ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2016

உலகை மீட்டிடும் நிலை அகஸ்தியன் உணர்வைப் பெற்ற தென்னாட்டிலே தோன்றியவருக்குத்தான் வரும்

விஞ்ஞான அறிவால் கதிரியக்கப் பொறிகள் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் பெண்கள் கருவுறும் நிலைகள் வரப்படும் பொழுது விகாரத் தன்மை கொண்ட மனிதனின் ரூபங்களாக மாற்றமாகிவிடும்.

அத்தகைய பிறவிகள் வரும் இந்த நேரத்தில் அக்காலத்தில் நம் நாட்டில் அகஸ்தியன் தோன்றியது போல இங்கே தெற்கிலே தோன்றிய உணர்வின் அணுக்கள் இந்தக் கருக்களிலே (திருமணமான கணவன் மனைவி) நீங்கள் வளர்த்திடல் வேண்டும்.

ஆகவே, துருவ தியான நேரத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அதன் துணையால் உங்கள் கருவில் இருக்கும் சிசுக்களை வளர்த்திட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்தத் தியான வழியில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று உலக ஞானம் பெறவேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்.

அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி நீ உலகைக் காத்திடும் அருள்ஞானியாக வளரவேண்டும் என்று உணவு ஊட்டும் பொழுதும், பாலூட்டும்போதும் தாலாட்டும் பொழுதும் இந்த உணர்வுகளை நாம் ஊட்ட வேண்டும்.

இப்படிச் செய்வோம் என்றால் இதன் தொடர் வரிசையில் எதிர் கால சந்ததியர் அகஸ்தியனைப் போன்று வளர்ந்து வருவார்கள்.

இன்று இந்த உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை இருந்தாலும்
உலகை மீட்டிடும் அந்த நிலை
தென்னாட்டில் தோன்றியவருக்குத்தான் வரும்.

உலகப் பேரழிவின் தன்மை விஷத் தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் அதை மாற்றிட இது உதவும்.

ஏனென்றால், மத பேதம், இன பேதம், மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றன. அதை இரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது.

இன்று மற்ற நாடுகளில் பார்க்கின்றோம்.
நம் நாட்டில் அந்த அளவிற்கு இல்லை.
இப்பொழுதுதான் தலை காட்டுகின்றது.

உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே வெடி குண்டுகளை வீசுவதும் மக்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு இரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது. உலக நாடுகளில் இது ரொம்பவும் துரிதமாக நடந்து கொண்டுள்ளது.

நீர் நிலைகளிலும் காற்று மண்டலத்திலும் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதை இரசித்து சுவாசித்துக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

நம் நாட்டிலே இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் உணர்வால்
அத்தகைய பிழைகள் வராது இங்கே தடுத்து நிற்கின்றது.

அதை மீண்டும் அவர்களின் (அகஸ்தியனின்) உணர்வே தான் பேசுகின்றதே தவிர நான் பேசுகின்றேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

ஏனென்றால், என்னால் பேசும் தகுதியோ
இந்த உணர்வைக் கவரும் தகுதியோ
அத்தகையை நிலை பெற்றவன் அல்ல நான்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இத்தகையை உணர்வின் தன்மை இந்த உலகை மீட்டிட
அந்த உணர்வுகளே இயங்குகின்றது.
அந்த உணர்வுகளே இயக்கிக் கொண்டுள்ளது.
அந்த உணர்வின் அலைகளே பரவுகின்றது.

உங்களால் எனக்கும் இலாபம் கிடைக்கின்றது.

ஏனென்றால், நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும்போது அந்த உணர்வின் தன்மை அந்தப் பேரானந்தக் காற்று மண்டலத்தை நானும் சுவாசிக்க நேரும்.

ஆகவே, நீங்கள் வளர நான் வளர முடியும்.

நான் வளர நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால்
உங்களை எல்லாம் அடிமையாக்கத்தான் முடியும்.
நான் வளர்வதற்காக உங்களை அடிமையாக்கினால்
அது அரசியல் போன்ற நிலைகள் ஆகிவிடும்.

இன்றைய அரசியலில் உலகைக் காக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அவர் வாழ பல நிலைகளைப் பேசுவார்கள். அதன் நிலைகள் கொண்டுதான் மதங்களானாலும் சரி மந்திரவாதியானாலும் சரி அதன் வழிகளில் எல்லாம் உலகைக் காக்கிறேன் என்பார்கள் – அவர் வாழ.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி
நீங்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்பதுதான்.
நீங்கள் அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்.  

இந்த உணர்வினை நான் பெற்றேன் என்றால் நீங்கள் உயர்வதைக் கண்டு நான் ஆனந்தப்பட்டால் உங்களில் விளைந்த அந்த உணர்வின் தன்மை எனக்குள் உயர்ந்ததாக மாற்றும்.

ஆனால், இங்கே விளைந்த வித்து ஒன்று தான். ஆனால், உங்களுக்குள் விளையப்படும் பொழுது அந்த ஒவ்வொன்றும் பல வித்துக்களாகின்றது. தீமைகள் அகற்றும் சக்தியாக மாறுகின்றது.

இந்தச் சக்தியின் தன்மையைக் கண்டு நான் அதிலே பேரின்ப பேரானந்த நிலையை நான் பெறுவேன். அப்பொழுதுதான் அந்தப் பேரின்ப வாழ்க்கையின் தன்மையும் என்னிலே இந்த உணர்வின் தன்மையை வளர்க்க முடியும். நீங்கள் வளரவேண்டும். அதைக் கண்டு நான் மகிழ வேண்டும்.

இதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் பார்ப்போரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.

இதனுடைய வரிசைத் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் வாழ முடியும். வளர முடியும். இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மையிலிருந்து நாம் அனைவரும் மீள முடியும்.