில் இருந்தே மனிதன் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றான். அந்தக் கோளிலே என்னென்ன நடக்கின்றது என்று அறியும் ஆற்றல் வருகிறது.

அன்றைய மெய்ஞான அறிவுக்கும் இன்றைய விஞ்ஞான அறிவிற்கும் உங்களுக்கு தொடர்பு கொடுத்துச் சொல்கின்றோம். சாமிக்கு என்ன தெரியும்…? என்று விட்டு விடாதீர்கள்…!

இதை எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் கொடுத்ததை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை உங்கள் சுவாசத்திற்குள் மறுக்கும் சக்தியாக அது வர வேண்டும்… அத்தகைய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

இல்லை என்றால் அந்த விஷத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு மனிதனுடைய ரூபத்தை மாற்றும் சக்தியாக வந்துவிடும். குருநாதர் அதைத்தான் சொன்னார்.

அவர் காட்டிய வழியில் உயர்ந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்கின்றேன். பதிவானதன் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுதல் வேண்டும்

பத்தாவது நிலை பெற்றது… வசிஷ்டர்…! அதாவது கவர்ந்து கொண்ட உணர்வுகள். நமக்குள் அது பதிவாக்கப்படும் பொழுது பிரம்ம குருவாக வருகிறது.

அதன் வழி ஞானத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது பிரம்மம் ஆகி அதனுடன் இணைந்து அருந்ததி… எதன் சக்தியின் ரூபம் பிரம்மம் ஆனதோ… அதன் மணத்தின் உணர்ச்சியாக அது இயக்கும்.

பெண்கள் இதையெல்லாம் அவசியம் கூர்ந்து… கவனித்து… அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்குள் ரெக்கார்ட் ஆகி விடுகின்றது பெண்களுக்கு அணுத் தன்மையாக மாற்றும் சக்தி அதிகம் உண்டு.

தன் கணவருக்குத் தொழிலில் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று அந்த உணர்வுகள் மோதும் பொழுது என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்; சிந்தித்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்; அவர் பார்வையில் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று பெண்கள் உங்களுக்குள் இதை உருவாக்கி கணவருக்குப் பாய்ச்சினால் உங்கள் எண்ணம் நிச்சயம் அவரைக் காக்கும்.

ஏனென்றால் செல்வத்தைத் தேட என்று அவர் வெளியிலே தொழிலுக்குச் செல்லும் பொழுது எத்தனையோ எதிர்ப்புகள் வரும்… மாறுபட்ட உணர்வுகளைச் சந்திக்க நேரும்.

என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினால் அவரை தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்.

என் கணவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும்… அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும்.

அதே சமயத்தில் சம்பாதித்துக் கொடுத்தால் “என் கணவர் மாதிரி இல்லை…” என்று மெச்சுவோம். அதிலே சிறிது குறைவானால் எல்லாவற்றையும் இப்படியே விட்டுவிடுகின்றார் என்று வேதனை வரும்.

இரண்டு தடவை இப்படி ஆனால் போதும். அடுத்து… இப்படிச் செய்து கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆவது…? எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு என்ன செய்வது…? என்று சந்தேகங்கள் வந்துவிடும்.

காரணம்… உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் எழும்ப… உணர்வின் செயல்களாக அது வருகின்றது. எதைப் பதிவு செய்கின்றோமோ உயிர் கவர்கின்றது… உயிரிலே படுகின்றது… இரத்தத்தில் கலக்கின்றது தீமையின் உணர்வாக உடலுக்குள் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அவ்வாறு ஆகாது தடுப்பதற்காக வேண்டித் தான் வாழ்க்கையில் எவ்வாறு தெரிந்து வாழ வேண்டும் என்று எவ்வளவவோ சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள். நல்லதை எண்ணி எடுத்து அதன்வழி செயல்படுத்தும் போது அதுவே தெய்வமாக வந்து இயக்குகிறது.

ஆனால் இந்த வாழ்க்கையில் ஆசையின் பால் செல்லப்படும் பொழுது எத்தனையோ துயர்கள் வந்து சேருகின்றது… தன்னைக் காக்கும் சக்தியையும் இழந்து விடுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இது போன்று சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இந்த உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு குருநாதர் என்னை 20 வருடம் காடு மேடெல்லாம் அலைய வைத்து “எத்தனை துன்புறுத்தினார்…?” என்று எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சந்தர்ப்பம் நுகர்ந்த உணர்வால் கொண்டு எப்படி எல்லாம் துன்பப்படுகின்றனர்… வேதனைப்படுகின்றனர்... வேதனை வந்த பின் எத்தனை நோய்கள் அவருக்கு வருகின்றது…? அதிலிருந்து மீட்டிட என்ன செய்ய வேண்டும்…? என்று தான் காட்டினார்.

அவர் எனக்குப் போதித்ததைத் தான் உங்களுக்கும் வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து உங்களை மீட்டிடும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.