ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2023

நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கும் வழி – குரு எனக்குக் காட்டியது

உதாரணமாக நூறு சதவீதம் வேம்பின் சத்தும் பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்தும் மூன்று சதவீதம் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பத்தால் இரண்டறக் கலந்தால் எடை கூடி புவியில் படிந்து விடுகிறது.

அப்படிக் கலந்த சத்தில்
1.விண்ணிலிருந்து வரக்கூடிய மின்னல் தாக்கப்படும் பொழுது துடிப்படைந்து அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுக்கத் தொடங்குகிறது.
2.துடிப்பின் நிலை ஆனபின் அந்தந்தச் செடிகளில்… அந்தப் பங்கின் (100/10/3) விகிதாச்சாரப்படி அதைப் பிரித்து எடுக்கின்றது
3.கருவேப்பிலையாக மாறுகிறது

விஞ்ஞான ரீதியாகவும் இதைப் போன்று தான் அணு உலைகளில் கடலில் இருந்து எடுத்த வந்த மணலை வேக வைத்துப் பிரிக்கப்படும் பொழுது யுரேனியமாகவோ அல்லது மற்ற எத்தனையோ விதமான தனிமங்களாகவோ எடுக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பூமிக்குள் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்… குரூடு ஆயிலை (CRUDE OIL) அதைக் கொதிக்க வைத்துப் பிரிக்கின்றார்கள்.
1.முதலில் எடையற்று வேகமாகப் பிரிந்து செல்வது கேசலின் (GASOLINE) விமானங்களுக்கு அது எரிபொருளாகவும்
2.அடுத்து பெட்ரோல்; கெரசின்; டீசல் என்று இப்படி வரிசையாக எடுத்து
3.கடைசியில் எடை கூடியதாக கல் மண் மற்றவர்களுடன் கலந்து இருப்பதைத் தாராகப் பிரித்து எடுக்கின்றார்கள்.

விஞ்ஞானிகள் இயற்கையில் உருவானதைத் தனித்துத் தனித்துப் பிரிப்பதற்காக வேண்டி இப்படிப் பல வேலைகளைக் கையாளுகிறார்கள்.

இந்த வேலைகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நான் (ஞானகுரு) சென்றதும் இல்லை… அதைப் பார்த்ததும் இல்லை. ஆனால் சினிமா படம் காட்டுவது போன்று இதையெல்லாம் குருநாதர் எனக்குக் காண்பிக்கின்றார்

அதைப் பார்த்துப் பழகுவதற்காக வேண்டி சினிமா தியேட்டருக்கு என்னை அழைத்துச் செல்கிறார் குருநாதர்.

தியேட்டரில் படம் நடந்து கொண்டிருக்கும்… கதவுகள் எல்லாம் மூடி இருக்கும். வெளியில் இருந்து கொண்டே சினிமா எப்படி நடக்கிறது…? பாருடா…! என்பார் குருநாதர்.

எப்படி சாமி அதைப் பார்க்க முடியும்…? என்று கேட்டேன்.

நீ பாருடா…! என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அங்கே நடக்கின்ற காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றது… நான் பார்க்கிறேன்.

அவரும் கூட வந்து பாருடா பாருடா என்பார். அதையெல்லாம் அப்போது பார்க்கிறேன். இதைப் பார்த்த பின்னாடி என்னுடைய குறும்புத்தனம் சும்மா விட்டதா…?

குழந்தைகளை எல்லாம் அமர வைத்து எந்தெந்தச் சினிமாக் கொட்டகையில் எந்தெந்தப் படம் நடக்கிறது…? என்று கேட்டு “அதைப் பாருங்கள்” என்று அங்கேயே காண்பிக்க ஆரம்பித்தேன்.

அங்கே நடப்பது இங்கே அவர்களுக்குத் தெரிய வருகின்றது… வீட்டில் உட்கார்ந்து கொண்டே சினிமாவைப் பார்க்கின்றார்கள்

1.இயற்கையின் உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதிவின் அலைகளை… அதை எப்படிக் கவர முடிகின்றது…?
3.இதைத் தெளிவாக்குவதற்காக குருநாதர் பல பயிற்சிகளை எனக்கு இப்படிக் கொடுத்தார்.

இதை எல்லாம் சாதாரணமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் தெரிந்ததை உங்களுக்குள் பதிவாக்கப்படும்பொழுது
1.சந்தர்ப்பத்தில் அந்த மகரிஷியின் அருள் சக்தி எடுத்து “நல்லதாக வேண்டும்” என்று சொன்னால் இந்த சக்திகள் உங்கள் உடலில் ஊடுருவும்.
2.உடல் நலமடைந்த பின் “நான் சொன்னேன்… நன்றாக ஆனது…!” என்று ஒரு சந்தோஷம் வரும்

ஏனென்றால்
1.நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கித் தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.

உதாரணமாக மனித உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒருவனைச் சாடிப் பேசிப் பதிவாக்கி விட்டால்… “எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் அமெரிக்காவில் இருப்பவனைக் கூட அது இயக்குகின்றது… புரையோடச் செய்கின்றது வாகனம் ஓட்டிச் சென்றால் குறுக்காட்டித் தாக்கி அவனைச் செயலிழக்கும்படியும் செய்கிறது.

இதெல்லாம் சந்தர்ப்பம் தான்..!

அவனைப் பற்றி எண்ணும் போது இவன் நிலையும் அதே ஆகி இவனும் தவறி விழுகின்றான்… மேடு பள்ளம் தெரியாது கீழே விழுவான். அவனும் கெடுவான்… இவனும் கெடுவான். அவன் மேல் மீது இருக்கக்கூடிய உணர்வுகள் அந்தத் தவறு என்ற உணர்வு இங்கே வந்துவிடும்

அந்த உணர்வு இயக்க வருவது போல் தான்
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றேன்.
2.இது வெறும் சொல் அல்ல…! பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!