ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2023

விஞ்ஞானம் ஊன்றிய நஞ்சின் தன்மை விளைந்து அதனின் மகசூலாக விஷ வித்துக்களாக வந்துவிட்டது

1.எல்லாமே சந்தர்ப்பத்தால் நாம் நுகரக்கூடிய நிலைகளுக்குத் தக்கவாறு தான் இயங்குகின்றது.
2.யாரும் தவறு செய்யவில்லை
3.அவரவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் படும் பொழுது அது முதிர்வடையப்படும் பொழுது “விதி” என்ற நிலை அடைகின்றது.

ஒருவருக்குக் கேன்சர் என்ற நோய் வந்தால் விதிப்படி அது கடுமையான விஷம். மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அது இலகுவான விஷத்தால் இயங்கும் தன்மை பெற்றது. ஆனால் இந்தக் கேன்சர் நோய் உடலில் வந்த பின் நல்ல அணுக்கள் இயங்குவதற்குண்டான விஷத்தை எல்லாம் அது எடுத்து வளரும்… தன் இனத்தை அது பெருக்கும்.

நல்ல அணுக்களை எல்லாம் மடியச் செய்துவிடும். மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் கேன்சரால் பாதிப்படைந்து… உடலை விட்டுப் பிரியும் நிலை வருகின்றது.

இப்படிப் பிரியும் அந்த ஆன்மா நிச்சயம் பாம்பாகவோ விஷத்தை உணவாக உட்கொள்ளும் ஜெந்துக்களாகவோ தான் அடுத்து பிறக்க நேரும். ஆக விதிப்படி இன்று மனிதனாக இருந்தாலும்
1.உயிரில் விஷத்தின் தன்மை அதிகமான சேமிப்பாகும் பொழுது
2.அத்தகைய உயிரினங்களுக்குத் தான் அடுத்து செல்ல வேண்டி வரும்.

கேன்சர் வந்தவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு எல்லாமே இருக்கும் ஆனால் அந்தக் கடைசி முடிவு எண்ணங்கள் அனைத்தும் விஷம் தோய்ந்து உடலை விட்டுச் செல்லும் பொழுது பாம்பின் ஈர்ப்புக்குச் சென்று விஷத்தை உணவாக உட்கொள்ளும் அதை ஏற்றுக் கொள்ளும் உடலாக அமைத்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் இப்படி மாற்றங்கள் ஆகி விடுகிறது அது மட்டுமல்ல…
1.மனிதனால் உருவாக்கப்பட்ட கேன்சர்
2.இன்று ஏராளமானவர்களைத் தாக்குகிறது

ஏனென்றால் விஞ்ஞானக் கதிரியக்கப் பொறிகள் மற்றதுடன் தாக்கப்பட்டு அது உடலுக்குள் சென்ற பின்… எந்த உறுப்பில் இந்த அணுவின் தன்மை அதிகமாக உருவாக்கப்பட்டதோ அந்த அணு பெருக்கிய பின் அந்த உடல் உறுப்பு கெடுகின்றது.

அதன் வழி கிளைகளைப் பெருக்கி விஷத்தின் தன்மை கூடுகின்றது அது விளைந்து விடுகின்றது.

இதைப் போல் நம் பூமியிலும் கதிரியக்கப் பொறிகள் பரவித் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது தாவர இனத்தை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் இத்தகைய விஷத்தன்மைகள் அதிகமாகின்றது.

அதாவது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் அந்த உயிரினங்களும் விஷம் தோய்ந்து மடிகிறது.
1.அது எடுத்து வெளிவிடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனால் கவரப்படுகின்றது
2.மீண்டும் விஷத் தன்மைகளை இங்கே பரவச் செய்கின்றது.

இருப்பினும் இந்த விஷத்தின் தாக்குதல் அதிகமாகி நம் பூமியில் பரவப்படும் பொழுது சூரியனால் கவரப்பட்டு… காந்த அலைகள் தொடர்பு கொண்டு பூமிக்குள் பரவப்படும் பொழுது பூமி சுழற்சி அடையப்படும் பொழுது “நடு மையம் ஈர்ப்பு அதிகமாகி விடுகின்றது…!”

அந்த ஈர்ப்பின் தன்மை அதிகரித்து இதே கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்க்கின்றது. உள்ளே சேர்ந்த பின் கொதிகலனாக உருவாகின்றது.
1.கொதிகலனாக உருவாக்கப்படும் போது கல் போல் இருக்கக்கூடிய பாறைகள் எல்லாம் உருகும் தன்மை வருகின்றது…
2.கரையும் தன்மை வருகின்றது… சேறைப் போல் ஆகிறது.

இரும்பு கெட்டியாக இருப்பினும் நெருப்பை அதிகமாகக் கூட்டும் பொழுது அது கூழாக எப்படிக் கரைகின்றதோ… நம் பூமிக்குள்ளும் கரையும் தன்மை அதிகரித்து… நல்ல பொருள்களைப் பாழாக்கி… “விஷத்தின் தன்மை தோய்ந்ததாகிறது...”

பூமிக்குள் வெடிப்பாகும் போது அந்த விஷத்தின் தன்மையை மீண்டும் வெளிப்படுத்தி
1.தாவர இனங்கள் ஏற்கனவே மண்ணில் உருவான சத்தை எடுத்தாலும்
2.பூமிக்குள் கலவையாகி வெளிப்பட்ட அந்தக் கதிரியக்கங்கள் தாவர இனங்களில் சரியான கரு உருவாகாதபடி…
3.அந்த வெள்ளாமை வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.

இப்படி விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் எல்லா வகையிலும் பெருகிக் கொண்டே செல்கிறது.