ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2023

கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்

உலக ரீதியிலே இன்று விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு விஷக் கதிரியக்கங்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயுதங்களையும் குண்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

எதிரிகள் போர் தொடுக்க வருகின்றார்கள் என்றால் இதை வெடிக்கச் செய்து அவனை அழித்து விடுகின்றான். என்னை அழித்தான் என்றால் அவனும் அழிந்து விடுவான் என்று ஒவ்வொரு நாட்டிலும் முகப்புகளில் இப்படி வைத்துள்ளார்கள். நம் நாட்டிலும் கூட உண்டு.

காரணம்…
1.விஷமான குண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டால் இங்கே வந்து அவனும் ஆட்சி புரிய முடியாது என்று (எல்லாம் சூனியமாகும்)
2.இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் கடைசி முதிர்ந்த நிலைகள் கொண்டு பிரபஞ்சத்தையே அழித்திடும் நிலைக்கு வந்து விட்டனர்.
3.நிச்சயம் இந்த உலகம் அசுர உணர்வுகளுக்குள் சிக்கும்… மனிதன் அசுரனாக மாறுகின்றான்… அரக்கனாக மாறுகின்றான்…!

பாம்பினங்கள் தன் இனத்தையே உணவாக எப்படி உட்கொள்கிறதோ அதே போல் மனிதனுக்கு மனிதன் விஷம் கொண்ட உணர்வுகளாக தன் இனத்தையே உட்கொள்ளும் நிலை வந்துவிட்ட்து.

ஆடு மாடுகளைக் கொன்று தின்றான். இப்பொழுது மனிதனையே கொன்று தின்றால் நல்லது என்று நிலைக்கு வந்து விட்டார்கள். நீக்ரோ நாடுகள் அனைத்திலுமே மனிதப் பிரேதத்தை புதைத்தால் அது நல்ல சரீரமாக இருந்தால் தோண்டி எடுத்து சமைத்து உணவாக உட்கொண்டு கொண்டிருக்கின்றார்கள்.

மண்ணுக்குத் தான் போகின்றது நான் சாப்பிட்டால் என்ன…? என்று இப்படி நியாயத்தை கற்பித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

நம் பூமியின் ஆரம்ப நிலை வளர்ச்சியில் அதனுடைய உருவம் நீள வடிவில் பாறைகளாக கூடி வளரப்படும் பொழுது கவிழ்ந்து விடும் சூழ்நிலை வந்தது…!

ஒரு பக்கம் எடை கூடினால் திசை மாறும். அப்படிப்பட்ட திசை மாற்றங்கள் நம் பூமியில் ஏராளம் நடந்துள்ளது. பண்டைய கால நிலைகளில் கடல்களிலும் திசை மாறிய நிலைகள் உண்டு.

அப்படிக் கடல் மாற்றமடையும் போதுதான்… அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தரை வாழ் நிலைகளுக்கு வந்தது. பல பல உயிரினங்களாக மிருகங்களாக இங்கே உருப்பெற்றது.

அதே சமயத்தில் கடலுக்குள் மறைந்த நிலைகள் அங்கே பல நிலங்களும் உண்டு. பூமியில் பல காலங்களில் திசை மாறியது உண்டு.
1.இப்போது. இன்னொரு திசை மாறும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
2.சர்வத்தையும் கூழாக மாற்றும் தன்மை வந்து கொண்டுள்ளது.
3.இந்தப் பிரபஞ்சம் பூராவுமே சிதைந்து போகும் நிலை வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலத்தின் விஷத்தின் தன்மைகளை எடுத்துக் கொடுத்ததால் தான் நம் பிரபஞ்சமே உருவாகும் நிலைக்கு முதலில் வந்தது.

இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் நம் சூரியனைப் போன்று தனித் தனிப் பிரபஞ்சமாக உருவாக்கும் நிலையாக உருமாறிக் கொண்டுள்ளது.

அப்போது சூரியனுக்கு உணவில்லை என்கிற போது சூரியனும் பூமியும் கூழாகி விட்டால் சிதைந்துவிடும்..!

இதற்கு முன்… ஒரு சமயம் வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்த ஒரு சிதைந்த கோள் நம் பிரபஞ்சத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருந்தேன் (ஞானகுரு).

ஆனால் பிரபஞ்சத்திற்குள் சுழன்ற நிலைகளில் இருக்கும் போது முட்டை வடிவில் இருக்கும்… சிதைவதில்லை. ஆனால் இன்னொரு மண்டலத்திற்குள் வரப்படும் பொழுது அமிலமாக வருகின்றது.

நாலைந்து துணுக்குகளாக வருகின்றது. நம் பூமி மீது நேரடியாக வந்து தாக்கி இருந்தால் பூமியே சிதைந்து இருக்கும்.

40 வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னோம் பின்னாடி விஞ்ஞானிகளும் அதைத் தெரியப்படுத்தினார்கள்.
1.அந்த உடைந்த பாகங்கள் வியாழன் கோளில் விழுந்து அமிழ்ந்து விட்டது.
2.அது போல் நம் பிரபஞ்சமும் மாறும் நேரம் வந்துவிட்டது.

பூமியோ மற்ற மண்டலங்களாக எதுவாக இருந்தாலும் எல்லாமே ஆவியால் உருவானது தான். ஆனால் கடைசியில் கரைந்து கூழாக மாறும் பொழுது சூரியனின் சுழற்சி வேகம் கூடி… அதை ஆவியாக மாற்றுகின்றது.

தன் ஈர்ப்பில் உள்ள அனைத்தையும் ஆவியாக மாற்றச் செய்த பின்… 27 நட்சத்திரங்கள் தனித் தனி பிரபஞ்சமாக மாறுகிறது அல்லவா… அதற்கு இதை எல்லாம் உணவாகக் கொடுத்துவிடும்.

சூரியனும் பிரபஞ்சத்தின் நிலைகள் அந்தச் சுழலில் சிக்கி ஆவியாக மாறிவிடும். விஞ்ஞானிகள் ஒரு காலம் இதை நிச்சயம் சொல்வார்கள்.

1.இது எல்லாம் இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகின்றது…? மாறப் போகின்றது…? என்று குருநாதர் தெளிவாக எனக்குக் கூறியிருந்தார்
2.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாம் இதைச் சொல்வதுண்டு… கேட்போர் யாரும் இல்லை…!
3.ஆக கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் நஞ்சை வென்றான்… உணர்வை ஒளியாக மாற்றினான்…!

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தார்கள்… இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக உருவாக்கினார்கள்.

துருவத்தின் எல்லையை நோக்கி அதன் வழி வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றினார்கள்… அந்த எல்லையிலேயே துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அந்த அகஸ்தியன் உணர்வை எந்நாட்டவரும் பெறலாம் என்று அக்காலங்களில் இதைச் சொல்லி உள்ளார்கள்.
1.காரணம் திசை மாறிய நம் பூமியை அன்று சமப்படுத்தியவன் அகஸ்தியன் தான்.
2.அவன் வழி சென்றால் வரும் மாற்றத்திலிருந்து நாம் தப்பலாம்…!