ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2016

மிகவும் மின்னிப் பிரகாசமாக இருக்கும் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு - பாருங்கள்

இன்று ஒருவன் கொடூரமான நிலைகளில் இரக்கமற்று மற்றொருவனைத் தாக்குக்கின்றான். அதை நாம் பார்க்க நேரிடுகின்றது
.
இந்தச் சந்தர்ப்பத்தில் பாவம் செய்பவன் அவன்.

ஆனால், அதை வேடிக்கையாக நாம் பார்க்கும்போது பயத்தால் அச்சப்படும் நிலை ஏற்பட்டு அவன் செய்யும் கொடூரமான உணர்வுகள் நமக்குள் வந்தபின் இதே உயிர் அந்த அணுக்களை மாற்றிவிடுகின்றது.

ஆகவே, அதே தீமையின் விளைவுகள் இங்கே வரப்படும் பொழுது என்ன சொல்வோம்?

நான் தவறே செய்யவில்லை.
இரக்க உணர்வுடன் ஒருவர் செய்வதைப் பார்த்தேன்.
“இப்படிச் செய்கிறாரே.., பாவம்..,” என்ற நிலைகளில்
இரக்க உணர்வுடன் தான் பார்த்தேன்.

ஆனால், “எனக்கு ஏன் ஆண்டவன் இப்படிச் சோதிக்கிறான்” என்றுதான் நீங்கள் எண்ணுவீர்கள்.

“நம்மை ஆள்பவன் உயிர்”. நாம் எதைப் பார்க்கின்றோமோ அதை அணுவாக மாற்றுகின்றது.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா என்று நமக்குள் சொல்லும் இந்த உணர்வின் துணை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வவை இப்பொழுது தெளிந்தோம்.

இந்த உபதேசத்தின் வழியாகத் தெரிந்து கொண்டோம். தெளிந்த மனதின் உணர்வை நமக்குள் செலுத்தத் தவறினால் நாம் பார்த்த நிலை எதுவோ அதுவாகிவிடுவோம்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆகவே எதனைப் பார்த்தோமோ அதனின் வலுவாகிவிட்டால்
அதனின் எண்ணமே தான் வரும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

“மாறுபட வேண்டும்” என்பதைத் தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாக்கினார்.

வான இயல், புவி இயல், உயிர் இயல் என்ற நிலையில் அந்த உயிரின் தன்மையை வான இயலின் தத்துவத்தை அந்த ஒளிக்கதிரின் தன்மையை இன்று தனக்குள் கணவனும் மனைவியும் இதைப் போன்று எடுக்கட்டும்.

எந்த நட்சத்திரத்திலிருந்தும் ஒளி மின்னல்கள் வரட்டும்.
அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கவரப்படும் பொழுது
தனக்குள் இருக்கும் தீமைகளை அது சுட்டுப் பொசுக்கும்.
ஆனால், உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலைகளும் வரும்.

ஆகவே அவர்களே மிகவும் வீரியம் அடைந்த நிலைகள் கொண்டு
பேரண்டத்தின் நிலைகளில் எங்கும் எண்ணத்தைச் செலுத்தி
இந்த 2000 சூரியக்குடும்பத்தில் விளையும் உணர்வைத் தனக்குள் கவர்ந்து
தனது பிரகாச ஒளியைச் சுடராகச் செய்வோரும் உண்டு.

இதன் வழியில் வந்தோர் அனைவரும் இதைப் போன்று உள்ளோர்
இன்று சப்தரிஷி மண்டலங்களில்
மிகவும் மின்னிப் பிராகசமாக இருக்கும்
சில உயிரான்மாக்களும் உண்டு.

சப்தரிஷி மண்டலங்களில் உற்றுப் பார்த்தால் இதைக் காண முடியும்.

சாமி பார்க்கின்றார். ஆனால், நமக்கு ஏன் சாமி காமிக்கவில்லை. நாம் எந்தக் காலம் இதைப் பார்ப்பது? என்று நீங்கள் சோர்வடைய வேண்டியதில்லை.

அதை உங்களைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன். உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

நமது குருநாதர் இதை என்னைப் பெறச் செய்வதற்காக எனக்குள் எப்படி உயிர் வழி பாய்ச்சினாரோ அதே போன்று
நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும், உணர வேண்டும்,
உங்களுக்குள் அந்த உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்
தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

இது தான் என்னுடைய தவமே. எமது அருளாசிகள்.