ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2023

அஞ்சனை நேயன் - ஆஞ்சநேயன்

 

ஒரு நோயாளியின் உணர்வை நாம் நுகர்ந்து
1.”அவருக்கு நோய்” என்று அறிந்த அடுத்த கணம் நமக்குள் அது வராதபடி மாற்றுவதற்குத்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து அங்கே அடைத்த பின் அந்த நோயின் உணர்வு அனாதையாகி விடுகிறது.

கூடக் கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்க நோயாளியை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று விடுகிறது.

அதாவது… செடி கொடிகளில் (வெயில் தாக்கப்படும் பொழுது) அதில் விளையும் சத்தின் மணங்களை ஆவியாக மாற்றிச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்வது போன்று இதையும் எடுத்துக் கொள்கின்றது.

நம் வீட்டிலே சமையல் செய்கின்றோம். எல்லாப் பொருளையும் சேர்த்துக் கலந்து வேக வைத்த பின் ஆவியாகப் போவது எங்கே செல்கின்றது…?
1.நீரை எடுத்தவுடன் கனமான சத்தைச் சூரியன் எடுத்துக் கொள்கின்றது
2.மேலே கொண்டு சென்று மேக மண்டலத்துடன் ஆவியாக நின்று விடுகின்றது.
3.உப்புச் சத்துக்கள் அதிலே கலந்தால் மழையாகப் பெய்கின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்றுதான் நோயாளியைப் பார்த்த பின் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய வேதனையான (நோயாளியின்) அந்த உணர்வின் ஆவியை சூரியன் எடுத்துக் கொள்கிறது… நமது ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது.

புருவ மத்தியிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி நிலை நிறுத்தப்படும் போது உடலுக்குள் போகாது தடைப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளிக்குக் கிடைக்க வேண்டும்
2.நோய் நீக்கும் சக்தி அவர் பெற வேண்டும்.. அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
3.இந்த உணர்வை எடுத்து அவருக்குள் இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை” (பெண்பால்)

சீதா என்ற சுவையை அங்கே உருவாக்குகின்றோம். நோயை எண்ணாதபடி அந்த நோயுற்றவர் நன்றாக வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் சொல்லும் பொழுது சீதாராமா.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… என் நோய் நீங்க வேண்டும் என்று அந்த நோயாளியால் எண்ண முடியவில்லை.
1.நாம் எண்ணி இவ்வாறு சொல்லப்படும் பொழுது அது இராமனின் பக்தன் “ஆஞ்சநேயன்” என்று ஆகிறது.
2.அருள் உணர்வுகளை “அவருக்குள் நேயமாக இணைத்து” தீமைகளை நீக்கி நல்லவைகளாக உருவாக்கும் தன்மை.

அது தான் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்…! உயிரிலே பட்டபின் வாயுவாக மாறுகின்றது அவர் (நோயுற்றவர்) உடல் முழுவதும் சுழன்று வருகின்றது. உடலில் எந்த இடத்தில் நோய் இருக்கின்றதோ அந்த உணர்ச்சிகள் அங்கே போய்த் தாக்குகிறது.

சுக்ரீவனின் மந்திரி ஆஞ்சநேயன்…! துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் உடலில் தீமையை நீக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுகின்றது; வேதனை என்ற நினைவை மாற்றுகின்றது; தீமையான நிலைகளுக்குள் இந்த வலுவின் தன்மை சென்று நோயை நீக்குகின்றது…!

இது எல்லாம் சூட்சுமத்தில் நடப்பதை உருவம் அமைத்து இராமாயணம் (எண்ணம்) எதன் சுவை சீதாராமனாக எண்ணங்களாக வருகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் அதுவும் சீதா… வேதனைப்படுத்தும் சுவை. அதை நாம் நுகரும் போது எண்ணமாக வருகின்றது அதுவும் சீதாராமன் தான். அந்தச் சுவையின் நிலைகள் நுகரப்படும் போது நாம் வேதனைப்படுகின்றோம்.

ஆனால் வேதனையை நீக்கி சந்தோஷத்தை ஊட்டுவது “துருவ நட்சத்திரத்தின் சக்தி… அந்த சீதா…!” நோயை நீக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது இராமனின் பக்தன் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்… சுக்ரீவனின் மந்திரி.

இராமனுக்கு சுக்ரீவன் துணை செய்கின்றான் என்று காவியம் காட்டுகின்றது. துருவ நட்சத்திரம் தான் இங்கே சுக்ரீவன். அந்த சுக்ரீவன் என்ற உணர்வைச் செயல்படுத்தும் போது எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.எல்லா இடங்களுக்கும் ஊடுருவி - இலங்கைக்குள் (நம் உடலுக்குள்) வேதனை என்று சீதா அடைபட்டு இருப்பதை மீட்டு
2.சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக மாற்றுவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் நோயாளியின் உணர்வை இந்த உடலுக்குள் (இலங்கைக்குள்) நுகர்ந்தால் சந்தோஷம் தீவுக்குள் (சிறு இடத்திலே) அடைபட்டு விடுகிறது. தீமை என்ற உணர்வுகள் சந்தோஷத்தை ஆடைய விடாதபடி இலங்கேஸ்வரன் (அரக்க உணர்வுகள்) அடைத்து வைத்திருக்கின்றான் என்று காட்டுகிறார்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் போது…
1.இராமன் சுக்ரீவன் துணை கொண்டு படைகளத்துடன் சென்று இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் போது
2.வாயுவாகப் பல நிலைகளுக்குத் தாவிச் சென்று அவன் சுவாசிக்கும் உடலுக்குள் சென்று
2.சீதாவுக்கு ஊக்கம் ஊட்டி… இராமனின் உணர்வுகளை ஊட்டி… அதே உணர்ச்சியின் உணர்வுகளை
3.சுக்ரீவன் (துருவ நட்சத்திரம்) எதைச் செய்தானோ அதன் உணர்வின் தன்மை இங்கு ஊட்டப்படும் பொழுது
4.வாயு புத்திரனாக உள்ளே சென்று வலுவான உணர்வுகளை ஊட்டி மகிழ்ச்சி உருவாக்குவதாகக் காட்டுகின்றார்கள்.