ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2023

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

சூரியன் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் அருகில் வரும் நஞ்சினை விரட்டுகின்றது. அதைப் போன்று மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமை தனக்குள் புகாதபடி அதை விலக்கிக் காட்ட வேண்டும்.

மேலே ஏழு லோகம்… கீழே ஏழு லோகம்… ஆக… கலர் ஆறு ஏழாவது ஒன்று (ஒளி). மனிதநின் அறிவு ஆறு ஏழாவது ஓன்று (தெரிந்து செயல்படும் ஒளி). இந்த ஏழு லோகங்களை வென்ற மனிதன் தான் விண் செல்ல முடியும் என்பார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் மேலே ஏழு லோகம் இருக்கிறது. மூன்று லோகத்திலும் பார்த்தேன். நஞ்சு கொண்ட… விஷங்கள் கலந்த நாகலோகத்திலும் சென்று பார்த்தேன்… காணவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

இப்படி விரிவாக்கிக் காட்டும் நிலை என்ன…?

மனிதன் அறிவு ஆறு… ஆனால் அதே சமயத்தில் விஷத்தின் தன்மை அதனின் அடுக்குகள் வேறு. அதை நாம் ஒளியாக மாற்றும் சக்தி பெற வேண்டும்.

இது எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் காட்டிய நிலைகள்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கப்படும் போது இப்பொழுது உங்களுக்குள் உமிழ் நீர் சுவை மிக்கதாக ஊறும். உங்கள் ஆகாரத்துடன் இந்த உமிழ் நீர் கலக்கின்றது.

இது சேரச் சேர சாப்பாடு அதிகமாக உட்கொள்ளும் நிலைம் உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அமுதாக… மிக சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் சேருகின்றது.

அதாவது… ஞானிகள் உணர்வு கலந்த உமிழ் நீர் உங்களுக்குள் சேர்ந்து கொண்ட பின் சாப்பிட்ட உணவைச் சத்துள்ளதாக… “அமுதாக” மாற்றுகின்றது நல்ல ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்… நல்ல அணுக்களாக உருவாக இது உதவும்.

எந்த அளவுக்கு இந்த உபதேசங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றீர்களோ… உங்களுக்குள் இது சக்தி வாய்ந்ததாக மாறிக்கொண்டே வரும்.

வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? காரத்தையும் உப்பையும் தொட்டுத் தின்றால் அது எப்படி இருக்கும்…? இப்பொழுது சொன்னவுடனே உமிழ் நீர்கள் எப்படி ஊறுகிறது.

அந்த உணர்வினை நுகர்ந்தவுடனே அந்தப் புளிப்பை இழுத்துக் கவர்கிறது அல்லவா. இது போன்றுதான் நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ நம் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து கொண்டே வரும்.

அந்தந்த ஆகாரம் சாப்பிடும் பொழுது எனக்கு அஜீரணம் ஆனது… எனக்கு நெஞ்சைக் கரித்தது…! என்றெல்லாம் நாம் சொல்வோம்.

நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்… ஒரு மனிதன் வேதனைப்படுவதை அந்த விஷமான உணர்வை நுகரப்படும் பொழுது சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணமாக்குகின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றோம்.

உங்கள் உடல் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும்… மனிதனாக உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் உணர்வை இந்த உபதேச வாயிலாக “யாம் அமுதாகப் படைத்தது… நல்ல உணவாகக் கொடுத்தது…”

உங்கள் உடலில் உள்ள அணூக்களுக்கு அமுதாகக் கிடைக்க வேண்டும் என்று என்று முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் தான் உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்..

சந்தர்ப்பம்… உங்கள் உடலில் அந்த அமுது இப்போது கிடைத்திருக்கின்றது. மீண்டும் இதைப் போல் எண்ணி எடுத்து அமுதாகக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்

வேதனை என்ற விஷத்தின் தன்மையைக் கொடுத்து விடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை அமுதாகச் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை அருள் சக்தியாகப் பெருக்கும் தகுதியை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலுக்கு பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டு பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தவும் முடியும்.

மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற முடியும்.