ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2023

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.

ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.

அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.

உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”

மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.

காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.

மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.ஆட்சி நிர்வாகம் என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.