ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2023

அகஸ்தியன் புலனை (எலக்ட்ரானிக்) உங்களுக்குள் செருகேற்றுகிறோம்

1.ஒவ்வொரு நாளும் உபதேச வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
2.ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இணைத்துக் கொடுக்கப்படும் பொழுது இதுவே தியானமாகிறது.

அதன் வழி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெரிந்து செயல்படும் அருள் ஞான சக்தி கிடைக்கும்.

ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்குவதற்கு விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற அமைப்பை அதனுடன் இணைத்து வைக்கின்றார்கள்.

இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சமயம்… ஒன்று அழுத்தம் அதிகமாகி விட்டால் உடனே மோதி அதை மாற்றி அமைத்து இயந்திரத்தைச் சீராக்குகின்றது.

அதே போன்று தான் எலக்ட்ரானிக் என்ற ஞானிகள் உணர்வின் பவரைச் உங்களுக்குள் செருகேற்றுகின்றோம்.
1.எதிர் நிலையான உணர்வு தாக்கப்படும் பொழுது உடனே அதை விலக்கி
2.உங்களைச் சிந்தித்து செயல்படுத்தும் தன்மைக்கு அது இயக்கிக் காட்டும்…!

விஞ்ஞானிகள் இன்று நிரூபிக்கின்றார்கள். கெமிக்கல் கலந்ததில் ஒரு காந்தப்புலன் அறிவை இணைத்து அதனுடைய சுருதிகளைத் தட்டி எழுப்பப்படும் (KEY BOARD) பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

அதே போன்று மனிதனுக்குள்ளும் எலக்ட்ரானிக்…! ஒவ்வொரு புலனறிவுக்குள்ளும் எலக்ட்ரானிக் என்ற இந்த உணர்வின் அறிவாகும் பொழுது
1.அவன் எண்ணிய உணர்வு அதிர்வாகி இவன் எண்ணியபடி கண்களால் பார்க்கின்றான்.
2.ஒரு உருவத்தின் தன்மை “இன்னது இப்படித்தான் இருக்கும்…” என்ற நிலையை எலக்ட்ரானிக்… எண்ணங்களை எண்ணும் பொழுது
3.அதற்குத்தக்க ஆந்த உருவத்தையே கம்ப்யூட்டர் போட்டுக் காட்டுகின்றது
4.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று அதிர்வாக்கும் போது அதிலே பூசிய “கெமிக்கல்” அதைக் காட்டுகின்றது.

உண்மையின் உணர்வின் தன்மை அளவுகோலின்படி இவன் எடுக்கப்படும் பொழுது “மனிதனுடைய சிந்திக்கும் சக்தி”
1.எலக்ட்ரான் என்ற முறைப்படி அவன் எண்ணும் கூர்மை இதைக் கவர்ந்து
2.தட்டெழுத்தால் அடிக்கச் செய்த பின் (KEY BOARD) ஆணைகளாக அதற்குள் பதிந்து சில தத்துவங்களைக் கொண்டு வருகின்றது.
3.கம்ப்யூட்டருக்குள் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் இயக்கம்… அதிலே பதிவான கெமிக்கல் தான்.

இதைப் போன்று தான்
1.பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட சத்துக்கள் “ஊழ்வினையாக…” எலும்புகளுக்குள் (இந்த கெமிக்கல்) உண்டு
2.ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்
3.பதிவான உணர்வின் தன்மைகளை மீண்டும் எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் இயக்கமாக நாம் இயங்கி வருகின்றோம்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் புலஸ்தியன் வம்சத்தில் வந்த மெய் ஞானி அகஸ்தியன்… “அவன் கண்ட புலனின் இயக்கத்தை” (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்)… அவன் அருள் பெற்று நாமும் அதை அறிவோம்.
1.அகஸ்தியனுடைய அருள் சக்திகளைப் பெறுவோம்
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.
3.அகண்ட அண்டத்தையும் அறியும் பேராற்றல் பெறுவோம்
4.உலகைக் காத்திடும் மெய் ஞானியாக வாழ்ந்து வளர்வோம்.

நம்மால் நிச்சயம் முடியும்…!