ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2016

கணவன் மனைவியாக விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து ஒளியின் சரீரம் பெற்று ஒன்றி வாழும் உயிரான்மாக்கள்

உயிரியலின் மாற்றங்களில் வந்தவன் தான் அகஸ்தியன் வான இயலின் தத்துவத்தை மனிதனான பின் கண்டுணர்ந்த மெய்ஞானி அவன்.

ஏனென்றால், வானவியல் தத்துவம் புவியியலாக மாறி பூமியில் விளைந்த தாவரங்கள் அதன் இனம் குணம் சுவை இவையெல்லாம் அதனுடைய நிலைகள் கொண்டு மணங்களும் ஞானங்களும் வளர்ந்தது.

தாவர இனங்கள் வளரப்பட்டு உயிரினங்களில் மாற்றங்கள் ரூபங்கள் மாற்றப்பட்டு இவை அனைத்தையும் கடந்து இன்று மனிதனாக நாம் வந்துள்ளோம். இவைகளை அறிந்து கொண்ட ஞானி அகஸ்தியன்.

அவனுக்குள் அக்காலங்களில் இணை சேர்த்த மனைவியின் தன்மையும் அகஸ்தியனுடன் இணைந்தே வாழ்ந்தது.

இன்று இவர்கள் தனித்துப் பிரித்துக் காட்டுகின்றார்கள். இது முறையல்ல, முறையற்ற நிலைகள்.

கணவன் மனைவி இருவரும் இரு உணர்வுகளும் இணை சேர்ந்து கருவுற்று கருவின் நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலை இவர் கவர்ந்து கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இருவரின் நிலைகள் பெற்றபின் தான்
இந்த உணர்வின் சேர்க்கையில் வரப்படும் பொழுது
விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெறுகின்றார்கள்.

அப்படி விண்ணுலக ஆற்றலைப் பெறும் பொழுது அகஸ்தியனின் மனைவி இடைமறித்து மடிந்துவிடுகின்றது.

எதனின் நோக்கத்தில் கணவன் மேல் பற்று கொண்டு இந்த உணர்வின் நிலைகள் மனைவியின் ஆன்மா அகஸ்தியனின் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

உடலுக்குள் சென்றபின் அகஸ்தியனுக்கு உறு துணையாக உள் நின்றே உணர்வின் தன்மை பெறும் நிலையும் கருவின் இன நிலைகள் இணை சேர்த்தது.  

இரு கருக்களும் ஒன்றாக்கி விண்ணின் ஆற்றலை தன் அணுக்களில் மாற்றும் தன்மையை அங்கே உருபெறச் செய்தது. இது இயற்கையின் உண்மைகள்.

இதை நமது குருநாதர் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

இன்று நாம் ஜோதிடம் பார்க்கிறோம். நல்ல நேரம் இருக்கின்றதா? பொல்லாத நேரம் இருக்கின்றதா? ஏழரை நாட்டான் சனி இருக்கின்றதா?

இதிலே செவ்வாய் தோஷம் இருக்கிறது, இதிலே குளிகை இருக்கின்றான் அதனால், இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆகாது. கல்யாணம் முடித்தால் தீங்குகள் வந்துவிடும்.

செவ்வாய் தோஷம் இருந்தால் அப்பா இறந்துவிடுவார், அம்மா இறந்து போவார்கள். செவ்வாய் தோஷம் இருந்தால் இருவருக்கும் ரொம்ப நெருக்கடியாக இருக்கும் என்று சொல்வார்கள்.

ஜோதிடம் சொல்பவர்களின் எண்ணத்தைத் தனக்குள் பதிவு செய்து
இவர் கேட்டுச் செல்லும்போது பதிவான பின்
இந்த நினைவுகளே அவர்களை மாற்றுகின்றது.
                     
ஆக, மனிதன் பதிவு செய்த நிலைகள் மீண்டும் பதிவாகி நினைவாக்கப்படும் பொழுது ஒரு மனிதன் பதிவு செய்தது நமக்குள் மீண்டும் வருகின்றது.

அப்படி வரும்போது அந்த அணுவின் தன்மை நமக்குள் வளர்ந்து அந்த உணர்வின் அமிலமாக நமக்குள் மாற்றப்பட்டு இன்று ஜோதிடம் பார்ப்பவர்களும் மற்றவர்களும் தான் நம் உணர்வை மாற்றுகின்றார்கள்.

தெளிவாக இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜோதிடம் சொல்பவர்கள் சொல்லும் தீமைகள் அனைத்தும் துரித நிலைகளில் நடக்கும். நன்மைகள் அனைத்தும் விளைவது மிகவும் கடினம். ஏதோ நூறில் ஒன்றோ ஆயிரத்தில் ஒன்றோ நடக்கும். எல்லோருக்கும் நடக்காது.

அவருடைய சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர் நல்லது வரும் என்று எண்ணினாலும் இந்த உணர்வின் வலிமை சந்தர்ப்பங்கள் கூடும் போது ஆயிரத்தில் ஒருவருக்கு அந்த ஜாதகப் பிரகாரம் சில நன்மைகள் நடக்கும்.

ஒரு உணர்வின் தன்மை ஒரு உணர்வின் ஒன்றிய நிலைகள் கொண்டு
இணை சேர்த்து வாழும் நிலைகள் கொண்டு அதனின் உரு மாற்றங்களும்
உயிரியலின் தன்மைகளில் உடல் மாற்றங்களும் நினைவு மாற்றங்களும்
இதைப் போன்று மனிதனின் சிந்தனை இருந்தும் சிந்தனையற்ற நிலைகள் மாறுவதும் பல நிலைகள் மாற்றமாகின்றது.

கணவன் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு அகஸ்தியன் சென்ற பாதையில் அருள் ஞானியின் உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் என்றும் பதினாறு என்று இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

·         கணவன் மனைவி அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து
·         நளாயினி போன்று ஒன்று சேர்ந்து வாழ்ந்து
·         சாவித்திரி போன்று இணை சேர்த்த உணர்வுகள் கொண்டு
·         இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து
·         தீமைகளைத் தன்னுள் நாடாது
·         உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
·         ஆறாவது அறிவை ஏழாவது நிலையாகப் பெற்று
·         சப்தரிஷி தனக்குள் சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளாக
·         இன்றும் விண்ணுலகில் ஒளி சரீரமாக வாழ்கின்றார்கள்.

அவர்களைப் பின்பற்றி நாமும் அந்த நிலை அடைய வேண்டும் என்பதே நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் விண் செல்லும் மார்க்கம்.