ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2023

இருளைப் போக்கும் அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது”

ஒரு நோயாளியையோ ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தாலோ உங்களால் தாங்க முடியவில்லை. நான் (ஞானகுரு) அத்தனை பேர் கஷ்டத்தையும் கேட்க வேண்டி இருக்கின்றது… எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காட்டிற்குச் சென்று தவமிருந்தோ… அல்லது மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தோ ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று செய்வார்கள்.
மந்திரங்களை ஜெபிக்கலாம்… அந்த உணர்வுகள் உடலில் பெருகும்… உடலை விட்டு ஆன்மா போகும். எங்கே…?
1.இதே மந்திரத்தை மீண்டும் எவன் ஜெபிக்கின்றானோ அங்கே அந்த உடலுக்குள் தான் செல்லும்.
2.சாகாக்கலையாக அந்த உடலில் விளையும். விளைந்த பின் அவன் பெரிய மேதை ஆகி விடுவான் ரிஷியாகக் கூட ஆகிவிடுவார்
3.எல்லாம் தெரிந்தவராகின்றார்… அவர் பிழைப்புக்குப் போக ஆரம்பிப்பார்.

என்னிடம் வந்து கஷ்டங்களை நீங்கள் சொல்கின்ற மாதிரி அய்யா… சாமி… கஷ்டமாக இருக்கின்றது என்று எல்லோரும் அவரிடம் சொல்வார்கள். அவர் அதற்குப் பக்குவம் சொல்லி… பதிலுக்கு “நான் செய்தேன்…!” என்ற புகழுக்கு ஏங்குவார்.

விஷத்தைத் தான் சேர்ப்பார்… விஷத்தின் சேமிப்புகள் அதிகமாகும் அவர் ஆசை அந்த உடலில் பெருகும்… கடைசியில் அதனால் அவர் மடிவார்.

ஆன்மா வெளி வரும். வந்த பின் சாகாக்கலையாக மீண்டும் எந்த விஷத்தின் அளவுகோல் அந்த உடலில் அதிகமானதோ அதற்குத் தக்க உயிரினங்களாகத்தான் உயிர் பிறக்கச் செய்யும் உயிர்.

இதைத் தான் குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

இப்படி
1.அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உடலுக்குப் புகழ் தேடி வாழ்கிறோம் என்றால்
2.மனிதனுடைய ஈர்ப்புக்குள் தான் மீண்டும் வர முடியும்.

ஏன்…?

புகழுக்காக ஏங்கி அதனால் பிறர் போற்றும் நிலை வரும் போது அடுத்தவர்கள் துயரங்களை எல்லாம் கேட்டால் என்ன ஆகும்…?

வீட்டிலே பெண்கள் பிள்ளைகளை எல்லாம் விட்டு விட்டுச் “சாமியாராக” வெளியே வந்து விடுவார்கள். வெளியில் மற்ற இடத்திலே நல்ல வரவேற்புகள் இருக்கும்.

ஆனால் அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகல கஷ்டங்களையும் இவரிடம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

1.நுகர்ந்த உணர்வுகள் இவர் உயிரிலே படும்.. பட்டதும் அந்த உணர்ச்சிகள் வருகின்றது
2.வேண்டாம் என்று தடுத்தால் அங்கே கோபம் வரும்.

ஏனென்றால் “சும்மா தொல்லை கொடுக்கின்றார்கள்…!” என்று அதைக் கேட்டவுடனே “சொல்ல வேண்டாம்…” என்று இவர் சொல்வார்… மனதிற்குள் இங்கே போர் ஆகி இவருக்குக் கோபம் வரும்.

ஆனாலும் இவர் இல்லை என்று சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா என்றால் விடமாட்டார்கள்.

இங்கே எத்தனை பேர் என்னிடம் (ஞானகுரு) வந்து கஷ்டம்… கஷ்டம்… நஷ்டம்… என்னால் முடியவில்லை…! என்று அதைத்தான் சொல்கின்றார்கள்
1.எனக்கு அந்த அருள் பெற வேண்டும்
2.இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது…”

நானும் பலமுறை சொல்லிப் பார்த்தாகிவிட்டது…!

அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் நான் என் செவிகளில் கேட்டு அந்த உணர்வினை நான் நுகர வேண்டும்… அவர்கள் கஷ்டத்தை என் உடலில் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய சக்தியை குருநாதர் வழியில் பெற்றிருந்தாலும் கூட
1.கஷ்டத்தைச் சொல்பவர் நிலைக்குத் தான் நான் செல்ல வேண்டி இருக்கின்றது
2.நான் சொல்வதை அவர்கள் பின்பற்றும் நிலை இல்லை என் பையன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.

என் பையன் ஞானியாக வேண்டும்; சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் அந்த அருள் சக்தி எங்களுக்கு வேண்டும்… என்னுடைய நிலத்தில் விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் நான் தொழில் செய்யும் இடங்களிலே என்னுடைய வாடிக்கையாளர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… என்னிடம் வாங்கிச் சென்ற பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்கும் சக்தி வர வேண்டும் என்று எண்ணி கேட்கின்றோமா…!
1.யாராவது ஒருவர் சொல்லுங்கள் பார்க்கலாம்
2.யாரும் நினைப்பதில்லை…!