ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2019

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்...” எப்படி இருக்கும்...? நடந்த நிகழ்ச்சி


நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்...? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது...?

ஐய்யய்யோ...! என்னை வெட்டிப் போட்டார்களே... வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே...! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்...
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்...!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது... என்ன செய்வது...? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்... என்று சொல்லி...!

இது என்ன...? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா... பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது...? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது...! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது...? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி...
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்...?  
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது...?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது...?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.