ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2023

பிரம்மமுகூர்த்த வழிபாடு மந்திரத்துடன் சென்று விட்டது...

உதாரணமாக வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு சண்டை ஆகிவிட்டது என்றால் என்ன நடக்கிறது…?

நான் ஒன்றுமே செய்யவில்லை… “எதைச் செய்தாலும் கணவர் கோபப்படுகிறாரே…” நான் சும்மா தான் இருக்கின்றேன் என்று மனைவி சொல்கிறது

எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகிறேன் என்று இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நான் என்ன தான் செய்வது என்று கணவர் சொல்வார். இப்படிச் சுவாசிப்பார்

ஆலயத்தில் காளிக்கு முன்னாடி புலியை போட்டுக் காண்பித்து இருக்கின்றார்கள். எதற்காக…?

கோபமான உணர்வை மனைவி முதலில் சுவாசிக்கப்படும் பொழுது கோபம் வந்துவிடுகிறது. அப்போது சும்மா இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே…! என்று திருப்பிச் சொன்னவுடன் கோபம் வருகிறது… கணவருக்கு…!

அப்போது என்ன நடக்கிறது…?

1.நமக்கு முன் எது இருக்கின்றதோ அது தான் இயக்குகின்றது… காளியாகி விடுகின்றோம்.
2.உடலான சிவம் ருத்ர தாண்டவம் ஆகிறது
3.இரு நான் உன்னை என்ன செய்கிறேன் பார்… உன்னை அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று வருகின்றது.

அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி இப்பபடிப்பட்ட இயக்கங்கள் வருகின்றது. அதற்குத்தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் ஒரு போக்கிரியைப் பார்த்தால் நமக்கு உடனே பயம் வருகின்றது அவன் எத்தனை திட்டினாலும் என்ன செய்தாலும் பேசினாலும் நம்மை ஏதாவது செய்து விடுவான் என்று பயப்படுகின்றோம்.

போக்கிரி அவன் அடித்து விடுவான் என்று தெரிந்த பின் நாம் அவனிடம் திருப்பி ஏதாவது சொல்கிறோமா… இல்லை. பயந்து ஒடுங்கி விடுகின்றோம்… கூடுமான வரை விலகிச் சென்று விடுகின்றோம்…! அவன் போக்கிரிப்பயல் நம்மை அடித்து விடுவான் என்று.

இங்கே வீட்டில்
1.நாம் கோபமாகப் பேசுகின்றோமே… வீட்டுக்காரர் பதிலுக்கு நம்மைத் திட்டுவார் என்ற எண்ணம் மனைவிக்கு இல்லை.
2.கோபித்துப் பேசுகின்றோமே… மனைவி பயந்து எதையாவது செய்து விடுமோ… எங்கேயாவது போய்விட்டால் என்ன செய்வது…? என்று
3அதற்கு உண்டான வழியைக் கணவனும் சொல்வதில்லை.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் குணங்கள் உடலுக்குள் மறைந்து எப்படிச் செயல்படுகிறது…? என்று இதையெல்லாம் காட்டுவதற்குத் தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் கோபம் அதிகமாக ஆன பின் கணவனுக்கு இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது. வீட்டிலே கணவன் மனைவி சண்டையாகி இரத்தக் கொதிப்பான பின் அதைப் போக்குவதற்காகக் காளிக்கு நான் பூக்குழி இறங்கி “நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறேன்…” என்று வேண்டிக் கொள்கின்றார்கள்.

ஆனால் அக்கினி குண்டம் இறங்கினாலும் அது நிவர்த்தி ஆகின்றதா… அதுவும் இல்லை. பற்றாக்குறைக்கு சாந்தமாக இருக்கக்கூடிய ஒரு ஆட்டையும் அதற்குப் பலி கொடுத்து… அதைச் சமைத்துப் படையல் செய்து நாமும் சாப்பிடுகின்றோம்.

இது எல்லாம் என்ன செய்கிறது…? கோபம் என்ற உணர்வுகள் வளர்ந்த பின்பு அது நம் நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது.

