ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2021

ஆத்ம சுத்தியின் அதிசயமான ஆற்றல்கள்

 

ஜோசியரிடம் சென்று கேட்கின்றோம்.. மந்திரக்காரனிடம் கேட்கின்றோம்... என்னிடமும் (ஞானகுரு) வந்து கேட்கிறீர்கள் அல்லவா.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி
1.ஞானிகள் கொடுத்த வாக்கினைப் பயன்படுத்திப் பாருங்கள்.
2.கணவன் மனைவி உங்கள் இருவருடைய சக்திகளையும் ஒன்று சேர்க்கும்.

ஒரு உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றுகின்றது. சந்தர்ப்பத்தில் புவியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின் என்ன செய்கிறது...?

உதாரணமாக நம் புவிக்குள் இருக்கும் மரங்கள் வெளிப்படுத்தும் சத்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கிறது. அது எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

1.ஆனால் விண்ணிலிருந்து வந்த உயிர் இதிலே மோதி
2.இரண்டும் சேர்ந்து உறைந்த பின் கவர்ந்த சத்தை உயிர் உடலாக மாற்றுகின்றது
3.சக்தி சிவம் ஆகின்றது.

ஆண் பெண் இருவரும் சேரும் போது உருவாகுவதுதான் குழந்தைகள். அதைப் போல் இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்த்து உயர்ந்த எண்ணங்களை எண்ணி ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வைப் பரப்பிக் கொண்டால் அது வலுக் கொண்டதாக மாறுகிறது.

1.அப்படி வலுக் கொண்டதாக மாற்றி விட்டால் பிறிதொருவரின் எண்ணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை.
2.அவசியம் இதைச் செய்து பாருங்கள்.
3.இது இருவருக்குமே ஒரு பாதுகாப்புக் கவசமாக ஆகின்றது.

உதாரணமாக ஒரு இராக்கெட்டை ரஷ்யாவில் இருந்து விடுகின்றார்கள். அமெரிக்காவிலும் இராக்கெட்டை விடுகின்றார்கள்
1.ரஷ்யாவில் இராக்கெட் வெளியிலே கிளம்பிய உடனே
2.சூரியனுடைய காந்தப் புலனுக்குள் உராய்ந்த உடனே அமெரிக்காவில் இருப்பது இதை அறிந்து கொள்கின்றது
3.அது அந்த வேக அலையினை எடுத்துக் கொள்கிறது.

அதைப் போல கணவனும் மனைவியும் யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை எடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயர்ந்த சக்தியினைப் பரப்பிக் கொண்டீர்கள் என்றால் பாதுகாப்பாக வரும்.

1.ஒரு சங்கடமான நிலையோ அல்லது
2.நீங்கள் போகும் பாதையில் ஒன்றைக் குறி வைத்துச் செல்லும் பொழுது ஏதாவது விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தது என்றால்
3.கணவன் மனைவி உங்கள் எண்ணத்தை ஊடுருவி அங்கே பாய்ச்சும்போது இது உராய்ந்தவுடனே
4.அங்கே எதிர்ப்பு சக்தி இருந்தது என்றால் உடனே டக்… என்று கம்ப்யூட்டர் மாதிரி உங்களை அங்கே போக விடாதபடி தடுத்துவிடும்

ரேடாரை (RADAR) வைத்தவுடன் எப்படி அதிலே மற்ற நிலைகள் தெரிகின்றதோ அதே மாதிரித் தெரிய வரும். விபத்துக்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இது உதவுகிறது.

கணவன் மனைவி இரண்டு பேரும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு காரியத்திற்குச் சென்றீர்கள் என்றால்
1.உங்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாராவது வந்திருந்தாலும்…
2.இந்த உணர்வு அங்கே பட்டு அந்த நிமிஷத்தில் எண்ணத்தை மாற்றி விட்டு
3.உங்கள் பாதையில் நீங்கள் சீராகச் சென்று கொண்டிருப்பீர்கள்…
4.அவர்கள் எண்ணம் மாறிப் போகும்... அவர்களை ஏதாவது ஒரு பக்கம் திசை திருப்பும்
5.அல்லது உங்களை வேறு பக்கம் அழைத்துச் சென்றுவிடும்

இதை எல்லாம் உங்கள் அனுபவத்திலே பார்க்கலாம்.