ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2023

அக்கினிக்கட்டு

மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்குவோர் குடும்பத்தில் அதிகமான கஷ்டங்கள் வந்தால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… உனக்காக நான் அக்கினிகுண்டம் இறங்குகின்றேன்…” என்று செல்கின்றார்கள்.

1.ஆனால் அதற்கெல்லாம் சில மந்திர ஒலிகள் உண்டு…!
2.அதாவது “மாரியம்மன்…” என்று அதர்வண வேதத்தில் காட்டிய மந்திர ஒலிகளை ஒரு மனித உடலில் சேர்த்த பின்
3.அவன் இறந்து விட்டால் அந்த அக்கினியைத் தாங்கும் உணர்வின் தன்மை வருகின்றது.
4.அதை எண்ணி எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபித்து அக்கினியில் இறங்கினால் அந்தத் தீ ஒன்றும் செய்யாது

அதர்வண வேதத்தில் இந்த உணர்வின் தன்மை குவிக்கப்படும் பொழுது “அக்கினிக்கட்டு” என்று சொல்வார்கள்.

மனித உடலில் ஜீவ அணுக்களுக்குள் சேர்த்துப் பரம்பரையாக இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதைச் செயல்படுத்தும் கால கட்டத்தில் அந்தக் கோவில் பூசாரி இந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருப்பார்… அவர் சாவகாசமாக அக்னியில் இறங்கி வருவார்.

ஆனால் மற்றவர்கள் வீரிய எண்ணத்தோடு போனாலும் உஷ்…தஷ்…புஷ்.. என்று இறங்கி வேகமாக ஓடி விடுவார்கள்.

பூசாரியை மாரியம்மன் காப்பாற்றுவதால் அவர் தாராளமாகப் போகின்றார். எந்த மாரியம்மன்…?

மாரியம்மனை எண்ணி மந்திரத்தை ஜெபித்து இந்த உடலை விட்டு சென்றவர்களின் ஆன்மாக்கள் அதே மந்திரத்தை ஜெபிக்கப்படும் பொழுது இங்கே வந்துவிடும்.
1.ஜெபித்தவர் உடலில் அந்த ஆன்மாக்கள் குடிகொள்ளும்
2.ஆவிகள் தான் அங்கே செயல்படுகின்றது

உதாரணமாக… தெய்வத்தையே வணங்கி வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் (தெய்வத்தை எண்ணி வேதனைப்பட்டு) “மருந்தைக் குடித்து இறந்து விடுகிறார்…” எனறு வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த மந்திரத்தை இந்த ஆன்மா ஜெபித்ததோ அதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபிக்கப்படும் பொழுது இங்கே இவரின் ஈர்ப்புக்குள் வந்துவிடும்.

அல்லது அதே எண்ணத்தை கொண்டு இறந்தபின் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகி திடீரென்று எதிர்பாராத நிலைகள் இறந்து விட்டால் பழகிய அந்த நண்பர் உடலுக்குள் சென்று விடும்.

நேற்றெல்லாம் என்னிடம் பழகினாரே… இப்போது இறந்து விட்டாரே…! என்று எண்ணும் போது இந்த ஆவி இங்கு வந்துவிடும். அது வந்த உடனே அது அதனுடைய நிலைகளை எல்லாம் இங்கே காட்டும்.
1.எத்தனை வேதனை இருந்தாலும் அந்த ஆன்மா தாங்கிக் கொள்ளும்
2.எத்தனை இம்சை செய்தாலும் இவர்களுக்குத் தெரியாது.

சில பேய் பிடித்தவர்களைப் பாருங்கள். “என்ன தான் அடியுங்கள்… அது அடி வாங்கிக் கொண்டே இருக்கும்…!” அது நோகுமா என்றால் நோகாது…! அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்கின்றது. ஆவி விலகிய பிற்பாடு தசைகளில் அடிபட்டதல்லவா… இரண்டு நாளைக்கு அது எழுந்திருக்காது.

இது எல்லாம் ஆவியின் செயல்கள் தான்…!

காளியம்மன் மாரியம்மன் என்று ஜெபத்தால் எடுத்துக் கொண்ட ஆன்மாக்கள்… இன்ன மந்திரத்தைச் சொன்னால் காளி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லும்போது அதன் உணர்வை விளைய வைத்த வழி தான் வந்துள்ளார்களே தவிர “இறந்தபின் இன்னொரு ஆவி நிலைக்குத்தான் செல்கின்றோம்.

1.இது சாகாக்கலைக்குத் தான் கொண்டு செல்லும்… மீண்டும் பிறவிக்குத் தான் வரவேண்டும்
2.அடுத்த உடலுக்குள் சென்று அதையும் காயப்படுத்தி அந்த உடலை விட்டு வந்தபின்
3.விஷம் கொண்ட உடல்களுக்குள் தான் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.