கோபமான உணர்வைச் சுவாசித்தவுடனே உயிரிலே அபிஷேகம் ஆகி இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்று இரத்தக் கொதிப்பாகிறது… கை கால் அங்கங்களை எல்லாம் சுருக்கி விடுகின்றது.

சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். “அப்பாவுக்கு உணவு கொடுத்து வா…” என்று குழந்தையிடம் கொடுத்து அனுப்பும் போது சிறிது நேரம் ஆகி விட்டால் போதும்.

நான் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… எனக்குச் சாப்பாட்டை நேரத்தில் கொண்டு வருவதற்கு முடியவில்லையா…? என்று கோபம் அதிகமாக வரும். உணவை உட்கொள்வதற்கு முன் பயங்கரமான கோபம் வரும்.

புலி ஆட்டை அடித்து உட்கொண்டாலும் உர்ர்ர்…உர்ர்ர்… என்று உறுமிக் கொண்டு தான் சாப்பிடும். அதைப் போல் புலிக்கு உண்டான குணங்கள் எல்லாம் இங்கே வந்துவிடும்.
1.கோபத்தின் உணர்வு உச்சகட்டம் அடைந்த பின் இப்படித்தான் இயக்கம் ஆகின்றது
2.இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ அவருடைய உணர்வை நுகர்ந்தால் உயிரான ஈசனிடம் பட்டு இங்கே அது அபிஷேகமாகி அந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது நமக்கும் கோபம் வருகிறது.

நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்தது உயிரிலே பட்டபின் அரங்கநாதன்… அந்த நாதம் வருகின்றது அந்த உணர்ச்சிகள் உடலை ஆளுகின்றது ஆண்டாள்.
அத்தகைய கோப உணர்ச்சி அடுத்தவரை உதைக்கத் தான் சொல்லும்
2.அது தான் ஆட்சி புரியும்.

சூட்சமத்தில் நடக்கும் இயக்கங்களை உருவமாக்கி… மனித வாழ்க்கையில் “நாம் எப்படித் தெளிந்து நடக்க வேண்டும்…?” என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் பல உருவ அமைப்புகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அடிக்கடி நாம் கோபித்தால் நம்முடைய நல்ல குணங்களை அது கொன்றுவிடும் என்பதற்காகக் கோபம் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி அமைக்க… அக்கினி குண்டம் இறங்கச் சொல்கின்றார்கள்.

ஏன்…? அக்கினி குண்டம் எது…?

இதையெல்லாம் வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.அதிகாலையில் 4:00 மணிக்கு எழுந்து குளித்த பின்
2.அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும்படி சொல்கின்றார்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணச் செய்து பகைமைகளை அகற்றும்படி செய்கிறார்கள்

ஆனால் காலத்தால் அது எல்லாம் மாறிவிட்டது யாரும் அதை எடுப்பதில்லை.

1.காலையில் குளித்த பின் உன் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுப் பூஜை செய்து கொள்… போ…
2.நெய்வேத்தியங்கள் வைத்து மந்திரத்தைச் சொல் போ…!
3.காலையில் இப்படிச் செய்தால் உனக்கு அந்தத் தெய்வம் சக்தி கொடுக்கும் என்று இப்படித்தான் சொல்லி மாற்றிவிட்டார்கள்.

பூஜையில் மந்திரத்தைச் சொல்லும் பழக்கம் தான் வளர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது தொல்லைப்படுத்துபவனோ தவறு செய்தவனோ வந்தால்
1.நான் உனக்காக வேண்டி இவ்வளவு செய்கின்றேன் தாயே
2.நீ இதைப் பார்க்கின்றாயா… இல்லையா…! உனக்குக் கண் தெரிகிறதா…? என்று அந்த நேரத்தில் இதைத்தான் வளர்க்கின்றோம்
3.தவறைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆலயத்தின் பண்புகளை நாம் மதிக்கின்றோமா…?