ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2016

தீமைகளிலிருந்து விலகிச் செல்லவும் தீமைகளில் சிக்காது நம்மைக் காக்கும் சக்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தான்

ஒருவர் மகிழ்ந்த நிலைகளில் நம்முடன் பழகி மகிழ்ச்சியூட்டும் நிலைகளை நமக்குச் செய்யும் போது நாம் நல்லவராக அவரைக் கருதுகின்றோம்.

ஆனால், திரை மறைவிலே பொருள்களை அபகரிக்கும் நிலையில் செயல்பட்டு நம்மை ஏமாற்றும் நிலைகளைச் செய்து ஏமாற்றிச் சென்றுவிட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இரண்டறக் கலந்துவிடுகின்றது.

அடுத்து நாம் நம்பிக்கையுடன் செயல்படும் நிலைகளை இழக்கச் செய்துவிடுகின்றது.

எவரிடம் பேசினாலும் “இவன் நம்மை ஏமாற்றிவிடுவானா...,?” என்று சந்தேக உணர்வுடன் பேசும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

அந்தச் சந்தர்ப்பம் ஏமாற்றாதவன் மேலும் நாம் வெறுப்பு கொண்டு நாமும் ஏமாறும் நிலையாக நம் வாழ்க்கையில் சில செயல்கள் செயல்படுத்திவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடும் நிலையாக மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகரும் போது
ஒருவர் நம்மை ஏமாற்றும் நிலையோ எதுவாக இருந்தாலும்
அதை நாம் புரிந்து செயல்படும் தன்மையும் - வெளிப்படுத்தாது
தான் விலகிச் செல்லும் நிலைகள் வந்துவிடும்.

ஒருவன் தீமைகள் செய்கின்றான் என்று தெரியாத நிலைகள் இருந்தாலும்
அது அச்சுறும் நிலைகளாக ஏற்பட்டால்
அதனின்று அகன்று செல்லும் நிலைகளே வராது.

ஆகவே, அத்தகையை அச்சுறும் நிலைகளில் நாம் சிக்காது தப்பிக்க கூட்டுத் தியானங்களில் கலந்து கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை முறைப்படி தியானித்து அதைச் சுவாசித்தோம் என்றால் அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் பிரித்துக் காட்டும்.

ஏனென்றால், அந்த அச்சுறுத்தும் உணர்வுகளைக் கண்டுணர்ந்தபின் நமக்குள் பய உணர்வுகள் தோன்றி அவன் நம்மைத் தாக்கிவிடுவான் என்று காட்டுகின்றது.

ஆனால், அந்த மகரிஷிகளின் உணர்வலைகள்
அதே உணர்வைப் பிரித்துக் காட்டி
அதனின்று நம் எண்ண வலுக்கொண்டு அகன்று செல்லவும்
போகாது தடுக்கவும் செயல்படுத்தும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு விண்ணிலே இராக்கெட்டை ஏவப்படும் பொழுது அதிலே பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டு எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்கப்படும் போது அதை இங்கேயிருந்து அலைகளை ஒலி பரப்பி அதன் திசையை மாற்றி அமைக்கின்றார்கள்.

இதைப் போலத்தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெறவேண்டும் என்ற ஏகோபித்த நிலைகள் கொண்டு நம் எண்ணத்தால் கவரும் போது
நினைவலைகள் நமக்குள் மாற்றி
தீமையான நிலைகளிலிருந்து நம்மை ஒதுங்கிச் செலுத்த இது உதவும்.

ஒரு தீமையான நிலை இருக்கிறதென்றால்
அங்கே செல்லவிடாது தடுக்கும்.

எதிர்பாராது திடீர் நிலைகள் ஏற்பட்டாலும் அதிலே நாம் சிக்காது நம்மைக் காத்திடும் நிலையும் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.