ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2016

மின்சாரம் பாய்வது போன்று உங்கள் உடலுக்குள் அருள் ஒளிகள் பாய்ந்து நோய்கள் நீங்கும்

அம்மா அப்பா அருளால், குருவின் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷிகளின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷிகளின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து
எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற்று
சர்வ நோய்களும் சர்வ தோஷங்களும் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடலிலுள்ள இடுப்பு வலியோ, கை கால் வலியோ தலை வலியோ அல்லது வயிற்று வலியோ, இருதய வலியோ கிட்னியில் கோளாறோ மூல நோயோ இதெல்லாம் இருந்தால் ஏங்கித் தியானித்து எங்கள் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று தியானியுங்கள்.

உங்கள் உடலில் சர்வ நோய்களும் நீங்கி
எல்லோரும் இந்த நிலை பெறவேண்டும்
என்று எண்ணியபின் இந்த உணர்வை ஏங்குங்கள்.

நீங்கள் நோயினை நீக்கிடும் அரும் பெரும் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலுக்குள் இப்பொழுது கரண்ட் (மின்சாரம்) பாய்கின்ற மாதிரி இருக்கும்.

உங்கள் உடலில் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ, ஆஸ்மா நோயோ மூல நோயோ, இருதய நோயோ இதைப் போன்று இருந்தால்
அதில் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து
அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.

மின்சாரம் பாய்வது போலப் பாயும்.
உங்கள் உடலிலுள்ள வலிகள் குறையும்.
தலை வலியோ, இடுப்பு வலியோ எந்த வலி இருந்தாலும்
அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

கேன்சர், டி.பி. எல்லாமே இப்பொழுது உங்கள் உடலிலுள்ள சர்வ நோய்களும் குறையத் தொடங்கும்.

“அது களைந்து” கீழே இறங்கும் சக்தியை நீங்கள் உணரலாம்.